குழந்தைகளை முனியப்பனுக்குப் பிடிக்கும்
குழந்தைகளுக்கும் முனியப்பனைப் பிடிக்கும்
ஒரு விரல் நீட்டி, ஊசி போட்ட பின்
மிரட்டிய ஒன்றரை வயது சந்தியா சென்னையில்
ஊசிபோடு என்று தரையில்
உருண்ட மூன்று வயது பிரியா now BE
முனியப்பன் is a bad boy என்று
மூன்று பேப்பரில் எழுதிய
ஆறுவயது ராஜசூர்யா now BE
"Doctor loves children"
டக்கென எழுதிய ஜெயா I std Now +2
ஊசி போட்டபின் தாய் தந்தையை
உண்டு இல்லை என்றாக்கும் தீபிகா 2std.
போடுவதற்கு ஊசி எடுக்கும் வேளையில்
ஓடி escape ஆகும் ஒரு சில Boys
தனியாக வந்து
தனக்கென ட்ரீட்மென்ட் பார்க்கும்
முத்து சாரதா 4th std.
ஆஸ்பத்திரி சாலையில் திரும்பியவுடன்
அழுக ஆரம்பிக்கும் 2-3 வயசு குழந்தைகள்
அடிபட்டு தையல்போட
அலறும் குழந்தைகள்
அரட்டிய உடன்
ஆகும் கப்சிப்
ஆஸ்பத்திரி வரும் வழியில் வணக்கம் சொல்லும்
அருகிலுள்ள சிறுவர்கள்
கன்சல்டிங் கதவு திறந்தவுடன்
கண்சிமிட்டி சிரிக்கும் 4-8 வயசுகள்
கைகாட்டி டாட்டா காட்டும் 1-3 வயசுகள்
கையால் flying kiss கொடுக்கும் 1-2 வயசுகள்
சிறு பிள்ளைகளின் சிருங்கார
சிரிப்புக்கு ஈடு இணை இல்லை
கள்ளங் கபடமில்லா சிரிப்பில்
கலந்த ஒரு வெட்கம் காண்பது ஒரு சுகம்
கண்சிமிட்டி கைகுலுக்கி
கரமசைக்கும் சிறுபிள்ளைகளை
அனுதினம் கடப்பது
அசைபோடும் அனுபவம்
குழந்தைகள் பலவகை அந்த
குதூகலம் அனுபவிக்கக் கொடுத்த
...................................இறைவனுக்கு நன்றி
Saturday, December 27, 2008
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
//முனியப்பன் is a bad boy என்று
மூன்று பேப்பரில் எழுதிய
ஆறுவயது ராஜசூர்யா now BE//
மிக மிக...குழந்தைகள் போலவே அழகான பதிவு முனியப்பன்.நீங்களும் குழந்தையாகவே மாறிவிட்டீர்கள் போல.குழந்தைகளை மிக ரசித்ததால்தான் இந்தப் பதிவே மனதில் பதிவாகியிருந்திருக்கும்.
பாராட்டுக்கள்.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.நிறைவாய் இன்னும் எழுதுங்கள் முனியப்பன்.
Nandri Hema,i like children as they like me.Happy New year to you,thanks .
ரசனை மாறினால் வாழ்க்கை மாறும் என்பார் ஒஷோ.
ரசனை மிகுந்தவர்களுக்கு உலகம் எப்போதுமே இன்பம்தான்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
Thank U Vannaththu Poochchiar,Love things to bo loved,it keeps life going.Thank u for ur New year Greetings,wishing u the same.nandri.
Aneagama Jawaharlal Nehruvukku aduththapadiya kuzhandhaigala adhigamaa kavarndha aalu neengal thaan ungalukku oru virudhu pending.
Nandri Dikshith,virudhu eppo?
Post a Comment