முனியப்பன் படிச்சு முடிச்சு, ஹவுஸ் ஸர்ஜன் பண்றப்ப Surgeryல DR.S.ராமகிருஷ்ணன் ms, 4th யூனிட் chiefஆ இருந்தார்.அப்பல்லாம் Super speciality பிரிவுகள்
சென்னைல MMCல மட்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்த நேரம். DR.SR தலைல இருந்து கால் விரல் வரை உள்ள எந்த பார்ட்டா இருந்தாலும், ENT , கண் தவிர Operation
பண்றவர். அந்த காலகட்டத்துல அப்டமன் ஸ்கேன். CT ஸ்கேன். MRI ஸ்கேன் இதெல்லாம் கெடையாது. மருத்துவ அனுபவத்தை வச்சுதான் Treatment.
DR.S.R. திறமை முனியப்பனை SR பக்கம் ஈர்த்துச்சு SR யூனிட்லதான் ஹவுஸ் ஸர்ஜனா இருந்தார் முனியப்பன் . பொதுவா மருத்துவ மாணவர்கள்கிட்ட
ஆப்ரேஷன் பண்ற Surgeons தான் attraction. Surgeonsனா அவ்வளவு Craze.ஒடம்ப அறுத்து ஒட்ட வச்சு உசிர காப்பாத்தி Emergency surgeriessல தூள் கெளப்புவாங்க. அதுலயும் ரொம்பத் தெறமையான Surgeions மருத்துவ மாணவர்கள் மத்தில மிகவும் விரும்பப்படற ஆளா இருப்பாங்க.
அப்படி ஒரு Surgeonதான் Dr.S.R. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 4வது யூனிட் chief. Dr.S.R major operation பண்றத பாக்க அடுத்த Unit studentsம் வந்துருவாங்க Thyroid surgeryல மத்த எல்லா Unitலயும் Patientக்கு blood ஒரு பாட்டில் ஏத்துவாங்க.SR மட்டும் blood ஏத்தாமலே Operate பண்ணுவார். முனியப்பன் SRகிட்ட கேட்டார்,"ஏன் சார் நீங்க மட்டும் Blood போட மாட்டீங்கிறீங்க" DR SR சொன்னார், "Dont Insult me" SRக்கு அவர் மேல , அவர் Surgery மேல அவ்வளவு confidence. SR சொன்ன காரணம் " மத்தவங்கள்ளாம் Thyroid surgery யப்ப Surgical shock வந்துரலாம்னு பயந்துகிட்டு Blood போடுறாங்க , நம்ம எதுக்குப்பா பயப்படனும்?
SRன் இந்த boldness முனியப்பனுக்கு பிடிச்சுப் போக, ஹவுஸ் ஸர்ஜனா Surgeryல SR unitல 1 வருஷம் முனியப்பன் வேல பாத்தார்.சீனியர் house surgeonனா stipend கெடையாது. Fees கட்டி வேல பாக்கனும். SRகிட்ட வேல பாத்த 1 வருஷம்தான் முனியப்பனுக்கு எந்த Case ஆ இருந்தாலும் எதிர் கொள்ள தைரியத்தை குடுத்துச்சு.
Senior House Surgeon ஆ வேல பாக்க ஆரம்பிச்சு முனியப்பனுக்கு DR.SRம் அவரோட Asst. Sr ஸ்டீபனும் நல்லா பாடம் சொல்லி கொடுத்தாங்க. Operation பண்றப்ப instrumentஅ சரியா பிடிக்கலை, அவங்க கேட்டகிற கேள்விக்கு பதில் சொல்லலை அப்படின்னா முனியப்பனுக்கு அடி விழுகும், அவங்க கைல என்ன Instrument இருக்கோ அத வச்சு முனியப்பனை அடிப்பாங்க.
நாளா வட்டத்துல முனியப்பனும அவங்ககிட்ட instrument அடி வாங்காத அளவுக்கு தேறிட்டார். SRக்கு 2 Asst . Dr. ஸ்டீபன் மாறிப் போனப்பெறகு Dr.சிதம்பரம் ms & Dr பாலஸ் . இவங்க ரெண்டு பேரும் புதுசுங்கிறதால latest விஷயங்களை முனியப்பனுக்கு சொல்லிக் கொடுத்தாங்க.
Operation தியேட்டர்ல 3 டேபிள் இருக்கும். மொத டேபிள்ல SRம் ஒரு Asstம் case பண்ணுவாங்க. அடுத்த டேபிள்ல ஒரு Asst case பண்ணுவார். மூணாவது டேபிள்ல முனியப்பன் ஒரு House surgeon அ தொனைக்கு வச்சுகிட்டு Case பண்ணுவார்.
TVMCH திருநெல்வேலி medical college Hospitalல இப்ப 7 Surgical unit இருக்கு. அப்ப 4 unitதான் . அதனால 7 admission day ஒரு மாசத்துக்கு வரும். அந்த 7 நாளும் 24 மணி நேர duty. காலை 7 மணில இருந்து அடுத்த நாள் காலைல 7 மணிவரைக்கும் அந்த unitதான் பொறுப்பு. அடிபட்டு வர்ற Accident case, emergency surgery, ஏற்கெனவே உள்ள ward case அப்படின்னு 24 மணி நேரம் போறதே தெரியாது. மத்த யூனிட் chief லாம் admission day அன்னைக்கும் அவங்க rounds முடிஞ்ச ஒடனே கெளம்பிருவாங்க. ஆனா DRSR அந்த 7 நாளும் TVMC ஆஸ்பத்திரிய விட்டு வெளிய போக மாட்டார். அவசர கேஸ், accident கேஸ்ல அவர் Opinion வாங்கலாம், ரொம்ப
தேவைன்னா, emergency surgeryக்கும் வந்துருவார்.admission Day அன்னைக்கு incharge 1 asst தான் . ஆனா Chiefம் availableஆ இருக்காது SR மட்டும்தான். patient result அவருக்கு முக்கியம். அதே மாதிரி iv unitல postingல வர்ற, 3rd, 4th, final year studentsக்கு classம் நல்லா எடுப்பார். Dr Srகிட்ட எல்லா வார்டும் rounds போற ஒரே ஆளட முனியப்பன் மட்டும்தான்.
இப்படி போய்க்கிட்டிருக்கும் போது ஒரு abdomen case வயித்துல கட்டி, மேல வயித்துல, patient lady, Major operationன்னா ஒரு Asst, முனியப்பனோடதான் களம் எறங்குவார் DRSR. வயித்துல கட்டின்னு abdomenஅ oppen பண்ணா, அது ரொம்ப அபூர்வமான Cancer கட்டி operation பண்ண முடியாத அளவுக்கு Fix ஆகியிருக்கு. SR ஒரே வார்த்தைதான் சொன்னார் "I accept my defeat" எவ்வளவு பெரிய வார்த்தை மத்தவங்கள மாதிரி சப்பக் கட்டு கட்டாம தோல்விய ஒத்துக்கற மனசு யாருக்கு வரும் அதான் Dr.Sr.
Saturday, October 23, 2010
Monday, October 18, 2010
ரெண்டு நாள் ஜாலியா இருப்ப அஷீ
அமர், அஷீவின் அப்பா பெர்னாட்ஷா 1995ல் இருந்து அய்யப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டிப் போறவர்.
பெப்ரவரி 2008 ல முனியப்பன், பெர்னாரட்ஷா, அஷீ, அமர், நாலு பேரும் தனியா இரு முடி கட்டி அய்யப்பன் கோவிலுக்கு போய்ட்டு வந்தாங்க.
அமர், அஷீ, பெர்னாட்ஷா 2008,2009, இப்ப 2010 ல October மாசம் இருமுடி கட்டி அய்யப்பன் கோவிலுக்கு போனாங்க. குருசாமி பழனிச்சாமி வாத்தியார் குரூப் போடதான் போவாங்க. Octoberல தான்.
கர்நாடகா, ஆந்திராக்காரன் கூட்டம் இல்லாம அய்யப்பன் கோவில் கொஞ்சம் free ஆ இருக்கும்
காலைல முழிச்சதுல இருந்து நைட் தூங்குற வரைக்கும் முனியப்பனோட இருக்கதால, முனியப்பனை பிச்சு ஆய்ஞ்சிடுவாங்க அமரும் அஷீவும்.
இப்ப 17ந்தேதி இருமுடி கட்டி அய்யப்பன் கோவிலுக்கு போகும் போது அஷீ "ரெண்டு நாள் ஜாலியா இருப்ப" ன்னு ஒரு சிரிப்பு வெடிய கொளுத்திப் போட்டுட்டு சபரி மலைக்கு கெளம்பிட்டார்.
அஷீ, அமர் இருமுடி கட்டி சபரிமலை போறது இப்ப 4 வது தடவை.
பெப்ரவரி 2008 ல முனியப்பன், பெர்னாரட்ஷா, அஷீ, அமர், நாலு பேரும் தனியா இரு முடி கட்டி அய்யப்பன் கோவிலுக்கு போய்ட்டு வந்தாங்க.
அமர், அஷீ, பெர்னாட்ஷா 2008,2009, இப்ப 2010 ல October மாசம் இருமுடி கட்டி அய்யப்பன் கோவிலுக்கு போனாங்க. குருசாமி பழனிச்சாமி வாத்தியார் குரூப் போடதான் போவாங்க. Octoberல தான்.
கர்நாடகா, ஆந்திராக்காரன் கூட்டம் இல்லாம அய்யப்பன் கோவில் கொஞ்சம் free ஆ இருக்கும்
காலைல முழிச்சதுல இருந்து நைட் தூங்குற வரைக்கும் முனியப்பனோட இருக்கதால, முனியப்பனை பிச்சு ஆய்ஞ்சிடுவாங்க அமரும் அஷீவும்.
இப்ப 17ந்தேதி இருமுடி கட்டி அய்யப்பன் கோவிலுக்கு போகும் போது அஷீ "ரெண்டு நாள் ஜாலியா இருப்ப" ன்னு ஒரு சிரிப்பு வெடிய கொளுத்திப் போட்டுட்டு சபரி மலைக்கு கெளம்பிட்டார்.
அஷீ, அமர் இருமுடி கட்டி சபரிமலை போறது இப்ப 4 வது தடவை.
Monday, October 11, 2010
பகல் கொள்ளை
ரஜினி ஒரு மூன்றெழுத்து மந்திரம். எல்லோருக்கும் பனங்காய்ச்சி மரம், பொன் முட்டையிடும் வாத்து.
முன்னால எல்லாம் ரஜினி படம் ரிலிஸாச்சுன்னா மொத 2 நாள் ரசிகர் மன்றம் show. ஒரு showவுக்கு 25000 ரூபாய் கட்டிருவாங்க. அப்புறம் சினிமா பாக்க வர்றவங்ககிட்ட அந்த Ticket எல்லாம் ஒரு தொகை வச்சு வித்து சம்பாதிப்பாங்க. ரசிகர் மன்ற ஷோ முடிஞ்சப்பிறகு அடுத்த showல இருந்து பொது மக்கள் படம் பாப்பாங்க. டிக்கெட் வெல 50 ரூபாய்க்குள்ளதான் இருக்கும்.
8 வருஷத்துக்கு முன்னால திரை உலகினர் திரண்டு போய் முதலமைச்சர்ட்ட மனு குடுக்கிறாங்க. "TV, திருட்டு சிடியால எங்க தியேட்டருக்கு ஆள் வரல, மொத கொஞ்ச நாளைக்கு டிக்கெட்ட விட கூட கொஞ்சம் வச்சு வித்துக்கிறோம்" உடனே அன்றைய முதலமைச்சர் "திரைப்படம் வெளியான 7 நாளைக்கு இஷ்டம் போல டிக்கெட்ட வெல வச்சு வித்துக்கலாம்"னு அனுமதி குடுக்கிறாங்க.
அதுலருந்து தியேட்டருக்கு ஏற்கெனவே வந்த கூட்டமும் கொறைஞ்சிருச்சு. கொறைஞ்ச டிக்கெட்டே 50 ரூபாதான். அதுவும் படத்த தியேட்டர விட்டு தூக்கந்தண்டியும் அதே ரேட்தான்.
"சினிமா பாக்க வர்றியா, கேக்கிற காச குடுத்துட்டு படத்த பாரு" அதான் இன்றைய நிலை. இப்ப வந்திருக்க ரஜினி படத்தோட ஒரு டிக்கெட் வெல எவ்வளவு இருக்கும்னு நெனைக்கிறீங்க. மொத நாள் 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரை . ஒரு டிக்கெட்டுக்குத்தான். ரஜினி படம் அதுவும் சூப்பர் படம்னா தொடர்ச்சியா House full ஆ ஓடும். இப்படியும் ஓடுது ஒரு showவுக்கு 300 போரோட. இப்பயும் ஒரு டிக்கெட் மினிமம் ரூ 150 எல்லா ஊர்லயும் .
சினிமா தியேட்டர்ல டிக்கெட்டுக்கு வசூலிக்கிறது கொள்ளையடிக்கிறாங்கன்னு Open fact. இதை தடுத்து நிப்பாட்ட வேண்டியது அரசாங்கம். அரசு இயந்திரம் ஏன் சும்மா இருக்கு. எந்த ஒரு தொழில்லயும் தொழிலுக்கு உள்ள மரியாதை இருக்கனும். சினிமா டிக்கெட்டுங்கிற பகல் கொள்ளை திரைப்படத் தொழிலையே நசிக்கிடும்.
முன்னால எல்லாம் ரஜினி படம் ரிலிஸாச்சுன்னா மொத 2 நாள் ரசிகர் மன்றம் show. ஒரு showவுக்கு 25000 ரூபாய் கட்டிருவாங்க. அப்புறம் சினிமா பாக்க வர்றவங்ககிட்ட அந்த Ticket எல்லாம் ஒரு தொகை வச்சு வித்து சம்பாதிப்பாங்க. ரசிகர் மன்ற ஷோ முடிஞ்சப்பிறகு அடுத்த showல இருந்து பொது மக்கள் படம் பாப்பாங்க. டிக்கெட் வெல 50 ரூபாய்க்குள்ளதான் இருக்கும்.
8 வருஷத்துக்கு முன்னால திரை உலகினர் திரண்டு போய் முதலமைச்சர்ட்ட மனு குடுக்கிறாங்க. "TV, திருட்டு சிடியால எங்க தியேட்டருக்கு ஆள் வரல, மொத கொஞ்ச நாளைக்கு டிக்கெட்ட விட கூட கொஞ்சம் வச்சு வித்துக்கிறோம்" உடனே அன்றைய முதலமைச்சர் "திரைப்படம் வெளியான 7 நாளைக்கு இஷ்டம் போல டிக்கெட்ட வெல வச்சு வித்துக்கலாம்"னு அனுமதி குடுக்கிறாங்க.
அதுலருந்து தியேட்டருக்கு ஏற்கெனவே வந்த கூட்டமும் கொறைஞ்சிருச்சு. கொறைஞ்ச டிக்கெட்டே 50 ரூபாதான். அதுவும் படத்த தியேட்டர விட்டு தூக்கந்தண்டியும் அதே ரேட்தான்.
"சினிமா பாக்க வர்றியா, கேக்கிற காச குடுத்துட்டு படத்த பாரு" அதான் இன்றைய நிலை. இப்ப வந்திருக்க ரஜினி படத்தோட ஒரு டிக்கெட் வெல எவ்வளவு இருக்கும்னு நெனைக்கிறீங்க. மொத நாள் 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரை . ஒரு டிக்கெட்டுக்குத்தான். ரஜினி படம் அதுவும் சூப்பர் படம்னா தொடர்ச்சியா House full ஆ ஓடும். இப்படியும் ஓடுது ஒரு showவுக்கு 300 போரோட. இப்பயும் ஒரு டிக்கெட் மினிமம் ரூ 150 எல்லா ஊர்லயும் .
சினிமா தியேட்டர்ல டிக்கெட்டுக்கு வசூலிக்கிறது கொள்ளையடிக்கிறாங்கன்னு Open fact. இதை தடுத்து நிப்பாட்ட வேண்டியது அரசாங்கம். அரசு இயந்திரம் ஏன் சும்மா இருக்கு. எந்த ஒரு தொழில்லயும் தொழிலுக்கு உள்ள மரியாதை இருக்கனும். சினிமா டிக்கெட்டுங்கிற பகல் கொள்ளை திரைப்படத் தொழிலையே நசிக்கிடும்.
Saturday, October 2, 2010
அயோத்தி தீர்ப்பு - சின்னத்தாய்
முனியப்பனின் அம்மாதான் சின்னத்தாய். படிப்பு அந்தக் காலத்து SSLC. மதுரைல OCPM & Capron hall ஸ்கூல்ல Hostelல தங்கி படிச்ச வருடங்கள் 1943 to 1949. எல்லா ஸ்கூல்லயும் Prayer நடக்கும். சின்னத்தாய் காலத்துல Prayer என்ன தெரியுமா "Long live queen victoria". பிரிட்டிஷ்க்காரன் ஆட்சில இந்தியா இருந்த நேரம்.
அந்த கால கட்டத்துல சுதந்திர போராட்டங்கள் தீவிரமான நேரம். மாணவர்கள் மத்திய சுதந்திர தாகம் அதிகம். சின்னத்தாயம்மா லீவுல போடிக்கு வர்றப்பல்லாம் சுதந்திர போராட்டங்கள் ஊர்வலங்கள்ல பங்கெடுத்துப்பாங்க. தேசம்கிறதுதான் அவங்க எண்ணம் எல்லாம். அந்தக் காலத்து தேசப்பக்தி. பொதுவா இந்தியாவுக்குள்ள என்ன நடந்தாலும் கவலைப்படுவாங்க.
இப்ப அயோத்தி பிரச்சினை அவங்களை பிடிச்சிருச்சி. தீர்ப்பு எதாவது ஒரு பக்கம் ஆயிருச்சுன்னா நாட்ல கலவரம் வெடிச்சிடுமேன்னு அவங்களுக்கு கவலை. சின்னத்தாய் வீட்டுக்காரர் கு.வேலுசாமி நீதிபதியா இருந்தார்ல. அவர் தீர்ப்பு குடுத்த ஒரு case அவங்களுக்கு ஞாபகம் வருது. முனியப்பன்கிட்ட 1963ல நடந்தத சொல்றாங்க. "அப்பா கோவில்பட்டில நீதிபதியா இருக்கப்ப ரெண்டு Partyக்கு எடைல கோர்ட்ல ஒரு dispute. கு.வேலுசாமி ரெண்டு partyயும் சந்தோஷமா ஏத்துக்க கூடிய ஒரு தீர்ப்பை courtல குடுக்கிறார்"
அந்த தீர்ப்பு ஞாபகம் இப்ப சின்னத்தாயம்மாவுக்கு வந்துருது. அயோத்திய பத்தி கவலை கூடுது."அப்பா சொன்ன மாதிரி ரெண்டு Partyயும் சமாதானமா போற மாதிரி தீர்ப்பு வந்தா நல்லாயிருக்கும்மா" அப்படின்னு பொலம்ப ஆரம்பிச்சுட்டாங்க.
தீர்ப்புநாள் வந்துருச்சு. காலைல இருந்தே "3 மணிக்கு சொல்றாங்கப்பா. பேரன் அமர்கிட்ட TVய பாத்து சொல்லு " அப்படின்னு ஒரு Request. அமர் ஆச்சிக்கு 3 மணிக்கு போன் பண்ணி இன்னம் சொல்லலை 4 மணிக்காம் போன வச்சிர்றார். முனியப்பன் clinic கெளம்பி வந்துர்றார். 5.15 க்கு சின்னத்தாயம்மாட்ட இருந்து போன் அப்பா தீர்ப்பு சொல்லிட்டாங்கப்பா. எல்லாருக்கும் பொதுவான தீர்ப்பு.
தீர்ப்பை கேட்ட பிறகுதான் சின்னத்தாயம்மாவுக்கு நிம்மதி. நாடு அவங்களுக்கு முக்கியம்.
அந்த கால கட்டத்துல சுதந்திர போராட்டங்கள் தீவிரமான நேரம். மாணவர்கள் மத்திய சுதந்திர தாகம் அதிகம். சின்னத்தாயம்மா லீவுல போடிக்கு வர்றப்பல்லாம் சுதந்திர போராட்டங்கள் ஊர்வலங்கள்ல பங்கெடுத்துப்பாங்க. தேசம்கிறதுதான் அவங்க எண்ணம் எல்லாம். அந்தக் காலத்து தேசப்பக்தி. பொதுவா இந்தியாவுக்குள்ள என்ன நடந்தாலும் கவலைப்படுவாங்க.
இப்ப அயோத்தி பிரச்சினை அவங்களை பிடிச்சிருச்சி. தீர்ப்பு எதாவது ஒரு பக்கம் ஆயிருச்சுன்னா நாட்ல கலவரம் வெடிச்சிடுமேன்னு அவங்களுக்கு கவலை. சின்னத்தாய் வீட்டுக்காரர் கு.வேலுசாமி நீதிபதியா இருந்தார்ல. அவர் தீர்ப்பு குடுத்த ஒரு case அவங்களுக்கு ஞாபகம் வருது. முனியப்பன்கிட்ட 1963ல நடந்தத சொல்றாங்க. "அப்பா கோவில்பட்டில நீதிபதியா இருக்கப்ப ரெண்டு Partyக்கு எடைல கோர்ட்ல ஒரு dispute. கு.வேலுசாமி ரெண்டு partyயும் சந்தோஷமா ஏத்துக்க கூடிய ஒரு தீர்ப்பை courtல குடுக்கிறார்"
அந்த தீர்ப்பு ஞாபகம் இப்ப சின்னத்தாயம்மாவுக்கு வந்துருது. அயோத்திய பத்தி கவலை கூடுது."அப்பா சொன்ன மாதிரி ரெண்டு Partyயும் சமாதானமா போற மாதிரி தீர்ப்பு வந்தா நல்லாயிருக்கும்மா" அப்படின்னு பொலம்ப ஆரம்பிச்சுட்டாங்க.
தீர்ப்புநாள் வந்துருச்சு. காலைல இருந்தே "3 மணிக்கு சொல்றாங்கப்பா. பேரன் அமர்கிட்ட TVய பாத்து சொல்லு " அப்படின்னு ஒரு Request. அமர் ஆச்சிக்கு 3 மணிக்கு போன் பண்ணி இன்னம் சொல்லலை 4 மணிக்காம் போன வச்சிர்றார். முனியப்பன் clinic கெளம்பி வந்துர்றார். 5.15 க்கு சின்னத்தாயம்மாட்ட இருந்து போன் அப்பா தீர்ப்பு சொல்லிட்டாங்கப்பா. எல்லாருக்கும் பொதுவான தீர்ப்பு.
தீர்ப்பை கேட்ட பிறகுதான் சின்னத்தாயம்மாவுக்கு நிம்மதி. நாடு அவங்களுக்கு முக்கியம்.
Subscribe to:
Posts (Atom)