Tuesday, November 18, 2008

நீங்கள் சந்திக்காத மனிதர்கள் (பாதுகாப்பான உடலுறவு)

உடலுறவை எப்படி பாதுகாப்பா வச்சிக்கணும்கிற டாபிக் இல்லை இது.

டாக்டர் எக்ஸின் நோயாளிகள் ஒரு தம்பதி. திரு & திருமதி என அப்படி வச்சுக்குவோம்.

திரு என்ன பண்றார் ?. இன்னொரு பொம்பளயோட தொடர்பு வச்சிக்க ஆரம்பிக்கிறார். இது ரொம்ப நாள் நடக்குது. யாரும் திருமதி கிட்ட இதப்பத்தி சொல்லல. ஏன்னா குடும்பம் கெட்டுப் போயிரும்ல.

இப்படியே போய்க்கிட்டிருக்கும் போது திரு ரெண்டு மூணு கிரிமினல் கேஸ்ல சம்பந்தப்படறார். நீதிமன்றத்தில் அவரோட உயிருக்குப் பாதுகாப்பாக ஒரு போலீஸை நியமிக்க உத்தரவு போடுறாங்க. 24 மணி நேரமும் திருவுக்கு பாதுகாப்பாக ஒரு போலீஸ் கூடவே இருக்காங்க.

திரு போலீஸ் பாதுகாப்போட செட்டப் வீட்டுக்குப் போய்ட்டு வர்றார். பாதுகாப்பு போலீஸ் ஒருத்தர் மனசு கேக்காம திருமதி கிட்ட விஷயத்தை சொல்லிர்றார். பிறகு கேக்கனுமா கலவரத்தை. செட்டப் வீட்டுக்கு போற திருமதி ரெண்டு பேரையும் கையும் களவுமா பிடிச்சா தெருவே நாறுது.

பிறகு ஒருநாள் திரு & திருமதி டாக்டர் கிட்ட வர்றாங்க. கிளினிக் வாசல்ல திரு, திருமதியை டூ வீலரை விட்டு இறக்கி விடுறார். திருமதி திருவை சத்தம் போடுகிறார். 'டேய் ஒன்னை வெட்டிக் கொல்லாம விட மாட்டேன்டா'. திரு டூ வீலரை எடுத்துப் பறக்கிறார்.

டாக்டர் எக்ஸ் திருமதியை அமைதிப் படுத்துகிறார். அப்பொழுது திருமதி செட்டப் விஷயம் தனக்கு இப்பொழுது தான் தெரியும் என்று சொல்லி நடந்த விவரங்களைக் கூறுகிறார். சொல்லி முடித்து 'பாதுகாப்பான உடலுறவு' என்று போலீஸ் துணையுடன் திரு செட்டப் வீட்டுக்கு சென்று வந்ததைக் கூறினார். போலீஸ் பந்தோபஸ்து எதுக்கு யூஸ் ஆகியிருக்கு பாருங்க !

2 comments:

Dikshith said...

You are 100% right . Police kaaranga kettavangala pidikkuradhukku payanpadaratha vida avangalukku thunai poradhu thaan adhigam . Idhu thaan kaliyugam pola .

Muniappan Pakkangal said...

Thank u Dikshith,intha police kettavangalla oru ? nallavan.