Monday, July 12, 2010

மாதா? முனியப்பனா?

மார்ச் மாதம் பொழுது போக்குத் துறையைச் சேர்ந்த ஒரு ஆணும் ஒரு பெண்ணும், அவர்கள் தொழில் சம்பந்தமாக மதுரைக்கு வந்தார்கள்.

அந்த ஆணை "ஆ" என்று வைத்து கொள்வோம். முனியப்பனின் நண்பர் ஒருவர் "ஆ" வுக்கு பழக்கமானவர். வேறு விஷயமாக "ஆ" மதுரை வரும் போதல்லாம் "ஆ" வை Airport ல் வரவேற்பது, வழியனுப்புவது முனியப்பனின் நண்பர்.

முனியப்பனின் நண்பருக்கு திடீரென ஒரு ஆசை. "ஆ" வையும் முனியப்பனையும் சந்திக்க வைக்க வேண்டுமென்று, பொழுது போக்குத்துறை சம்பந்தமாக "ஆ", ஒரு பெண் மற்றும் பரிவாரங்களுடன் மதுரைக்கு வந்த தருணத்தை நண்பர் பயன்படுத்தத் திட்டமிட்டார். "ஆ" வும் அந்த பெண்ணும் தங்கியிருந்தது மதுரை சங்கம் ஹோட்டல் அடுத்தடுத்த ரூமில்.

முனியப்பனின் கிளினிக் டைம். மாலை 7 மணி. நண்பரிடமிருந்து அலைபேசி, "கெளம்பி வாங்க "ஆ" வைப் பார்க்கலாம்". முனியப்பனும் கிளம்பி பேயிட்டார்.

சங்கம் ஹோட்டல்ல வெயிட்டிங் ஹால்ல "ஆ" வைப் பார்க்க 20 பேர் இருக்காங்க. "ஆ"வின் மதுரை செயலாளர், முனியப்பனிடமும், நண்பரிடமும் தலைவர் tired ஆ இருக்கார். நாளைக்கு பார்ப்போம்"னு சொல்றார்.

முனியப்பனுக்கு விஷயம் புருஞ்சு போச்சு, வந்த இடத்தில் கிடைத்த வாய்ப்பை "ஆ" பயன்படுத்திக் கொண்டார். "ஆ" முன் நின்ற கேள்வி "மாதா? முனியப்பனா?". முனியப்பனுக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும்.

4 comments:

பிரபாகர் said...

ஆ.....

பிரபாகர்...

Dikshith said...

Vibareedhamaana aasaigal eppodhum ippadiththaan mudiyum.

Muniappan Pakkangal said...

Nachunu oru vaarthai Prabaahar.

Muniappan Pakkangal said...

Ithu vibareethamaana aasai illai Dikshith,neram theriyaatha mayakkam.