Wednesday, September 16, 2009

குற்றாலத்தில் அஷூக்குட்டி

முனியப்பன் வருடத்திற்கு ஒரு முறை தங்கை, தங்கை கணவர், அமர், அஷூவுடன் குற்றாலம் செல்லும் வழக்கம் உள்ளவர்.

குற்றாலத்தில் குளிக்க மே 15 முதல் ஜீன் 15க்குள் போயிருவார். ஏன்னா, அப்பத்தான் கூட்டம் இருக்காது. அமர், அஷூ சந்தோஷமா குளிக்கத் தோதாயிருக்கும். டென்த், பிளஸ்டூ ரிசல்ட் வந்து, எல்லாரும் காலேஜ், ஸ்கூல் அட்மிஷன்னு பரபரப்பாயிருப்பாங்க. குற்றாலம் கூட்டமில்லாம ஃப்ரீயா இருக்கும்.

குற்றாலம் ஃப்ரீயா இருந்தா குளிக்க அருவியில தண்ணி வேணும்ல. தண்ணி நல்லா அருவில விழுகிறத கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டுத்தான் குற்றாலம்.

ஹிண்டு பேப்பர்ல சாட்டிலைட் படத்துல கேரளாவையும், கன்னியாகுமரியையும் தழுவிக்கிட்டு மேகக்கூட்டம் இருக்கணும். மதுரைல காலை 8 மணி வரைக்கும் வெயில் வரக்கூடாது. மதுரைல காத்து அடிக்கணும், அடிக்கிற காத்துல மரத்துல இருக்குற கிளையெல்லாம் டான்ஸ் ஆடணும். அப்படின்னா குற்றாலம் நல்லா இருக்கும். எதுக்கும் குற்றாலத்துல உள்ள நண்பரையும் போன் பண்ணி கன்ஃபார்ம் பண்ணிக்கிடுவார்.

குற்றாலம் போயாச்சு, குளிக்க எல்லா அருவிலயும் தண்ணி இருக்கு. மெயின் பால்ஸ், ஐந்தருவி, பழைய குற்றால அருவி, இது மூணுலயும் குளியல். ஒவ்வொரு எடத்துலயும் கொறைஞ்சது ஒண்ணுலர்ந்து ஒன்றரை மணி நேரம் குளியல். குற்றாலத்துல வெயில் சுள்ளுனு அடிச்சா மதியம் 11-3, முனியப்பன் பக்கத்துல கேரளாவுக்குள்ள பாலருவிக்குப் போயிருவார். குற்றாலத்துல இருந்து 25 கிலோ மீட்டர்ல கேரளாவுல பாலருவி.

இந்த ஜீன் 11 குற்றால போட்டோஸ்

குற்றால சிறுவர் பூங்காவில் ஊஞ்சலாடும் அஷூ அப்பா

குற்றாலம் சிறுவர் பூங்கா - சறுக்கு விளையாடும் அமர், அஷூ, அப்பா

குற்றாலம் சிறுவர் பூங்கா - சிறு குன்றில் ஏறும் அஷூ

குற்றாலம் சிறுவர் பூங்கா - பாம்புகளை அப்பாவுடன் பார்வையிடும் அஷூ

கேரளா - பாலருவி செல்லும் வழியில் ஆற்றில் விழுந்து கிடந்த மரத்தின் மேல் அஷூ

பாலருவி தேக்குமரக் காட்டில் அஷூ

அஷூ எடுத்த போட்டோக்கள்

குற்றால குரங்குகள்

குற்றால சிறுவர் பூங்கா - பாம்பு

குற்றால சிறுவர் பூங்கா

கேரளா - ஆரியங்காவுக்கு முன்னால் உள்ள வியூ பாய்ண்ட்.

பாலருவி தேக்கு மரங்களுக்கிடையில் அஷூவின் அப்பா, அம்மா.

பாலருவிக்கு முன்னால் உள்ள ரயில் ஓடும் பாலம்

பாலத்தில் போகும் ரயில்

சிறுவர்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் எந்திர வாழ்க்கையில் இருந்து சிறிது மாற்றம் தேவை. இது வாழ்க்கையை மகிழ்ச்சியாகத் தொடர மிகவும் அவசியம்.

Friday, September 4, 2009

கொடியவளே ... !

படர்வது கொடி மட்டும் அல்ல என்மேல்
படரும் நீயும் தான்
கொடியிடையாளே
கொடிபோல் சுருள்பவளே
பாரியின் தேரில் படர்ந்த முல்லைக்கும்
படர்ந்த என் தோளில் படரும் உன் தொல்லைக்கும்
பல ஒற்றுமை உண்டு

படரும் முடிவில்லாத பந்தம்
மணம் வீசும் பூங்கொடியே
சினம் நிறைந்த பூ விழியே உன்
கோபம் என்மேல் படரும்வரை மட்டும்

கோபமும் படரும் ஒரு கொடிதான்
கொடியில் இல்லாத ஒன்று
கொடியிடையாள் உன்னிடம் உண்டு
புன்னகை அதுவும்
மெல்லிய புன்னகை......