முனியப்பன்கிட்ட 42 வயதுக்காரர் ஒருத்தர் X, மூஞ்சி, கை, கால் வீங்கி வர்றார். செக் பண்ணி பாத்தா, இரத்த அழுத்தம், ஹார்ட் பெயிலியர். ஒடனே முனியப்பன் அவரை சிறப்பு சிகிச்சைக்காக இதயநோய் நிபுணர்ட்ட அனுப்புறார். அங்க பெட்ல
அட்மிட் பண்ணி, 5 நாள் வச்சிருக்காங்க. சுகமாகி வீட்டுக்கு X வந்துர்றார்.
சிகரெட் குடிக்கக் கூடாது. திரவ அளவு ஒரு நாளைக்கு 1 லிட்டர் உப்பு கூடாது. முட்டை, மட்டன் கூடாதுன்னு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் Xக்கு. முனியப்பன் கிட்ட வருவார், செக் அப் பண்ணிக்கிருவார். நார்மலாயிருக்கும். Xன் பையன் 5 ஆம் வகுப்பு மாணவன். முனியப்பன் Xஅ அட்வைஸ் பண்ணும் போது கவனமா கேப்பான். முனியப்பன் X கிட்ட "நானும் ஹார்ட் பேஷண்ட் தான். உணவுக் கட்டுப்பாடு மாத்திரைல இருக்கேன்" அப்படிம்பார்.
ரெகுலரா வந்துக்கிட்டிருந்த X, அதுக்கப்புறம் ஆளைக் காணோம். திடீர்னு ஒருநாள் மூஞ்சி மொகரையெல்லாம் வீங்கி முனியப்பன்கிட்ட வர்றார். சிகரெட், திரவ உட்கொள்ளளவு கட்டுப்பாடு இல்லை, மாத்திரை சாப்பிடலை, மறுபடியும் முனியப்பன் இதயநோய் சிறப்பு மருத்துவர்கிட்ட Xஅ அனுப்பி வைக்கிறார், அட்மிட் ஆகி அஞ்சு மணி நேரத்தில் ஆள் அவுட்.
10 நாள் கழிச்சு டெத் சர்டிபிகேட் வாங்க வர்றாங்க, X மகனும், அம்மாவும். X மகன் முனியப்பன்கிட்ட கேட்டான்,
"ஒங்களுக்கும் இதய வியாதி, எங்கப்பா செத்துட்டார், ...... நீங்க இருக்கீங்க"
அவனோட மனசுல உள்ள தாக்கத்தை எப்படி சொல்றதுன்னு அவனுக்குத் தெரியலை.
Wednesday, December 3, 2008
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
நிஜம்மா நடந்ததா?
வேர்ட் வெரிஃபிகேஷனை எடுத்துடுங்க ப்ளீஸ்
Yes it happened.thank u Kabeesh for ur visit.
முனியப்பன்,தங்கள் தங்கள் வயதிற்கும் மனதிற்கும் ஏற்றபடி நிச்சயம் மனதில் தாக்கங்கள் ஏற்படத்தானே செய்யும்.
Yes,i was little bit shocked to hear such words from a 10 yr old.
chinna pillainga eppavume olivu maraivu illama EDUTHOM POTU UDAITHOM nu franka vaarthaigalpesuvaanga.
Thank u Dikshith.
Post a Comment