Monday, November 24, 2008

காதல் போஸ்ட்மார்ட்டம்

டெட் பாடிக்குத் தான் போஸ்ட்மார்ட்டம்
டெட்பாடி காதல் தோல்வியும்தான்

என் சட்டையில் .....
உன் நெற்றிக் குங்குமம்
என் புஜத்தில் .....
உன் பிச்சிப்பூ வாசம்

ஏன் நெருங்கிப் பழகினாய்
என்னை ஏமாற்றவா .... ?
உன் முதுகின் மச்சம் காட்டிய நீ
என் முதுகில் குத்தி விட்டாயே

என்னிடம் எதைக்கண்டு
என்னைக் காதலித்தாய் .... ?
என்னை நாசம் பண்ணவா
இன்னொருவர் சொல் கேட்டா

உன்னைப் பெண் கேட்க
என் வீட்டார் வரவில்லை
உன்னைப் பெண் கேட்டு
உன் வீட்டிற்கு நான் வந்தேனே

ஏன் என்னை ஏமாற்றினாய்
என்னைப் பித்தனாக்கவா .....?

சென்னை முகவரி கொடுத்தாய்
உன்னை அழைக்க ஆள் அனுப்பினேன்
விதி விளையாடியது அன்று
வீரமங்கை இந்திரா மரணம் - கலவரம்

காலம் கோழைகளுக்காக அல்ல
காலம் துணிந்தவனுக்குத் தான்

அன்றைய தவறை
இன்று உணர்ந்திருப்பாய்
ஏழையாயிருந்தாலும்
கோழையா யிருக்காதே

காதல் துரோகி இல்லை நீ
காதல் கோழை நீ

10 comments:

Dikshith said...

Indha Write-up la , your usage of words is excellent (Lyrics)

Muniappan Pakkangal said...

Thank u Dikshith.

முரளிகண்ணன் said...

ஏக்கம் வார்த்தைகளில் நன்கு பிரதிபலிக்கிறது

முரளிகண்ணன் said...

தமிழ்மணம், தமிழிஷ் போன்ற திரட்டிகளில் இணைந்து கொண்டால் தங்கள் படைப்புகள் நல்ல கவனம் பெறுமே?

குசும்பன் said...

முரளிகண்ணன் சொன்னது மிகவும் சரி
டாக்டர்!

Muniappan Pakkangal said...

thank u Muralikannan,Kusumban,Something in life stand forever in the inner mind-pasumarathu aanipol.nandri.

நட்புடன் ஜமால் said...

\\காதல் துரோகி இல்லை நீ
காதல் கோழை நீ\\

ஹும்ம்ம் ... புதுசாயிருக்கு.

உங்கள் வரிகள் அருமை

Anonymous said...

இன்றைக்குத்தான் தங்களின் வலையின் அறிமுகம் கிடைத்தது...தொடர்ந்து எழுதுங்க டாக்டர்:-)

Muniappan Pakkangal said...

Thank u Athirai Jamal & Iniyaval Punitha.

TAMILL NADAR said...

the best kavithai ...i like the lines very much...