Monday, June 14, 2010

முனியப்பனின் யானை சோகம்


முனியப்பன் மூணார் போனா காட்டு யானைய பார்க்கப் போவார். மாட்டுப்பட்டி டேம் மேல Echo point, ரெண்டுக்கும் எடைல இருக்க நீர்நிலைல காட்டு யானை தண்ணி குடிக்க வரும். மேஞ்சுகிட்டு இருக்கும். முனியப்பனும் பாதுகாப்பான எடத்துல இருந்து யானை பாத்துட்டு வருவார்.

2008 - செப்டம்பர்ல போனப்ப ஒரு வித்தியாசமான யானை அனுபவம். ஆண் யானை அதுவும் ஒத்த யானை 70 பேர் யானையை பாக்குறாங்க. விசிலடிக்கிர்றான். கார் Horn அடிக்கிறாங்க, அமைதியா இருந்த யானை Disturb ஆகி ஆளை விரட்ட 4 ஸ்டெப் எடுத்து வைக்குது. அஷீ , அமர கூப்பிட்டு போயிருந்த முனியப்பன், பிள்ளைகளை கூப்பிட்டு Car, vanல ஏறி பறந்துர்றாங்க. சனியங்க தொலைஞ்சாங்கன்னு யானை அமைதியாகி, மேய ஆரம்பிச்சிடுது. "ஒத்த யானையும், 70 பேரும்" னு முனியப்பன் தன்னோட பதிவில் போடுறார். இது நடந்தது செப்டம்பர் 2008.

இப்ப 02.05.2010ல அதே யானை echo pointல மேஞ்சுகிட்டருக்கு. மூணார் Tour போனவங்க நெறைய போர் அதை பாக்குறாங்க. யானைய பாத்த ஒடனே சிலருக்கு ஒரு மாதிரி மனநிலை ஆயிருது. விசிலடிக்கிறாங்க, Car, van horn அடிக்கிறாங்க. யானையோட Privacy disturb ஆகுது. இதுல மோசமான பயபுள்ளக யானைய கல்ல விட்டு எறியறாங்க, அதை விட மோசமான 2 பேர் பீர் பாட்டில ஒடைச்சு யானை மேல எறிஞசிருக்காங்க. எவ்வளவு மோசமான காரியம் பாருங்க. அமைதியா இருந்த ஒரு ஜீவனை தொந்தரவு பண்ணிட்டாங்க. அவங்க தொந்தரவு பண்ணினது ஒத்த யானை. அதுவும் ஆண் யானை. யானைக்கு கோபம் வந்து மனுஷனை துவம்சம் பண்ண கெளம்பிடுது. யானைய தொந்தரவு பண்ணினவங்க அங்க நின்னவங்க எல்லாரும் சிட்டா பறந்துர்றாங்க.

Open placeல மேஞ்சுகிட்டிருந்த யானை இப்ப தார் ரோட்டுக்கு வெறியோட வருது. வண்டிய எல்லாம் போட்டுட்டு நம்ம ஆளுக உயிர் தப்பிச்சா போதும்மு ஓடிர்றானுவ. மனுஷன் ஓடிட்டான். இப்ப என்ன செய்றது. யானை யோசிக்குது. அவங்க வந்த Two wheeler, four wheelerஐ வெறி கொண்டு தாக்குது. ஒரு மணி நேரம் வண்டிய எல்லாம் போட்டு ஒடைக்குது. யானையின் வெறிக்கு ஆளான வாகனங்ஙகள் 35. இந்த நிகழ்ச்சிய TVல வேற காட்டியிருக்காங்க. வெறி அடங்கின ஒடனே யானை காட்டுக்குள்ள போயிடுது.மறுநாள் 3ந் தேதி அந்த யானை காட்டுக்குள்ள dead ஆ கெடக்கு.

இப்ப மாட்டுப்பட்டி,echo point, மூணார் யானைய பத்தி பார்ப்பபோம். மாட்டுப்பட்டிங்கிறது Indo swiss Project. மாடு வளக்குறாங்க. அங்க உள்ள கன்னுக்குட்டியே நம்ம மாட்டு சைசுக்கு இருக்கும். இந்த மாட்டு சமாச்சாரத்தால அந்த எடத்த மாட்டுப்பட்டுன்னு சொல்ல ஆரம்பிச்சாங்க. அங்க உள்ள டேமும் மாட்டுப்பட்டி டேம் ஆயிடுச்சு. மாட்டுப்பட்டி டேம்ல Fibre Boatல செம திரில்லிங்கா கூப்பிட்டு போவாங்க.

மாட்டுப்பட்டி பக்கத்துல உள்ள நீர்நிலை. காடுகள், யானைக்கு இருக்க தோதான எடம். பொதுவா யானைகள் எடம் மாறி கூட்டம் கூட்டமா போய்க்கிட்டு இருக்கும் யானை போற வர்ற பாதையை Elephant corridor அப்படிம்பாங்க. ஆனா மாட்டுப்பட்டி யானைகள் வழி தவறின யானைகள். Elephant corrider இந்த யானைகளுக்கு தெரியாது. அதனால அந்த Area தான் அவங்களுக்கு. காட்டுக்குள்ள இருக்க நேரம் தவிர மீதி நேரம் மக்கள் கண்ல படும்..

இப்ப யானை மனிதர்களை பத்தி பார்போம் . யானை பொதுவா மனிதனை ஒண்ணும் செய்யாது. யானை பக்கத்துல வந்தா சும்மா அசையாம அப்படியே நின்னா போதும். யானை அது பாட்டுக்கு போயிடும். 1930ல முனியப்பன் தாத்தா குழந்தை வேலு ஏலக்காய் தோட்டம் உண்டு பண்ணப்ப, யானை பக்கத்துல மேஞ்சுகிட்டிருக்கும், குழந்தை வேலு கொஞ்சம் தள்ளி ஏலக்காய் எடுத்துகிட்டிருப்பாரு.

மாட்டுப்பட்டி Indo swiss பண்னைல வேலை பாக்குற ஆளுகளுக்கு மருத்துவர் வேணும்ல. பண்ணைக்கு மருத்துவர் Dr. IK. ராஜ்குமார், அங்கயே 23 வருஷமா இருக்கார். அந்த campusலயே அவருக்கு குடியிருக்க குவார்ட்டர்ஸ் குடுத்திருக்காங்க. I.K.ராஜ்குமாரும் நம்ம முனியப்பனும் மருத்துவம் படிக்கும் போது Class mates.

டாக்டர் I.k.ராஜ்குமார் மாட்டுப்பட்டி குவார்ட்டர்ஸ்ல தங்கி வேல பாத்து, குடும்பம் நடத்தி, பிள்ளகுட்டி பெத்து வளத்து அங்கயே 25 வருஷத்தை ஓட்டிட்டார். நைட்ல அவர் இருக்க மாட்டுப்பட்டி Indo swiss பண்னைல, யானை கூட்டமா ஒரு விசிட் அடிக்கும் Dr.Tk. ராஜ்குமார் வீட்டை சுத்தி யானைக்கூட்டம் நின்ன இரவுகளும் உண்டு. யானை கூட்டத்துக்குள்ள பகல்ல அவர் நடந்து போன நாட்களும் உண்டு. அவர மாதிரிதான் அந்த Indo swiss பண்ணைல இருக்க மத்த ஆட்களும் யானையோடதான் வாழ்றாங்க இப்ப சமீபமா Indo swiss பண்னை எல்லைய சுத்தி கம்பி வேலி கட்டி, நைட்ல யானை உள்ள வராம இருக்கிறதுக்கு கம்பில Low voltage மின்சாரத்தை பாய்ச்சுறாங்க. அது கூட மாட்டுக்கு வளக்குற புல்லை யானை மேஞ்சுட்டு போறத தடுக்கறதுக்குத்தான்.

ஆக யானைங்கிறத பயப்பட வேண்டிய காட்டு விலங்கு இல்லை. அதைத் தொந்தரவு செய்ற மனுஷனைத் தாக்குமே ஒழிய, யானைங்கிறது அமைதியான ஆத்மா. சங்க காலத்துல இருந்தே யானை மனிதன் கட்டளைக்கு அடி பணிஞ்சு நடக்குது. மதம் பிடிச்ச யானை ஒண்ணுதான் சிக்கல்.


டூரிஸ்ட் போறவங்க வனவிலங்குகளை ரசிக்கனும், சந்தோஷப்படனும். அதை விட்டுட்டு துள்றதும், வக்ர புத்திய காட்டுறதும் தண்டிக்கப்பட வேண்டியது. டூரிஸ்ட்களால் ஒரு யானை மரணத்தை தழுவியிருக்கு. யானையை பீர் பாட்டில விட்டு எறிஞ்சு சந்தோஷப்பட்டிருக்காங்க பாருங்க. இப்ப மிருகம் அவங்கதான.

6 comments:

Anonymous said...

யாராவது அந்த யானையை கொன்றுவிட்டார்களா?

ஹேமா said...

என்ன ஆச்சு யானையாருக்கு ?உங்களுக்கும் தெரிலையா டாக்டர்.

Dikshith said...

Indha yaanai Earkkai maranam Yeidhiyadha alladhu kondru vittargala endra sandhegam enakku varugiradhu. Podhuvaaga ella vilangugalume thaan undu thann velai undu endrudhaan irukkum. Adharku oru aabathu endrabodhu THARKAAPU NADAVADIKKAYAAGA disturb pannavangala thaakum. Yaanaikku muzhu ayulkaalam evvalo?

Muniappan Pakkangal said...

Illai Suthanthira.co.cc,it died of Human stress.

Muniappan Pakkangal said...

Yaanai, poi chenthiruchu Hema.Paavi paya pullaiha athai konnu pottanga.

Muniappan Pakkangal said...

Nandri Dikshith for ur info.The life span of an elephantg is around 60 years.