ஈழத்தில் இடமில்லை
இங்கும் இடமில்லை
அங்கும் அடிமைதான்
இங்கும் மாற்றமில்லை
அந்நிய நாடுகளில் பலர்
அடைக்கலம் புகுந்தார்
வேலை செய்து பிழைத்தாலும்
வேற்று நாட்டில் புறக்கணிக்கப்படவில்லை
இங்கு அகதியாய் வந்தவர்
இன்னும் இன்னலில்
வக்கீலுக்கு படித்து
வழக்குரைக்க முடியவில்லை
பள்ளியில் மதிப்பெண் எடுத்த மாணவ அகதி தள்ளி வைக்கப்படுகிறான்.
தொழில் கல்வி தேர்வில் வாய்ச் சொற்களால்
அரசை வசைபாடும் சீமான்களே, புயல்களே அநத மாணவனுக்கு குரல் குடுத்தீரா?
அகதி நலனுக்கு என்ன போராடினாய்
தஞ்சம் புகுந்தவனை
தவிக்க விடும் அரசியலமைப்பே
தடைகளை தகர்த்து
தவிக்கும் அவனுக்கு இடம் கொடு
தமிழனாய்ப் பிறந்ததில் தவறில்லை
ஈழத்தின் வாரிசாய் பிறந்ததுதான் அவன் தவறு.
அதிலும் பெரும் தவறு
அவன் இங்கே தஞ்சம் புகுந்ததுதான்.
முனியப்பன் குமுறலுக்கு காரணம்
பாதிக்கப்பட்ட அகதியின் பெயர் : நாகராஜ்
வயது : 17
அகதி முகாம் : பாம்பார் அணை, கிருஷ்ணகிரி மாவட்டம்
12th Medical cut off : 197.5
Engineering cut off : 197.83
அதியமான் மேல்நிலைப் பள்ளி
மறுக்கப்பட்ட காரணம் : இலங்கை அகதி
இந்தியாவில் பிறந்தாலும் இந்திய குடியுரிமை கிடையாது
Tuesday, July 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
இப்போ சொல்லுங்க டாக்டர்...எதுக்கு செம்மொழி மாநாடு ?
மிகவும் வருந்தத்தக்க செய்தி முனியப்பன் சார்..
Nandri Hema,plz see my next post for the continuation of this topic.
Nandri Thenammai,this has got changed,plz see my next post.
Thamizhan endru sollada thalai nimirndhu selladaa enbadhu ellam pazhaya pazhamozhi. Paavam indha brilliant student. Pudhumai Bharathi dhaan indha thamizhagaththai kaapaathanum.
Nandri Dikshith. He has been saved.
///ஹேமா said...
இப்போ சொல்லுங்க டாக்டர்...எதுக்கு செம்மொழி மாநாடு ?///
ம்ம்ம்ம்...
Nandri Gnanaseharan.
Post a Comment