Friday, July 18, 2008

முனியப்பன் பக்கங்கள்(2)

முனியப்பன் பக்கங்கள்(2)

நம்ம சினிமா ஆளுங்கள பாருங்க, remake-ல இறங்கிட்டாங்க, படமே remake. பழயபடத்த remake பண்றது, தெலுங்கு படத்த remake பண்றது, பழய பாட்ட remake பண்றது, அப்ப originality என்னாச்சு? அதான் பு ரியலன்னு இல்ல, அவங்க கற்பனை வத்திருச்சா, யோசிக்கிற திறமை இல்லையா?

நம்மாளுகளுக்கு ஒரு கதையோட அவுட்லைன மட்டும் சொல்லுவோம். இது நிசமா நடந்த உண்மைச் சம்பவம்

A 27 year Old woman was run over and killed by a train and her 30 year old lover injured as they stood kissing on a rail track in the Siberian city of Novosibirsk

இத படமாக்குற காதாசிரியர் டைரக்டரோட பேட்டி 'இதுவரைக்கும் யாரும் சொல்லாத உண்மைச் சம்பவத்தை படமாக்கணும்னு அதுக்கான கதைக் கருவை யோசிச்சிகிட்டிருப்பதான் இந்த சம்பவம் பத்தின news என் கண்லபட்ருச்சு. இத படிச்ச ஒடனே என்னால என் கண்ணுல கண்ணீர் வர்றத நிப்பாட்ட முடியல, எவ்வளவு வேதனை இருந்தா ரயில்வே டிராக்ல முத்தத்தை பரிமாறிக்கிட்டு ரெயில்ல அடிபட்டு வாழ்க்கைய முடிச்சிருக்கும் அந்தப்பொண்ணு.

இந்த outline ஐ வச்சி யோசிக்க ஆரம்பிச்சேன், காட்சிகள் தண்ணால வந்து விழுந்துகிட்டே இருக்கு ரெண்டே நாள்ல கதை, திரைக்கதை வசனத்தை எழுதிட்டேன். லைலா-மஜ்னு ரோமியோ-ஜீலியட், அம்பிகாபதி-அமராவதி வரிசைல நம்ப வீரமணி-வேலம்மா சரித்திரம்ங்க.'

இப்படி போகுது அவரோட பேட்டி, நீங்க கொஞ்சம் யோசிச்சு இந்த outlineஅ இப்ப இருக்க நம்மாளுக எப்படி சினிமாவுல கொண்டு வருவாங்கன்னு சொல்லுங்க......

No comments: