குற்றாலத்தில் குளிக்க மே 15 முதல் ஜீன் 15க்குள் போயிருவார். ஏன்னா, அப்பத்தான் கூட்டம் இருக்காது. அமர், அஷூ சந்தோஷமா குளிக்கத் தோதாயிருக்கும். டென்த், பிளஸ்டூ ரிசல்ட் வந்து, எல்லாரும் காலேஜ், ஸ்கூல் அட்மிஷன்னு பரபரப்பாயிருப்பாங்க. குற்றாலம் கூட்டமில்லாம ஃப்ரீயா இருக்கும்.
குற்றாலம் ஃப்ரீயா இருந்தா குளிக்க அருவியில தண்ணி வேணும்ல. தண்ணி நல்லா அருவில விழுகிறத கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டுத்தான் குற்றாலம்.
ஹிண்டு பேப்பர்ல சாட்டிலைட் படத்துல கேரளாவையும், கன்னியாகுமரியையும் தழுவிக்கிட்டு மேகக்கூட்டம் இருக்கணும். மதுரைல காலை 8 மணி வரைக்கும் வெயில் வரக்கூடாது. மதுரைல காத்து அடிக்கணும், அடிக்கிற காத்துல மரத்துல இருக்குற கிளையெல்லாம் டான்ஸ் ஆடணும். அப்படின்னா குற்றாலம் நல்லா இருக்கும். எதுக்கும் குற்றாலத்துல உள்ள நண்பரையும் போன் பண்ணி கன்ஃபார்ம் பண்ணிக்கிடுவார்.
குற்றாலம் போயாச்சு, குளிக்க எல்லா அருவிலயும் தண்ணி இருக்கு. மெயின் பால்ஸ், ஐந்தருவி, பழைய குற்றால அருவி, இது மூணுலயும் குளியல். ஒவ்வொரு எடத்துலயும் கொறைஞ்சது ஒண்ணுலர்ந்து ஒன்றரை மணி நேரம் குளியல். குற்றாலத்துல வெயில் சுள்ளுனு அடிச்சா மதியம் 11-3, முனியப்பன் பக்கத்துல கேரளாவுக்குள்ள பாலருவிக்குப் போயிருவார். குற்றாலத்துல இருந்து 25 கிலோ மீட்டர்ல கேரளாவுல பாலருவி.
இந்த ஜீன் 11 குற்றால போட்டோஸ்






அஷூ எடுத்த போட்டோக்கள்







சிறுவர்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் எந்திர வாழ்க்கையில் இருந்து சிறிது மாற்றம் தேவை. இது வாழ்க்கையை மகிழ்ச்சியாகத் தொடர மிகவும் அவசியம்.