மறக்கமுடியாத நகைச்சுவை நடிகர். அவருடைய நகைச்சுவை கதாபாத்திரங்கள், உணர்ச்சிகரமான வேடங்கள் மறக்க முடியாதவை. முனியப்பனின் மனதை மட்டும் கவர்ந்த நடிகரல்ல அவர், உலகத் தமிழர்கள் அனைவரையும் கவர்ந்தவர்.
அவரது ஒல்லியான உடல்வாகும், வேகமான நடனமும் நினைவில் நிற்பவை. நகைச்சுவை நடிகர்களில் நடனத்திலும் சிறந்து விளங்கியவர் திரு.நாகேஷ் தான். நகைச்சுவை நடிகர்களில் கதாநாயகனாக வெற்றிக்கொடி நாட்டியவர் அவர் மட்டும் தான். அவருடைய நீர்க்குமிழி, சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல், சாது மிரண்டால் போன்ற படங்களில் கதாநாயகனாக உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி, அந்தப் படங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு அடித்தளம் அமைத்திருப்பார்.
அனைத்து நகைச்சுவை நடிகைகளுடனும் ஜோடி போட்டவர். எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன், ரவிச்சந்திரன், ஜெய் சங்கர், ரஜினி, கமல் ஆகிய எல்லோருடனும் நகைச்சுவை வேடம் கட்டியவர். திருவிளையாடல் படத்தில் வறுமையில் வாடும் 'புலவர் தருமியாக' வருவார். பாட்டுக்குப் பொற்காசு என்று அறிவிக்கப்பட்டவுடன், கோயிலில் பாட்டுக்கு நான் எங்க போவேன் என்று புலம்புவார். சிவபெருமானிடம் பாட்டை வாங்கி வந்து நக்கீரனிடம் மாட்டி பிழை இருக்கிறது என்றதும் "எவ்வளவுக் கெவ்வளவு பிழை இருக்கிறதோ அவ்வளவு குறைத்து கொடுங்கள்" என்று கெஞ்சும் போதும், பின்பு கோவிலில் வந்து "அவன் வரமாட்டான்" என்று நொந்து பேசும் போதும் பட்டயக் கெளப்பியிருப்பார் நாகேஷ்.
'அன்பே வா' படத்தில் காஷ்மீரில் எம்.ஜி.ஆர் வீட்டை எம்.ஜி.ஆருக்கே வாடகைக்கு விட்டு அசத்தியிருப்பார். தில்லானா மோகனாம்பாள் படத்தில் 'வைத்தி'யாகக் கையில் எலுமிச்சம்பழத்துடன் வருவார். காதலிக்க நேரமில்லை படத்துல கலக்கல் காமெடி. சினிமா மோகத்துல, சினிமா டைரக்ட் பண்ண துடிக்கிற character. அவருடைய தந்தையாக வரும் பாலையாவிடம் நச்சரிப்பார். பாலையாவும் ஒரு கட்டத்தில் "சரி ஒன் கதைய சொல்லு"ன்னு கதை கேக்கவும் ஒக்காருவார். அவர்கிட்ட நாகேஷ் கதை சொல்லி மிரள வச்சு, நடுங்க வைப்பார் பாருங்க, சிரிச்சிக்கிட்டேயிருக்கலாம்.
நகைச்சுவை, உணர்ச்சிகரமான வேடங்கள் தவிர, வில்லனாகவும் திரையில் தோன்றியவர் அவர். கமலின் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் மெயின் வில்லனே நாகேஷ் தான். தமிழ் திரைப்பட வரலாற்றில் அவர் ஒரு மைல் கல் & LEGEND.
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
முனியப்பன் இறைவனின் கைகளுக்குள் எங்கள் வாழ்க்கை.என்றாலும் மனம் தணியுதில்லை.நகைச்சுவைத் திலகத்தின் இழப்பை மறக்கவே முடியாத முகமும் குரலும்.படங்களை வரிசைப்படுத்த முடியாது அவர் நகைச்சுவையையும் ஆடலையும்.
என்ன செய்வோம்.அவரையும்
அமைதிப்படுத்தி நாங்களும் அமைதி கொள்வோம்.
உங்கள் தளத்தை என் என் தளத்தோடு இணைத்திருக்கிறேன்.
I wanted to pay my tribute to the Legend Nagesh.As u have pointed out his dance,voice & comedy are unforgettable.Thank u for adding up my blog in ur blog list.nandri Hema.
நல்ல பதிவு..
என் நண்பன் ஒருவன் சொன்னது:
கல்லூரி விடுமுறை நாட்களில், எங்கள் கிராமத்தில் இருந்த ஒரு டூரிங் கொட்டகையின் அருகிலுள்ள வாய்க்கால் மதகில் நண்பர்களுடன் அமர்ந்து, திருட்டு தம் அடித்துக்கொண்டு அரட்டை அடித்துக்கொண்டிருப்பது வழக்கம்.
அதுபோல் ஒருநாள் அரட்டை அடித்துக்கொண்டிருந்தபோது, வெகு தொலைவிலிருந்து ஒரு ஆள் வேகமாக ஓடி வந்துகொண்டிருந்தார். எங்களைத் தாண்டிப் போனவர், நின்று, எங்களிடம் வந்து, 'படம் ஆரம்பித்து ரொம்ப நேரம் ஆகுதுங்களா' என்று கேட்டார். 'இல்லைப்பா.. கால் மணி நேரம்தான் ஆகியிருக்கும்' என்றோம். 'இந்தப் படத்திலே நாகேஷ் இருக்கானா?' என்றார். 'ம்.. இருக்கான்' என்றோம். தியேட்டரை நோக்கி தனது ஓட்டத்தைத் தொடர்ந்தார்.
என்ன படம் என்று கேட்கவில்ல; தான் இதற்கு முன் பார்த்ததா, பார்க்காததா என்ற சிந்தனைக்கும் இடம் தரவில்லை. அவர் எதிர்பார்ப்பு, அந்த படத்தில் நாகேஷ்நடித்திருக்கவேண்டும். அவ்வளவுதான். அது போதும்.
காலத்தால் அழிக்க முடியாத பாதிப்புகளை விட்டுச் செல்லும், விரல்விட்டு எண்ணக்கூடிய சாதனையாளர்களுள் ஒருவரான திரு.நாகேஷ், சமுதாயத்தில் ஏற்படுத்தியிருந்த தாக்கத்திற்கான சான்றுதான் மேலே உள்ள சிறு நிகழ்ச்சி.
இவருக்கு மதிப்பளித்த ஒரே தமிழ் நடிகர் கமலஹாசன்...
தவறாமல் அவரது ஒவ்வொரு படங்களிலும் இவர் நடித்து வந்தார்.
தென் இந்தியா நடிகர் என்பதால் இந்தியா அரசு அவருக்கு உண்மையான அங்கீகாரம் தரவில்லை..
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடன், சாதிக்காமல் வீடு திரும்ப மாட்டேன் என்று கூறி சென்னைக்கு வந்த நாகேஷ் துவக்க காலத்தில் பல்வேறு துன்பங்களை அனுபவித்துள்ளார்.
பிழைப்புக்காக அவர் ஓட்டல் ஒன்றில் சர்வராகவும் வேலை செய்துள்ளார். இதுவே பின்னர் அவர் நாயகனாக நடித்த சர்வர் சுந்தரம் காதையானது என்று கூட திரையுலகில் கூறுவார்கள்.
தமிழ் திரையுலகில் அவர் சாதித்தவை எண்ணிலடங்காது. நடிப்பில் நகைச்சுவையிலிருந்து குணசித்திர மற்றும் வில்லத்தனமான வேடங்களிலும் தனது திறனை நிலைநாட்டியவர்.
அவரது பூத உடல் வேண்டுமானால் மறைந்திருக்கலாம்.. ஆனால் அவர் விட்டுச்சென்ற எண்ணற்ற நினைவலைகள்
என்றுமே பசுமையானவை, இனிமையனவை...
Nandri Vannaththupoochchiar.I agree with you,Nagesh went unrecognised & it was Kamalhasan who supported him.
KEERTHY SIRUSA IRUNDHAALUM MOORTHY PERUSU ENDRU SOLLUVANGA. Nagesh padathil naditha varisayai pattialukkul adakkamudiyadhu. Evarudaya moorthy Ulagathula ulla ellorume potruvadharku yetrapola irukku.
Thank u Dikshith,Nagesh was liked by all.
Nagesh ponra kadavulin vaarisugal irundha kaalathil naan vaazndhaen enra perumai dhaan enakku...avarai pugazndhu paesum alavukku enakku vayadhu illai enraalum, naanum en pangirkku or irunadu vaarthaigal solla kadamai paattu irukkiraen.
May his soul rest in peace.
Ennudaya anjali for Nagesh, ingu paarkka
http://kittu-mama-solraan.blogspot.com/2009/02/nagesh-charlie-chaplin-of-india.html
Kitcha
nandri Kitcha,i'll go thru ur post on Nagesh.
Post a Comment