Saturday, May 26, 2012

முனியப்பனின் காதல் கவிதைகள்

ரிட்டயர் ஆகப் போற வயசாச்சு, நம்ம முனியப்பன் கிசும்பைப் பாருங்க ... கவிதை மேடை

தொறந்திருச்சு. காதல் கவிதையா

ஊத்தெடுத்து வருது. கலி காலம்டா சாமி ... கலி காலம்.

காதலுக்கு வயசில்லை சாமியோவ், மனசு தான் எளிமையா இருக்கணும்கிறார் நம்ம

முனியப்பன்.

அவர லூசு பட்டியல்ல சேத்திருவோமா .... ?



உன் நினைவுகள்

நாளெல்லாம் உன் நினைவுகள்
நினைக்கும் பொழுதும் சரி

நினைக்காத பொழுதும் சரி
அதிலும்

அதிகாலையில் உன் நினைவுகள்
அற்புதம் அபாரம்
நான் மட்டும்
உன்னை நினைத்து ஏங்க
என்னை நீ அழகாய்
ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய்



ஏன் வஞ்சிக்கிறாய் ... ?

என் நெஞ்சை
கொள்ளை கொண்டாய்
ஏன் என்று
உனக்குத் தெரியும்
இருந்தும்
பட்டும் படாமல்
இருக்கிறாய் ....

வஞ்சித்து விடாதே வஞ்சியே
வஞ்சித்தாலும் வாழ்வேன்
உன் நினைவோடு ....


கவிதை மடை

கவிதை மடையை திறந்த
களவாணி சிறுக்கியே
கவிதைகள்
காட்டாறாய்ப் பாயப் போகின்றன
கவிதைகள் உனக்காக - உன்
கன்னத்தில் விழும் உனக்காக
ஏமாற்றிப் பார்க்காதே
ஏமாற்றவும் விட மாட்டேன்

கவிதையில் உன்னை
கவிழ்த்தி விடுவேன்
கண்டிப்பாக நீ என்
கவிதை வலையில் வீழ்வாய்
கவிதையால் உன்னை
கட்டிப் போடுவேன் உறுதியாக ....


கிட்ட வா

உன் கண்ணில் ஒரு நாணம்
உன் உதட்டில் ஒரு கோணம்
உன் முகத்தில் ஒரு பாவம்
உன் கழுத்தில் ஒரு வெட்டு
தள்ளி நின்று
தவிக்க விடுகிறாய்
எட்ட நின்று
ஏங்க வைக்கிறாய்
கிட்ட வா
கட்டிக்க அல்ல
உன் அருகாமை
என் உள்ளத்திற்கு
எனக்கு சார்ஜ் ஏற்ற
என்று வரப் போகிறாய்...?


உன் பதில் என்ன ...?

சொல்ல வேண்டியதை
சொல்லியாச்சு
உன் மனமறிந்துதான்
கவிதை மழை
உன் பதில்
என் வாழ்வை வளமாக்கிடும்
நல்ல பதில் வரும் வரை
நான் விடுவதாயில்லை
கவிதை மழை பொழிய
காற்றாய் கரையும் உன் மனசு


தூக்கமில்லை உன்னால்

இரவெல்லாம் உன் நினைப்பு
இரவினில் தூக்கமில்லை
உருண்டு புரண்டாலும்
உருள உருள உன் நினைப்புத் தான்

கண் அயரும் போது
காலை 4 மணி
கண் முழிக்கும் போது
காலை 5 மணி
காரணம் என்ன ?
கண்டுபிடிக்காமல் விடுவதா
யோசிக்க யோசிக்கப் புரிந்தது
இராத் தூக்கம் தொலைந்தது
இரவு நேரத்து கொசுக்கடி


என் தேவை

என் கண்ணில் தெரியும்
உன் முகம்
என் நெஞ்சில் தெரியும்
உன் இதயம்
உனக்குத் தெரியாதா ...?
உண்மையான என் அன்பு
தெரிந்தும்
தெரியாதது போல்
புரிந்தும்
புரியாதது போல்
நீ நடிக்கும்
நாடகத்தை நிறுத்து நங்கையே

தேவைகள் எனக்கு
தேவதையே அதிகமில்லை
சின்ன சின்ன டச்சிங்
சில பொழுதுகள் மட்டும்
உன் விரல்களில் ... என் விரல்கள்
உன் இடுப்பில்
என் கை இப்பொழுது

இதுபோதும்
ஏங்க வைக்காதே என்னை
என் உயிரே என் உயிரே

Sunday, May 20, 2012

ஹெல்மெட் தொடர்ச்சி .....

கண்ணப்பன் மதுரை கமிஷனரா இருந்தவர். பிப்ரவரி, 2012ல மதுரைல டூவீலர் ஓட்டுற போலீஸ் எல்லாரும் தலைல ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்ட விட்டார். பிப்ரவரி 29ல இருந்து ஹெல்மெட் போடாம டூவீலர் ஓட்டுற பொது ஜனத்தை பிடிச்சு ஃபைன் போட ஆரம்பிச்சாங்க. மார்ச் 5ந் தேதிக்குள்ள மதுரைல டூவீலர் ஓட்டுற எல்லாரும் தலைல ஹெல்மெட் மாட்டிட்டாங்க.

எங்க பாத்தாலும் ஹெல்மெட் தலை தான். ஹெல்மெட் போடலைன்னா போலீஸ் பிடிக்கும்... அப்புறம் ஃபைன் ... இப்படியே ஏப்ரல் 15 வரைக்கும் ஓடுச்சு. கண்ணப்பன் ஐபிஎஸ் மதுரைல இருந்து டிரான்ஸ்பர் வாங்கிட்டுப் போனார். இப்ப யாரும் ஹெல்மெட் போடுறது இல்ல. போலீசும் பிடிக்கிறது இல்ல. எல்லாமே LAW ENFORCING AUTHORITYய பொறுத்துத் தான்.

Friday, May 11, 2012

நீ மட்டும் ஏன் ஹெல்மெட் போட மாட்டேங்குற - அமர்

இப்ப தலையில ஹெல்மெட் மாட்டிக்கிட்டுத் தான் டூவீலர் ஓட்டணும்னு ஒரு ரூல் போட்டு, பிப்.29ம் தேதில இருந்து ஹெல்மெட் போடாம டூவீலர் ஓட்டுறவங்களை பிடிச்சு ஃபைன் போடுறாங்க.

நம்ம முனியப்பன் ஹெல்மெட் போடாம டூவீலர்ல போற ஆள். பயண தூரம் 1 கி.மீ. தான். அதுக்குப் போய் எதுக்கு ஹெல்மெட்டு. பிடிக்கிற போலீஸ் சரக (லோக்கல்) போலீசா இருந்தா முனியப்பன் டூவீலர்ல வந்தா விட்டுருவாங்க. பிடிக்கிற போலீஸ்ல இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, ஏட்டையா இல்லன்னா பிசி இப்படி முனியப்பன்கிட்ட ட்ரீட்மெண்ட் பாக்க வர்றவங்க.

டிராஃபிக் போலீஸ் டீமா வந்து பிடிப்பாங்க. அப்புறம் முனியப்பன் ஹெல்மெட் போடமாட்டார். சைட் ரோட்ல போயிடுவார். நேரா போயிரலாம். அப்புறம் அவுக கிட்ட நிக்கணும்.

இப்ப காலைல டென்னிஸ் வெளையாட அமர், அஷுவை முனியப்பன் எட்வர்ட் ஹாலுக்கு கூப்பிட்டுப் போறார். வழக்கம் போல ஹெல்மெட் போடாமத் தான். எல்லாரும் தலைல ஹெல்மெட் மாட்டிக்கிட்டு டூவீலர்ல போறாங்க. இவன் மட்டும் ஹெல்மெட் போடாம ஓட்டுறான் அப்படின்னு அமர் மனசுக்குள்ள இப்படி ஒரு சிந்தனை ஓடியிருக்கு. இன்னைக்கு முனியப்பனை நேராவே கேட்டுப்புட்டான் அமர்.

நீ மட்டும் ஏன் ஹெல்மெட் போட மாட்டேங்குறேன்னு. சின்னப் பையன் கேட்டா ... அவனுக்கு சிம்பிளா பதில் சொல்லணும். முனியப்பன் ஒரே வரில சொல்லி முடிச்சிட்டார். இப்ப ரோட்டுல விக்குற ஹெல்மெட் எல்லாம் வித்து முடிஞ்ச பிறகு யாரையும் போலீஸ் பிடிக்காது அப்படின்னு.

இப்படி ஹெல்மெட் கட்டாயம் போடுங்கறதும், அப்புறம் வேணாங்கிறதும் இன்னக்கி நேத்தா நடக்குது. எம்ஜிஆர் காலத்துல இருந்து 30 வரு­மா இந்த கேலிக்கூத்து நடக்குது.