Tuesday, December 9, 2008

ரம்ஜான் பிரியாணி

ரம்ஜான் பண்டிகை கொண்டாடும் முனியப்பனின் முஸ்லீம் நண்பர்கள் சிலர், ரம்ஜான் அன்னைக்கு செய்யும் பிரியாணியை முனியப்பனுக்கும் கொடுப்பாங்க. முன்னாடி நாலஞ்சு வீட்டுல இருந்து வந்த பிரியாணி, முனியப்பன் வீட மாத்திட்டதால, இப்ப இரண்டு பேர் வீட்டுல இருந்து மட்டும் ரம்ஜான் அன்னைக்கு மதியம் 2.30ல இருந்து 3 மணிக்குள்ள வரும்.

ரம்ஜான் அன்னைக்கு முனியப்பன் வீட்ல எல்லாருமே காலை சாப்பாடு லைட்டா வச்சுக்குவாங்க. முனியப்பன் காலைல சாப்பிட மாட்டான். மத்தியானம் பிரியாணி வருது, ரவுண்டு கட்டி அடிக்கணும்ல பிரியாணி நல்லாயிருக்கும். அதுலயும் பாய் வீட்டு பிரியாணி பட்டயக் கிளப்பும். பிரியாணி, தால்சா அப்புறம் தயிர் வெங்காயம், அவ்வளவுதான். இது போதாதா நம்மாளுக்கு .....

மத்தியானம் 3 பிளேட், சாயங்காலம் 1 பிளேட், நைட் 2 பிளேட், நடக்க முடியாத அளவுக்கு சாப்பிடுவார் முனியப்பன். முனியப்பனுக்கு 24 வருஷமா ஆரப்பாளையத்துல இருந்து பிரியாணி வரும். ஹபீப் பாய், மதுரை மாநகராட்சில வேலை பாக்கும் போது ஆரம்பிச்சி, இப்ப ரிடையர் ஆன பிறகும் அவர் வீட்ல இருந்து பிரியாணிய முனியப்பன் வீட்ல கொண்டு வந்து குடுத்துருவாங்க. இன்னைக்கு வரைக்கும் வந்துகிட்டு இருக்கு.

10 வருஷத்துக்கு முன்னால அவங்க வீட்ல இருந்து பிரியாணி வரலை. என்ன காரணம்னு புரியலை. 3 மாசம் கழிச்சு அவங்க வீட்ல இருந்து ட்ரீட்மெண்டுக்கு வர்றாங்க. அப்ப சொல்றாங்க அவங்க வீட்டு மருமகன் திடீர்னு இறந்துட்டார்னு. 32 வயசுக்காரர். பொண்டாட்டி, 3 பிள்ளைய தவிக்க விட்டுட்டு போய்ச் சேர்ந்துட்டார். முனியப்பன் இதயம் கனமாயிருச்சு.

4 comments:

Dikshith said...

kadavul eppovume nallavangala thaan ovara sodhippaan. adhukku idhu oru chinna sample.

Muniappan Pakkangal said...

Sothanaina parava ille ithu uyir.Allah than avungala kappathanum.Thank u Dikshith.

vellaisamy said...

STUDIED LUNGS MARRIAGE AND FATHERS MEMORY. FINE

Muniappan Pakkangal said...

Nandri Vellaisamy.