Saturday, May 26, 2012

முனியப்பனின் காதல் கவிதைகள்

ரிட்டயர் ஆகப் போற வயசாச்சு, நம்ம முனியப்பன் கிசும்பைப் பாருங்க ... கவிதை மேடை

தொறந்திருச்சு. காதல் கவிதையா

ஊத்தெடுத்து வருது. கலி காலம்டா சாமி ... கலி காலம்.

காதலுக்கு வயசில்லை சாமியோவ், மனசு தான் எளிமையா இருக்கணும்கிறார் நம்ம

முனியப்பன்.

அவர லூசு பட்டியல்ல சேத்திருவோமா .... ?



உன் நினைவுகள்

நாளெல்லாம் உன் நினைவுகள்
நினைக்கும் பொழுதும் சரி

நினைக்காத பொழுதும் சரி
அதிலும்

அதிகாலையில் உன் நினைவுகள்
அற்புதம் அபாரம்
நான் மட்டும்
உன்னை நினைத்து ஏங்க
என்னை நீ அழகாய்
ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய்



ஏன் வஞ்சிக்கிறாய் ... ?

என் நெஞ்சை
கொள்ளை கொண்டாய்
ஏன் என்று
உனக்குத் தெரியும்
இருந்தும்
பட்டும் படாமல்
இருக்கிறாய் ....

வஞ்சித்து விடாதே வஞ்சியே
வஞ்சித்தாலும் வாழ்வேன்
உன் நினைவோடு ....


கவிதை மடை

கவிதை மடையை திறந்த
களவாணி சிறுக்கியே
கவிதைகள்
காட்டாறாய்ப் பாயப் போகின்றன
கவிதைகள் உனக்காக - உன்
கன்னத்தில் விழும் உனக்காக
ஏமாற்றிப் பார்க்காதே
ஏமாற்றவும் விட மாட்டேன்

கவிதையில் உன்னை
கவிழ்த்தி விடுவேன்
கண்டிப்பாக நீ என்
கவிதை வலையில் வீழ்வாய்
கவிதையால் உன்னை
கட்டிப் போடுவேன் உறுதியாக ....


கிட்ட வா

உன் கண்ணில் ஒரு நாணம்
உன் உதட்டில் ஒரு கோணம்
உன் முகத்தில் ஒரு பாவம்
உன் கழுத்தில் ஒரு வெட்டு
தள்ளி நின்று
தவிக்க விடுகிறாய்
எட்ட நின்று
ஏங்க வைக்கிறாய்
கிட்ட வா
கட்டிக்க அல்ல
உன் அருகாமை
என் உள்ளத்திற்கு
எனக்கு சார்ஜ் ஏற்ற
என்று வரப் போகிறாய்...?


உன் பதில் என்ன ...?

சொல்ல வேண்டியதை
சொல்லியாச்சு
உன் மனமறிந்துதான்
கவிதை மழை
உன் பதில்
என் வாழ்வை வளமாக்கிடும்
நல்ல பதில் வரும் வரை
நான் விடுவதாயில்லை
கவிதை மழை பொழிய
காற்றாய் கரையும் உன் மனசு


தூக்கமில்லை உன்னால்

இரவெல்லாம் உன் நினைப்பு
இரவினில் தூக்கமில்லை
உருண்டு புரண்டாலும்
உருள உருள உன் நினைப்புத் தான்

கண் அயரும் போது
காலை 4 மணி
கண் முழிக்கும் போது
காலை 5 மணி
காரணம் என்ன ?
கண்டுபிடிக்காமல் விடுவதா
யோசிக்க யோசிக்கப் புரிந்தது
இராத் தூக்கம் தொலைந்தது
இரவு நேரத்து கொசுக்கடி


என் தேவை

என் கண்ணில் தெரியும்
உன் முகம்
என் நெஞ்சில் தெரியும்
உன் இதயம்
உனக்குத் தெரியாதா ...?
உண்மையான என் அன்பு
தெரிந்தும்
தெரியாதது போல்
புரிந்தும்
புரியாதது போல்
நீ நடிக்கும்
நாடகத்தை நிறுத்து நங்கையே

தேவைகள் எனக்கு
தேவதையே அதிகமில்லை
சின்ன சின்ன டச்சிங்
சில பொழுதுகள் மட்டும்
உன் விரல்களில் ... என் விரல்கள்
உன் இடுப்பில்
என் கை இப்பொழுது

இதுபோதும்
ஏங்க வைக்காதே என்னை
என் உயிரே என் உயிரே

4 comments:

Dikshith said...

first class, kaadhali yaaru ?

Muniappan Pakkangal said...

thx Dikshith.Chumma time pass,meesai naraichalum aasai naraikkalai appadinnu oru ninaippu

மோகன்ஜி said...

அம்மாடியோவ்! இவ்வளவு இருக்கா?!

TAMILL NADAR said...

very nice kavithai....super feeling