முளைத்து மூணு இலை விடும்போதே
முன்னேற்றத்திற்கு சுழிபோட்டவன்
முனியப்பன்
படிக்க நினைத்த தொழிலை
படித்தான்
கேட்ட தெல்லாம் கிடைத்தது
தொட்ட தெல்லாம் துலங்கியது
காலம் மாறியது
காட்சிகள் மாறின
கைக்கு எட்டியது
வாய்க்கு எட்ட வில்லை
காதலி கிடைத்தாள்
காதல் தோற்றது
கல்யாணம் இன்னொருத்தியுடன்
கலங்க வைத்த மரண அடி
அடுத்தடுத்த இடிகள்
ஆளை அமுக்கின
வாழ்க்கை ஆரம்பிக்கையில்
வழுக்கி விழும்போது
வந்த வழியும் தெரியாது
போற வழியும் தெரியாது
பித்துப் பிடித்தும்
சித்தம் கலங்கவில்லை
தோல்வியில் துவண்டாலும்
தொழிலில் தொய்வடைய வில்லை
மக்கள் பணியல்லவா
மகேசனுக்கு ஆற்றும் தொண்டல்லவா
இதயத்தை அறுக்க நினைத்தவன்
இதயம் பிளந்தது
கனவுகளோடு வளர்ந்தவன்
கனவுகள் கல்லறைக்குப் போயின
காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியதில்
காணாமல் போனான்
களவாணி முனியப்பன்
வெள்ளத்தில் சிக்கியவன்
பள்ளத்தில் சிக்கவில்லை
மூச்சு முட்டும் நேரம்
முதலுதவி கிடைத்தது
கைப்பற்ற கிளையொன்று
கைக் கெட்டும் தூரத்தில்
உடன் பிறந்தவள்
உடன் பிறந்தவனை தவிக்கவிடவில்லை
தங்கை பிள்ளைகள்
தவறாமல் பிறந்து தாய்மாமனை
நிலைக்கு கொண்டு வந்தன
தன்னிலை அடைந்தான்
மாளிகை கட்ட முடியாதவன்
மாளிகை கட்டும் முடிவை
மாற்ற வில்லை
காற்று மாறி வீசும்
கடமையைச் செய் என
காலத்திற்காக காத்திராமல்
படித்த தொழிலில்
பயணத்தை நிறுத்தாமல் தொடர்கிறான்
Some people
Stand the test of time
So did Muniappan
Saturday, November 15, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Kalavani Muniappan could have been avoided
Thank u Ramesh for ur visit,the word Kalavani is mostly used to call someone cloe,here also it is used in that sense.
Post a Comment