முதலில் சைகாஸ் எனப்படும் தென்னை மரக் குடும்பத்தைச் சேர்ந்த செடி. மரமாக வளரக்கூடியது. வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இலைகள் வரும். சிறிது காஸ்ட்லியான செடி. முதலில் ஒரு இலையுடன் வரும் கன்று அடுத்தடுத்து வளரும் போது இலைகளின் எண்ணிக்கை கூடும்.
தென்னை மாதிரியே குருத்தாக விரியும் இலைகள். இலைகளின் எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக செடியின் விலையும் அதிகரிக்கும். 100 ரூபாய் விலைக்கு கிடைக்கும் சைகாஸ் கன்று வளர, வளர விலையும் உயர்ந்து 20000 ரூபாய் வரையில் வளர்த்தியைப் பொறுத்துக் கிடைக்கிறது.
முனியப்பனின் சைகாஸ் குருத்துவிட்டு, இலைகளாக விரிவதைப் படம் எடுத்தது அமர். 12 இலைகளுடன் நிற்கும் சைகாஸ் செடி குருத்திலிருந்து இலை விரிவதற்கு எடுத்துக் கொண்ட காலம், ரொம்ப அதிகமில்லை. just 2 மாதங்கள்.







