Monday, September 20, 2010

முனியப்பா கூப்பிட்டியா - சுரா

முனியப்பா கூப்பிட்டியா - சுரா


முனியப்பனின் பள்ளி நண்பர் சுரா. இப்ப சென்னைல இருக்கார். Cellல எப்ப கூப்பிட்டாலும்
எடுக்க மாட்டார். திடீர்னு ரெண்டு மாசம் கழிச்சு சுரா "முனியப்பா கூப்பிட்டியா" ம்பார். இது எதுக்கு என்னன்னு புரியலை முனியப்பனுக்கு. நேத்து தினமணி ஜீவாகிட்ட பேசிகிட்டிருக்கப்ப ஜீவா சொன்ன விஷயங்கள். சுரா எப்பவும் Cell போன silent modelல வச்சிருக்கவர். அவருடைய தொடர்புகள் அதிகம். சுரா எழுத்தாளர்ங்கிறதால அடுத்து என்ன எழுதறதுன்னு அதே சிந்தனைல இருக்கவர். அந்த சிந்தனை ஓட்டம் தடைபடக் கூடாதுங்கிறதுக்காகத்தான் இந்த silent mode.

urgent ஆ சுராகிட்ட பேசனும்னா அதுக்கு ஒரே வழி லேகா ரத்னகுமார்கிட்ட சொல்லிரனும். லேகா அட்வர்டைசிங் ரத்னகுமார் சுராகிட்ட சொல்வார். சுராவும் என்ன, ஏதுன்னு பேசிருவார். லேகா ரத்ன குமார் சுராவோட நெருங்கிய நண்பர், சுரா டெய்லி விசிட் பணற ஆபீஸ். இதயம் நல்லெண்ணெக்கு ஆரம்ப காலம் முதல் இன்னைக்கு வரைக்கும் Ad நம்ம லேகா ரத்னகுமார்தான்.

இப்ப சுராவ பத்தி சில வரிகள். சுரா தமிழர்னாலும் மூணார் பக்கத்துல செண்டுவாரைல வளந்தவர். ஆரம்ப கால படிப்பு கேரளாங்கிறதால மலையாளம் எழுத படிக்கத் தெரிந்தவர், சுரா. அப்புறம் High School, college- மதுரை, அப்புறம் சென்னை. கல்லூரில படிக்கிற காலத்துல கையெழுத்து பிரதி நடத்துனவர் சுரா. அப்ப இருந்தே அவருக்கு எழுத்து மோகம். சென்னைக்கு போனவர் சாவி வார இதழ்ல, அப்புறம் குங்குமம், பிலிமாலயா பத்திரிகைல பணி புரிஞ்சார். எடைல சினிமால PRO வா கால் வச்சார். அவர் மக்கள் தொடர்பாளரா பணியாற்றிய திரைப்படங்கள் 180க்கு மேல். பல நடிகர்களுக்கு PRO வா வேற இருந்தார். இவ்வளவு தூரம் இருந்தாலும் எளிமையானவர் சுரா. இன்னம் Busல, Share autoலதான் பயணங்கள்.நக்கீரன் கோபாலுக்கு நல்ல நண்பர் சுரா. நக்கீரன் பதிப்பகத்துல இருந்து வர்ற இனிய உதயம் மாத இதழ்ல இதுவரைக்கும் இவரோட மொழி பெயர்ப்பு நாவல்கள் 87 வெளிய வந்திருக்கு. சுரா சினிமா பத்திய தொடர்கள் நெறைய எழுதியிருக்கார். எல்லாப் பத்திரிகைலயும் திரை உலகம் சம்பந்தமா எழுதுவார். அப்படி ஒரு 500 கட்டுரைகள் போட்டுருக்கார். அவர் எழுத்துல வந்த புத்தகங்கள் 127.

திரை உலக புள்ளி விவரங்கள் அவருக்கு அத்துபடி. Press council மற்றும் திரை உலக PRO சங்கத்துல அவர் உறுப்பினர். எழுத்து, இலக்கிய விழாக்கள், Book fair தான் அவரோட மூச்சு.இப்ப 11.09.10ல முனியப்பன பாக்க பள்ளி நண்பர் Naval officer சங்கர் வந்திருந்தார். சுராவ பத்தி பேச்சு வந்த உடனே "அவன கூப்பிடுன்னு" சங்கர் சொல்ல முனியப்பன் "அவன் போன எடுக்க மாட்டான்பா" அப்படின்னு சொல்லிகிட்டே அரைகுறை மனதோட Cellல சுராவ கூப்பிட்டா, அதிசியம், சுரா போன attend பண்ணிட்டார்.

அப்ப சுரா சொன்ன விஷயம் இது. " இந்த வார குமுதம் பாத்தியா" அப்படின்னு கேட்ட சுரா. மதுரைக்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ராஜீவ் காந்தி வந்த விஷயத்தை போட்ருக்கத சொல்லி, ராஜீவ் காந்தி மதுரைக்கு ஏன் வந்தார் அப்படிங்கிறதையும் சொன்னார். சுராகிட்ட கலந்துரையாடி போடப்பட்ட செய்தி அது. திருநள்ளாறு சனீஸ்வர பகவான கும்பிட Plan பண்ண ராஜீவ்காந்திய பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மீனாட்சி அம்மன் கோவில்ல உள்ள சனீஸ்வர பகவான கும்பிட அழைச்சு வந்திருக்காங்க. ஏற்பாடு சென்னை கமலா தியேட்டர் உரிமையாளர் V.N.சிதம்பரம். அடுத்து சுரா சொன்ன விஷயம்தான் ஹைலைட்டே. "சிவாஜி காவடி எடுத்திருக்கார் தெரியுமா ஒனக்கு" கேட்ட சுரா detail ஆ சொல்றார். சிவாஜி கணேசன் பைலட் பிரேம்நாத் படப்பிடிப்புக்காக இலங்கைல இருக்கார். அப்ப வீட்ல பேரப்புள்ளக எல்லாம் பெண்குழந்தைகள். அப்ப சிவாஜியோட கடைசி மக தேன்மொழி மாசமா இருக்காங்க. சிவாஜி இலங்கைல உள்ள பிரசித்தி பெற்ற முருகன்
கோவில்ல வேண்டிக்கிறார். அடுத்த பேரப்பிள்ளை ஆம்பிள புள்ளயா பெறக்கும்போது ஒனக்கு
காவடி எடுக்கிறேன்னு வேண்டுதல். ஆம்பிள புள்ள பேரப்புள்ளயா பொறந்திருது.
காலங்கள் ஓடுது. இலங்கைல சூழ்நிலை சரியில்லாததால சிவாஜியால அங்க போக முடியல.
மனிதர்கள்கிட்டயே கடன் வைக்காதவர் சிவாஜி. கடவுள்கிட்ட கடன் வைப்பாரா?. அப்ப V. N.
சிதம்பரம் சிவாஜிகிட்ட சொல்றார். இலங்கை முருகன் மாதிரி பழமுதிர் சோலைல இருக்கு. காவடிய அங்க எடுக்கலாம்னு. சிவாஜி சரின்றார். காவடி எடுக்க வந்த சிவாஜிக்கு ஒடம்பு சரியில்லாம போகுது. அப்புறம் என் உயிர் போனாலும் முருகன் கோயில்ல போகட்டும்னு சிவாஜி கணேசன் காவடி எடுத்துர்றார். இந்த மேட்டர் அடுத்து வரும் குமுதம் வார இதழ்ல வருது. சுரா ஒரு தகவல் களஞ்சியம். சுரா போன எடுக்காதத பத்தி எழுத ஆரம்பிச்சு, கடைசில V.N.சிதம்பரம், சிவாஜி பத்தின செய்திகள்ளாம் பாருங்க. V.N. சிதம்பரத்த பத்தி நெறய விஷயங்கள் சொன்னார் சுரா.

சுப்பையா மகன் ராஜசேகர்தான் சுரா. சுராவும் முனியப்பனும் 1973ல எடுத்த போட்டோவும்
சுராவோட சமீபத்து போட்டோவும் இந்த பதிவுல உண்டு. ரெண்டு பேர் இருக்க போட்டோல வெள்ள சட்டை தலைல முடி நெறய இருக்கவர்தான் முனியப்பன், அடுத்தவர் சுரா.


10 comments:

Dikshith said...

Paravayillaye dr. Neenga ella thuraiyileyum oru nanbare vachirukinga. That shows ur versatility. Best Wishes.

Muniappan Pakkangal said...

Sura is a Nanben Dikshith. Even though contacting him over mobile is difficult,once he gets connected -he will talk for abt 40 minutes.He is a film world Info like Film News Anandan.

Thenammai Lakshmanan said...

நாவல்கள் 87 வெளிய வந்திருக்கு. சுரா சினிமா பத்திய தொடர்கள் நெறைய எழுதியிருக்கார். எல்லாப் பத்திரிகைலயும் திரை உலகம் சம்பந்தமா எழுதுவார். அப்படி ஒரு 500 கட்டுரைகள் போட்டுருக்கார். அவர் எழுத்துல வந்த புத்தகங்கள் 127.//

யம்மாடி.. பெரிய ஆள்தான்.. கேள்விப்பட்டு இருக்கேன் முனியப்பன் சார்..

Muniappan Pakkangal said...

Thank you Thenammai for ur visit after a long gap.Sura still is a simple person inspite of his knowledge abt cine field.He wrote at a stetch in Dinamalar-tamil daily for 200 issues abt cinema.His memory is astonishing.He still breathes abt writing & and he'll continue writing till his last.

Anonymous said...

Great info doctor. Ur style of writing is natural and spontaneous.

Keep posting. Thank you.

ஹேமா said...

டாக்டர்...நீங்க வைத்தியர் என்பதைவிட அருமையான மனிதர்.அதனாலேயே நிறைந்த நண்பர்கள்.சந்தோஷமாயிருக்கு.

Muniappan Pakkangal said...

Nandri Radhai.Plz visit my blog for a different experience.

Muniappan Pakkangal said...

Nandri Hema,i was a bad boy in my college days.I'll post an article on that.

மோகன்ஜி said...

சுரா வர்கள் எழுத்து பரிச்யமானதே. தாய்பாசத்திற்கு அடுத்தபடியான உயர்ந்த விஷயம் நட்புதான். உங்கள் badboy days படிக்க ஆவலாயிருக்கிறேன்

Muniappan Pakkangal said...

Nandri Mohanji,scoolmates form a different class in friendship.THey are more affectionate than collegemates.The post Bad Boy Muniappan will come after sometime.