Friday, May 11, 2012

நீ மட்டும் ஏன் ஹெல்மெட் போட மாட்டேங்குற - அமர்

இப்ப தலையில ஹெல்மெட் மாட்டிக்கிட்டுத் தான் டூவீலர் ஓட்டணும்னு ஒரு ரூல் போட்டு, பிப்.29ம் தேதில இருந்து ஹெல்மெட் போடாம டூவீலர் ஓட்டுறவங்களை பிடிச்சு ஃபைன் போடுறாங்க.

நம்ம முனியப்பன் ஹெல்மெட் போடாம டூவீலர்ல போற ஆள். பயண தூரம் 1 கி.மீ. தான். அதுக்குப் போய் எதுக்கு ஹெல்மெட்டு. பிடிக்கிற போலீஸ் சரக (லோக்கல்) போலீசா இருந்தா முனியப்பன் டூவீலர்ல வந்தா விட்டுருவாங்க. பிடிக்கிற போலீஸ்ல இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, ஏட்டையா இல்லன்னா பிசி இப்படி முனியப்பன்கிட்ட ட்ரீட்மெண்ட் பாக்க வர்றவங்க.

டிராஃபிக் போலீஸ் டீமா வந்து பிடிப்பாங்க. அப்புறம் முனியப்பன் ஹெல்மெட் போடமாட்டார். சைட் ரோட்ல போயிடுவார். நேரா போயிரலாம். அப்புறம் அவுக கிட்ட நிக்கணும்.

இப்ப காலைல டென்னிஸ் வெளையாட அமர், அஷுவை முனியப்பன் எட்வர்ட் ஹாலுக்கு கூப்பிட்டுப் போறார். வழக்கம் போல ஹெல்மெட் போடாமத் தான். எல்லாரும் தலைல ஹெல்மெட் மாட்டிக்கிட்டு டூவீலர்ல போறாங்க. இவன் மட்டும் ஹெல்மெட் போடாம ஓட்டுறான் அப்படின்னு அமர் மனசுக்குள்ள இப்படி ஒரு சிந்தனை ஓடியிருக்கு. இன்னைக்கு முனியப்பனை நேராவே கேட்டுப்புட்டான் அமர்.

நீ மட்டும் ஏன் ஹெல்மெட் போட மாட்டேங்குறேன்னு. சின்னப் பையன் கேட்டா ... அவனுக்கு சிம்பிளா பதில் சொல்லணும். முனியப்பன் ஒரே வரில சொல்லி முடிச்சிட்டார். இப்ப ரோட்டுல விக்குற ஹெல்மெட் எல்லாம் வித்து முடிஞ்ச பிறகு யாரையும் போலீஸ் பிடிக்காது அப்படின்னு.

இப்படி ஹெல்மெட் கட்டாயம் போடுங்கறதும், அப்புறம் வேணாங்கிறதும் இன்னக்கி நேத்தா நடக்குது. எம்ஜிஆர் காலத்துல இருந்து 30 வரு­மா இந்த கேலிக்கூத்து நடக்குது.