Thursday, February 12, 2009

நீங்கள் சந்திக்காத மனிதர்கள் (தவசி)

தண்ணி லாரி தவசி

தண்ணி லாரி (water tanker) ஓட்டுற தவசி, மதுரைல அடி மட்டத்துல இருந்து மேல வந்துக்கிட்டிருக்க ஒரு சராசரி மனிதர். முனியப்பன் காலை நடைப் பயிற்சியின் போது தவசிய சந்திப்பார். தவசி அப்ப டூட்டிக்கு போய்க்கிட்டிருப்பார். மொதல்ல வீட்லருந்து டூட்டிக்கு நடந்து போன தவசி, ரொம்ப நாள் கழிச்சு TVS 50, அப்புறம் கொஞ்ச நாள்ல M 80,ரொம்ப நாள் கழிச்சு Hero Honda. நிதானமான, படிப்படியான முன்னேற்றம்.

தவசி, மதுரை அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர். எல்லா போக்குவரத்துக் கழகத்துலயும் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி சங்கங்கள் உண்டு. ஆளுங்கட்சிக்காரங்க முக்கியமான வழித்தடங்கள்ல (route) ஓட்டுநர், நடத்துநராயிருப்பாங்க. அது மாதிரி ரொம்ப light duty வண்டிகளும் அவங்க தான். இது prestige (கெளரவம்). அதுல ஒண்ணு தான் தண்ணி லாரி (water tanker). பசுமலை டெப்போல இருந்து லாரிய எடுத்து அரசரடி குடிநீர் நீரேற்று நிலையத்துல லாரில தண்ணிய fill பண்ணி, பசுமலைக்கும், தலைமை அலுவலகத்துக்கும் தண்ணிய கொண்டுபோய் சேர்க்கணும். காலைல 6 மணில இருந்து மதியம் 1 மணி வரைக்கும் டுட்டி. அதுக்கப்புறம் rest. மறுபடி அடுத்த நாள் தான் டூட்டி. வாரம் ஒரு நாள் விடுப்பு.

இந்த டூட்டி நேரம் நம்மாளு தவசிக்குப் பிடிச்சுப் போச்சு. அதுனால அந்த வண்டிய மட்டும் ஓட்ற மாதிரி பாத்துக்கிட்டார். ஆட்சி மாறின ஒடனே, இவரும் டக்குன்னு ஒரு துண்டைப் பொத்தி ஆளுங்கட்சி அரசியல்வாதி மூலமா தண்ணி லாரி டூட்டிய தக்க வச்சிக்கிருவார். இப்படி 20 வருஷமா தண்ணி லாரி ஓட்டுனார். யார் கண்ணு பட்டுச்சோ, இந்த தடவை ஆட்சி மாறின ஒடனே இவர் மேல ஒரு கண் வச்சிக்கிட்டிருந்தவங்க மொத வேலையா "தவசிய தண்ணி லாரிய விட்டு எறக்குடா"னு நம்ம தவசிய தண்ணி லாரி டூட்டில இருந்து எறக்கி விட்டுவிட்டாங்க. இப்ப தவசி ரெண்டு வருஷமா சிட்டி பஸ் ஓட்டிகிட்டிருக்கார்.

இவர் தண்ணி லாரி ஓட்டக் காரணம் இல்லாமலா இருக்கும். இவர் வாழ்க்கைல அடிமட்டத்துல இருந்து தன் கையே தனக்குதவின்னு தானே பாடுபட்டு முன்னேறிகிட்டு இருக்கவர். மதியம் 1 மணில இருந்து 11 மணி வரை தன்னுடைய குடும்பத்தின் வளர்ச்சிக்காக உழைப்பவர். சைடுல ஒரு ஆட்டோ வாங்கி விட்டார். அது இன்னைக்கு 5 ஆட்டோ வா இருக்கு.

திரை உலகில் நடிகர் சங்கிலி முருகன், நடிகர் செந்தில், நடிகர் ஜெயம் ரவி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர். அவர்களது குடும்பத்தாருடனும் நெருங்கிய பரிச்சயமுள்ளவர். நடிகர் விஜயகாந்துடனும் தொடர்பு உள்ளவர். சங்கிலி முருகன் பேரவையிலும், ஜெயம் ரவி ரசிகர் மன்ற மாநிலப் பொறுப்பிலும் இருக்கிறார். திரைப்படங்களிலும் தோன்றி இருக்கிறார்.

தவசியிடம் முனியப்பனுக்குப் பிடித்த விஷயம் அவருடைய பல்வேறு முகங்கள், 1. அரசுப் போக்குவரத்துக்கழக ஓட்டுநர், 2. அரசியல் 3. திரை உலக தொடர்பு 4. பொது வாழ்க்கை

6 comments:

ஹேமா said...

"முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்".வாழ்துக்கள் உங்கள் நண்பர் தவசிக்கு.

Muniappan Pakkangal said...

Hard work in the right path pays dividends.Thavasi works in all the ways possible,keeping in his mind his family which comes first.Nandri Hema for ur wishes to Thavasi.

கார்த்திகைப் பாண்டியன் said...

நம்ம ஊருக்காரரு நீங்க.. இவ்வளவு நாளா எப்படி பார்க்காம விட்டேன்.? பதிவு நாளா இருக்குங்க.. வாழ்த்துக்கள்..

Muniappan Pakkangal said...

Nandri Karthigaipandian.Glad to know u r also from Madurai & u had ur younger days at Railway colony.I have visited ur blog &you have commented Vijay & his Villu-summa kannabinnannu-nice & facts.

Dikshith said...

Evarudaya podhu vaazhkai arasiyal thirai ulagam idhellam ok. Aana ivarudaya velaya paadhukakka ivaru katchi maarinadhu evar oru average manidhan endru therigiradhu. Ok arasiyalvaadhi katchi maaruvadhu eppadi adhu avangaloda suyanalathukkuthaan enbadhai yaarum marukkavo maraikkavo mudiyadhu. Adhepol ivarudaya katchi maralleyum oru suyanalam irundhirukku.

Muniappan Pakkangal said...

Nandri Dikshith for ur visit. Thavasi was switching parties for keeping himself at the wheels of Water Tanker.