வெட்கம்கிறது பெண்களுக்கான ஒரு சிறப்பம்சம். இலக்கியங்கள்ல, அந்தக் காலத்துல இந்தக் காலத்துல எந்தக் காலத்துலயும் மாறாத ஒரு சிறப்பியல்பு.
ஆம்பளைக்கு வெட்கம் வராதுன்னு யார் சொன்னது?
முனியப்பனின் நெடுநாள் வாடிக்கையாளர் கருப்பையா. அவர் குழந்தைக் குட்டி, அவர் தம்பிகள் குடும்பங்கள் எல்லாம் முனியப்பனிடம் மருத்துவம் பார்பவர்கள்.
கருப்பையாவுக்கு 3 வருஷம் முன்னால முடக்கு வாதம் (RHEUMATODI ARTHRITIS) வந்து படுத்த படுக்கையாயிட்டார். சுத்தி உள்ள ஆட்கள்லாம் அவர் போய்ச் சேர்ந்துடுவார்னு முடிவு பண்ணிட்டாங்க. முனியப்பன் கருப்பையாவ போய்ச் சேர விட்டுருவாரா?
இப்ப கருப்பையாவுக்கு 60 வயசுல ஆம்பளையாட்களுக்கு வர்ற அந்தரங்க பிரச்சனை. முனியப்பன்கிட்ட தன்னோட பிரச்சனையை சொன்னார். முனியப்பன் அவர பரிசோதிக்கிறதுக்காக அடுத்த ரூம்ல ஒக்காரச் சொன்னார். கருப்பையா வள்ளிகிட்ட டாக்டர் என்னைய டெஸ்ட் பண்ண வரப்போறார்னு சொல்றார். வள்ளி கருப்பையா மகள்.
முனியப்பன் கருப்பையா இருக்க ரூமுக்குள்ள போய் கதவ பூட்டிட்டு வேட்டிய அவுருங்கன்னு சொன்ன உடனே, கருப்பையா "அட நீங்க வேற" ன்னு வெட்கப்பட்டார் பாருங்க. அவருக்கு அவ்வளவு சிரிப்பு, வெட்கம். நெடுநாள் பழக்கம். விசுவாசம் வேற. அதான் அந்த வெட்கம்
Friday, June 18, 2010
Monday, June 14, 2010
முனியப்பனின் யானை சோகம்

முனியப்பன் மூணார் போனா காட்டு யானைய பார்க்கப் போவார். மாட்டுப்பட்டி டேம் மேல Echo point, ரெண்டுக்கும் எடைல இருக்க நீர்நிலைல காட்டு யானை தண்ணி குடிக்க வரும். மேஞ்சுகிட்டு இருக்கும். முனியப்பனும் பாதுகாப்பான எடத்துல இருந்து யானை பாத்துட்டு வருவார்.
2008 - செப்டம்பர்ல போனப்ப ஒரு வித்தியாசமான யானை அனுபவம். ஆண் யானை அதுவும் ஒத்த யானை 70 பேர் யானையை பாக்குறாங்க. விசிலடிக்கிர்றான். கார் Horn அடிக்கிறாங்க, அமைதியா இருந்த யானை Disturb ஆகி ஆளை விரட்ட 4 ஸ்டெப் எடுத்து வைக்குது. அஷீ , அமர கூப்பிட்டு போயிருந்த முனியப்பன், பிள்ளைகளை கூப்பிட்டு Car, vanல ஏறி பறந்துர்றாங்க. சனியங்க தொலைஞ்சாங்கன்னு யானை அமைதியாகி, மேய ஆரம்பிச்சிடுது. "ஒத்த யானையும், 70 பேரும்" னு முனியப்பன் தன்னோட பதிவில் போடுறார். இது நடந்தது செப்டம்பர் 2008.
இப்ப 02.05.2010ல அதே யானை echo pointல மேஞ்சுகிட்டருக்கு. மூணார் Tour போனவங்க நெறைய போர் அதை பாக்குறாங்க. யானைய பாத்த ஒடனே சிலருக்கு ஒரு மாதிரி மனநிலை ஆயிருது. விசிலடிக்கிறாங்க, Car, van horn அடிக்கிறாங்க. யானையோட Privacy disturb ஆகுது. இதுல மோசமான பயபுள்ளக யானைய கல்ல விட்டு எறியறாங்க, அதை விட மோசமான 2 பேர் பீர் பாட்டில ஒடைச்சு யானை மேல எறிஞசிருக்காங்க. எவ்வளவு மோசமான காரியம் பாருங்க. அமைதியா இருந்த ஒரு ஜீவனை தொந்தரவு பண்ணிட்டாங்க. அவங்க தொந்தரவு பண்ணினது ஒத்த யானை. அதுவும் ஆண் யானை. யானைக்கு கோபம் வந்து மனுஷனை துவம்சம் பண்ண கெளம்பிடுது. யானைய தொந்தரவு பண்ணினவங்க அங்க நின்னவங்க எல்லாரும் சிட்டா பறந்துர்றாங்க.
Open placeல மேஞ்சுகிட்டிருந்த யானை இப்ப தார் ரோட்டுக்கு வெறியோட வருது. வண்டிய எல்லாம் போட்டுட்டு நம்ம ஆளுக உயிர் தப்பிச்சா போதும்மு ஓடிர்றானுவ. மனுஷன் ஓடிட்டான். இப்ப என்ன செய்றது. யானை யோசிக்குது. அவங்க வந்த Two wheeler, four wheelerஐ வெறி கொண்டு தாக்குது. ஒரு மணி நேரம் வண்டிய எல்லாம் போட்டு ஒடைக்குது. யானையின் வெறிக்கு ஆளான வாகனங்ஙகள் 35. இந்த நிகழ்ச்சிய TVல வேற காட்டியிருக்காங்க. வெறி அடங்கின ஒடனே யானை காட்டுக்குள்ள போயிடுது.மறுநாள் 3ந் தேதி அந்த யானை காட்டுக்குள்ள dead ஆ கெடக்கு.
இப்ப மாட்டுப்பட்டி,echo point, மூணார் யானைய பத்தி பார்ப்பபோம். மாட்டுப்பட்டிங்கிறது Indo swiss Project. மாடு வளக்குறாங்க. அங்க உள்ள கன்னுக்குட்டியே நம்ம மாட்டு சைசுக்கு இருக்கும். இந்த மாட்டு சமாச்சாரத்தால அந்த எடத்த மாட்டுப்பட்டுன்னு சொல்ல ஆரம்பிச்சாங்க. அங்க உள்ள டேமும் மாட்டுப்பட்டி டேம் ஆயிடுச்சு. மாட்டுப்பட்டி டேம்ல Fibre Boatல செம திரில்லிங்கா கூப்பிட்டு போவாங்க.
மாட்டுப்பட்டி பக்கத்துல உள்ள நீர்நிலை. காடுகள், யானைக்கு இருக்க தோதான எடம். பொதுவா யானைகள் எடம் மாறி கூட்டம் கூட்டமா போய்க்கிட்டு இருக்கும் யானை போற வர்ற பாதையை Elephant corridor அப்படிம்பாங்க. ஆனா மாட்டுப்பட்டி யானைகள் வழி தவறின யானைகள். Elephant corrider இந்த யானைகளுக்கு தெரியாது. அதனால அந்த Area தான் அவங்களுக்கு. காட்டுக்குள்ள இருக்க நேரம் தவிர மீதி நேரம் மக்கள் கண்ல படும்..
இப்ப யானை மனிதர்களை பத்தி பார்போம் . யானை பொதுவா மனிதனை ஒண்ணும் செய்யாது. யானை பக்கத்துல வந்தா சும்மா அசையாம அப்படியே நின்னா போதும். யானை அது பாட்டுக்கு போயிடும். 1930ல முனியப்பன் தாத்தா குழந்தை வேலு ஏலக்காய் தோட்டம் உண்டு பண்ணப்ப, யானை பக்கத்துல மேஞ்சுகிட்டிருக்கும், குழந்தை வேலு கொஞ்சம் தள்ளி ஏலக்காய் எடுத்துகிட்டிருப்பாரு.
மாட்டுப்பட்டி Indo swiss பண்னைல வேலை பாக்குற ஆளுகளுக்கு மருத்துவர் வேணும்ல. பண்ணைக்கு மருத்துவர் Dr. IK. ராஜ்குமார், அங்கயே 23 வருஷமா இருக்கார். அந்த campusலயே அவருக்கு குடியிருக்க குவார்ட்டர்ஸ் குடுத்திருக்காங்க. I.K.ராஜ்குமாரும் நம்ம முனியப்பனும் மருத்துவம் படிக்கும் போது Class mates.
டாக்டர் I.k.ராஜ்குமார் மாட்டுப்பட்டி குவார்ட்டர்ஸ்ல தங்கி வேல பாத்து, குடும்பம் நடத்தி, பிள்ளகுட்டி பெத்து வளத்து அங்கயே 25 வருஷத்தை ஓட்டிட்டார். நைட்ல அவர் இருக்க மாட்டுப்பட்டி Indo swiss பண்னைல, யானை கூட்டமா ஒரு விசிட் அடிக்கும் Dr.Tk. ராஜ்குமார் வீட்டை சுத்தி யானைக்கூட்டம் நின்ன இரவுகளும் உண்டு. யானை கூட்டத்துக்குள்ள பகல்ல அவர் நடந்து போன நாட்களும் உண்டு. அவர மாதிரிதான் அந்த Indo swiss பண்ணைல இருக்க மத்த ஆட்களும் யானையோடதான் வாழ்றாங்க இப்ப சமீபமா Indo swiss பண்னை எல்லைய சுத்தி கம்பி வேலி கட்டி, நைட்ல யானை உள்ள வராம இருக்கிறதுக்கு கம்பில Low voltage மின்சாரத்தை பாய்ச்சுறாங்க. அது கூட மாட்டுக்கு வளக்குற புல்லை யானை மேஞ்சுட்டு போறத தடுக்கறதுக்குத்தான்.
ஆக யானைங்கிறத பயப்பட வேண்டிய காட்டு விலங்கு இல்லை. அதைத் தொந்தரவு செய்ற மனுஷனைத் தாக்குமே ஒழிய, யானைங்கிறது அமைதியான ஆத்மா. சங்க காலத்துல இருந்தே யானை மனிதன் கட்டளைக்கு அடி பணிஞ்சு நடக்குது. மதம் பிடிச்ச யானை ஒண்ணுதான் சிக்கல்.
டூரிஸ்ட் போறவங்க வனவிலங்குகளை ரசிக்கனும், சந்தோஷப்படனும். அதை விட்டுட்டு துள்றதும், வக்ர புத்திய காட்டுறதும் தண்டிக்கப்பட வேண்டியது. டூரிஸ்ட்களால் ஒரு யானை மரணத்தை தழுவியிருக்கு. யானையை பீர் பாட்டில விட்டு எறிஞ்சு சந்தோஷப்பட்டிருக்காங்க பாருங்க. இப்ப மிருகம் அவங்கதான.
Friday, June 11, 2010
லைலா புயல் - வள்ளி
முனியப்பன்கிட்ட வேலை பாக்குற வள்ளி இருக்காங்களே வெளி உலகம் தெரியாம வளந்தவங்க இப்ப கல்யாணம் ஆகி வீட்டுக்காரர் டூவீலர்ல மதுரய சுத்துறாங்க. அவங்க சொந்தகாரங்க வீட்டு விசேஷம் - ராமநாதபுரம் மாவட்டத்துல மதுரய விட்டு வெளி மாவட்டத்துக்கு டூவீலர்ல வீட்டுக்காரரோட சந்தோஷமா போறாங்க. போக வேண்டிய ஊருக்கு போற வழில ஜிலு ஜிலுன்னு காத்து, மழை. போன எடத்துல இருட்டாயிடுச்சு, மழை வேற பெய்யுது, "தங்கிட்டு போங்கன்னு சொல்றாங்க". வள்ளி வீட்டுக்காரரோட அங்க தங்கிர்றாங்க. விடிய விடிய காத்து மழை. வள்ளி சந்திக்காத Climate. அடுத்த நாள் அந்த Climate, எடத்த விட்டு பிரிய மனசில்லாம அங்கருந்து கெளம்பி மதுரைக்கு வந்து வேலைக்கும் வந்துர்றாங்க. மதுரைல அணலடிக்குது. வெக்கை தாங்க முடியாம வள்ளி முனியப்பன்கிட்ட, "நீங்கல்லாம் எப்படித்தான் மதுரைல இருக்கீங்களோ அங்கல்லாம் குளு குளுன்னு இருக்கு". ராமநாதபுரத்த பத்தி அவங்களுக்கு ஊட்டி மாதிரி ஒரு எண்ணம் உண்டாயிடுச்சு. அவங்க அனுபவிச்ச Climateஐ ரசிச்சு சொல்றாங்க. முனியப்பனுக்கு சிரிப்பு வராம என்ன செய்யும்?. லைலா புயல் கடலோர மாவட்டங்கள்ல காத்தோட மழைய குடுத்துச்சு. வள்ளி ராமநாதபுரம் மாவட்டத்துக்கு போனப்ப லைலா புயலோட எபக்ட் அங்க. அதனால தான்,
புயலடிச்சா மழை பெய்ற ராமநாதபுரத்துல, மழையும் காத்தும். முனியப்பன் ராமநாத புரம், லைலா புயலை வள்ளிக்கிட்ட சொன்னார். மனசுல பட்டத முன்ன பின்ன யோசிக்காம சொல்றதுதான் வள்ளியோட ஸ்டைல்.
புயலடிச்சா மழை பெய்ற ராமநாதபுரத்துல, மழையும் காத்தும். முனியப்பன் ராமநாத புரம், லைலா புயலை வள்ளிக்கிட்ட சொன்னார். மனசுல பட்டத முன்ன பின்ன யோசிக்காம சொல்றதுதான் வள்ளியோட ஸ்டைல்.
Wednesday, May 19, 2010
நெனச்சு கலலைப்படுறியா - அஷீ
முனியப்பனின் அய்யாம்மா (அப்பாவை பெத்த மகராசி) குருவம்மா 7 பிள்ளையை பெத்துட்டு 1939ல இறந்துர்றாங்க. அவங்க மகன் (முனியப்பனோட அப்பா) கு. வேலுசாமி நீதித்துறையில பணியாற்றினதால முனிப்பபனும் பல ஊர்கள்ல படிச்சு வளர்ந்தார். அதனால சொந்தங்களோட உறவாடி வளர முனிப்பனுக்கு வாய்ப்பில்லாம போயிடுச்சு. கால்பரிட்சை, அரைப்பரிட்சை, முழுப்பரிட்சை விடுமுறையில மட்டும் சொந்தங்களை பார்க்க வாய்ப்பு. அதுலயும் மதுரை, M.கல்லுப்பட்டி, போடி, மூணார்னு ஒரு ரவுண்ட் சொந்தங்களை முழுமையா உணர முடியலை.
இதுல முனிப்பனுக்கு ஆச்சியும் (அம்மாவோட அம்மா) கெடையாது. அய்யாம்மா, ஆச்சி அரவணைப்பு இல்லாம வளர்ந்ததால முனியப்பனுக்கு அந்த ஏக்கம் இருந்துச்சு. இப்படியே பலகாலம் ஓடிருச்சு. ஆச்சி போட்டோ இருக்கு, அய்யாம்மா போட்டோ லேது.
அய்யாம்மா நினைவு மனசுல ஒரு ஓரத்துல இருந்ததால அய்யாம்மவோட குல தெய்வத்தை ரெண்டு வருஷத்துக்கு முன்னால பார்க்க போனார் முனியப்பன். தங்கச்சி, மாப்பிள்ளை, அஷீ, அமரை கூப்பிட்டுகிட்டுத்தான். கோவில் கற்குவேல் அய்யனார் கோவில், இடம். திருச்செந்தூர் அருகே காயா மொழி தாண்டி தேரிக்குடியிருப்பு. தெக்கத்தி சீமைல ஒரு துடிப்பான கோவில்.
அய்யாம்மா கோவிலுக்கு போயிட்டு வந்தாச்சு. அய்யாம்மா படத்தை தேட ஆரம்பிச்சார் முனியப்பன். 75 வருஷத்துக்கு முன்னால வாழ்ந்தவங்க. அதுலயும் ஒரு கிராமத்துல , படிப்பறிவே இல்லாத நேரத்துல போட்டோ எப்படி? முனியப்பன் சோர்ந்து போயிட்டார்.
அய்யாம்மாவை தேடி முனியப்பன் அலையறதை பாத்துகிட்டே இருக்கார் அஷீக்குட்டி. திடீர்னு ஒரு நாள் அய்யாம்மா போட்டோ ஒரு எடத்துல இருக்குன்னு தகவல். முனியப்பனால சும்மா இருக்க முடியுமா? ஒடனே போய் போட்டோவை லபக்கிட்டு வந்துடறார். தூக்கிட்டு வந்த போட்டோவை ஸ்டுடியோவுல குடுத்து Full Size, Half Size னு எடுக்கிறார்.
அய்யாம்மா போட்டோ நாளைக்கு வந்துரும்னு முனியப்பன் தன்னோட அம்மாகிட்ட பேசிக்கிட்டு இருந்தத பார்த்த அஷீக்குட்டி "அய்யாம்மாவ நெனைச்சு கவலைப்படுறியாக்கும்" னு சொல்லிட்டு போய்ட்டார். முனியப்பனுக்கும், அவர் அம்மாவுக்கும் சிரிப்பு தாங்கலை. இந்த விஷயத்தை ஆரம்பத்திலிருந்தே கவனிச்சுகிட்டிருந்த அஷீக்குட்டி தன்னோட கருத்தை எப்படி சொன்னார் பாத்தீங்களா, இப்பல்லாம் சின்னப் பிள்ளைங்க இல்ல, சூப்பர் பிள்ளைங்க.
இதுல முனிப்பனுக்கு ஆச்சியும் (அம்மாவோட அம்மா) கெடையாது. அய்யாம்மா, ஆச்சி அரவணைப்பு இல்லாம வளர்ந்ததால முனியப்பனுக்கு அந்த ஏக்கம் இருந்துச்சு. இப்படியே பலகாலம் ஓடிருச்சு. ஆச்சி போட்டோ இருக்கு, அய்யாம்மா போட்டோ லேது.
அய்யாம்மா நினைவு மனசுல ஒரு ஓரத்துல இருந்ததால அய்யாம்மவோட குல தெய்வத்தை ரெண்டு வருஷத்துக்கு முன்னால பார்க்க போனார் முனியப்பன். தங்கச்சி, மாப்பிள்ளை, அஷீ, அமரை கூப்பிட்டுகிட்டுத்தான். கோவில் கற்குவேல் அய்யனார் கோவில், இடம். திருச்செந்தூர் அருகே காயா மொழி தாண்டி தேரிக்குடியிருப்பு. தெக்கத்தி சீமைல ஒரு துடிப்பான கோவில்.
அய்யாம்மா கோவிலுக்கு போயிட்டு வந்தாச்சு. அய்யாம்மா படத்தை தேட ஆரம்பிச்சார் முனியப்பன். 75 வருஷத்துக்கு முன்னால வாழ்ந்தவங்க. அதுலயும் ஒரு கிராமத்துல , படிப்பறிவே இல்லாத நேரத்துல போட்டோ எப்படி? முனியப்பன் சோர்ந்து போயிட்டார்.
அய்யாம்மாவை தேடி முனியப்பன் அலையறதை பாத்துகிட்டே இருக்கார் அஷீக்குட்டி. திடீர்னு ஒரு நாள் அய்யாம்மா போட்டோ ஒரு எடத்துல இருக்குன்னு தகவல். முனியப்பனால சும்மா இருக்க முடியுமா? ஒடனே போய் போட்டோவை லபக்கிட்டு வந்துடறார். தூக்கிட்டு வந்த போட்டோவை ஸ்டுடியோவுல குடுத்து Full Size, Half Size னு எடுக்கிறார்.
அய்யாம்மா போட்டோ நாளைக்கு வந்துரும்னு முனியப்பன் தன்னோட அம்மாகிட்ட பேசிக்கிட்டு இருந்தத பார்த்த அஷீக்குட்டி "அய்யாம்மாவ நெனைச்சு கவலைப்படுறியாக்கும்" னு சொல்லிட்டு போய்ட்டார். முனியப்பனுக்கும், அவர் அம்மாவுக்கும் சிரிப்பு தாங்கலை. இந்த விஷயத்தை ஆரம்பத்திலிருந்தே கவனிச்சுகிட்டிருந்த அஷீக்குட்டி தன்னோட கருத்தை எப்படி சொன்னார் பாத்தீங்களா, இப்பல்லாம் சின்னப் பிள்ளைங்க இல்ல, சூப்பர் பிள்ளைங்க.
Tuesday, April 27, 2010
400 ரூபா - Bell's Palsy
மீனாட்சி சுந்தரம் மதுரை TVSல வேல பாத்து ரிட்டயர் ஆயிர்றாரு. அவருக்கு 3 மகன்ங்க. அவர் சம்பாதிச்ச 25 லட்ச ரூபா வீட்டை மகன்க 3 பேருக்கும் எழுதி வச்சுர்றார். மகன்களோட அதே வீட்ல குடியிருக்கார். சாப்பாடு மகன்க வீட்ல.
தமிழக அரசால் மாதாமாதம் வழங்கப்படும் முதியோர் உதவித் தொகையான ரூ.400 அவர் காபி செலவுக்கு. திடீர்னு அவருக்கு Bell's Palsy எனும் தலையிலுள்ள நரம்பு தாக்கம் ஆகுது. வாய் கோணிக்கிது, எச்சி ஒழுகுது. ஒரு கண்ணை மூட முடியல.
மகன் 4 நாள் அவரை TVS ஆஸ்பத்திரில கூப்பிட்டுக் கொண்டு போய் 4 கரண்ட் (Faradic Stimulation) வச்சு விடுறார். அதுக்கப்புறம் கூப்பிட்டுப்போக மாட்டேங்கிறார்.ஏன்னா, அவருக்கு வைத்தியத்துக்கான உச்ச வரம்பு ரூ.5000 மட்டும். அப்பனுக்குப் பாத்தா, பிள்ளைகளுக்கு ஒண்ணுன்னா என்ன செய்யறது?
மகன் கைவிட்டாச்சு, மீனாட்சி சுந்தரம் என்ன செய்வார்? முனியப்பன் கிட்ட வர்றார். நெலமைய சொல்றார். முனியப்பன் "பெரிய ஆஸ்பத்திரிக்கு போகலாமில்ல". மீனாட்சி சுந்தரம் அழுக ஆரம்பிச்சுர்றார். பெரிய ஆஸ்பத்திரிக்குப் போக பஸ்ஸூக்கு காசு வேணும்ல, சும்மாவா ஏத்திட்டுப் போவாங்க.
அவரோட நெலமையப் பாருங்க, பெத்த பிள்ளைங்க 3 பேரு, வீடு குடுத்திருக்காரு, சோறு மட்டும் போடுவாங்க, அதோட நிப்பாட்டிக்கணும்.
கலி காலமய்யா .... !
தமிழக அரசால் மாதாமாதம் வழங்கப்படும் முதியோர் உதவித் தொகையான ரூ.400 அவர் காபி செலவுக்கு. திடீர்னு அவருக்கு Bell's Palsy எனும் தலையிலுள்ள நரம்பு தாக்கம் ஆகுது. வாய் கோணிக்கிது, எச்சி ஒழுகுது. ஒரு கண்ணை மூட முடியல.
மகன் 4 நாள் அவரை TVS ஆஸ்பத்திரில கூப்பிட்டுக் கொண்டு போய் 4 கரண்ட் (Faradic Stimulation) வச்சு விடுறார். அதுக்கப்புறம் கூப்பிட்டுப்போக மாட்டேங்கிறார்.ஏன்னா, அவருக்கு வைத்தியத்துக்கான உச்ச வரம்பு ரூ.5000 மட்டும். அப்பனுக்குப் பாத்தா, பிள்ளைகளுக்கு ஒண்ணுன்னா என்ன செய்யறது?
மகன் கைவிட்டாச்சு, மீனாட்சி சுந்தரம் என்ன செய்வார்? முனியப்பன் கிட்ட வர்றார். நெலமைய சொல்றார். முனியப்பன் "பெரிய ஆஸ்பத்திரிக்கு போகலாமில்ல". மீனாட்சி சுந்தரம் அழுக ஆரம்பிச்சுர்றார். பெரிய ஆஸ்பத்திரிக்குப் போக பஸ்ஸூக்கு காசு வேணும்ல, சும்மாவா ஏத்திட்டுப் போவாங்க.
அவரோட நெலமையப் பாருங்க, பெத்த பிள்ளைங்க 3 பேரு, வீடு குடுத்திருக்காரு, சோறு மட்டும் போடுவாங்க, அதோட நிப்பாட்டிக்கணும்.
கலி காலமய்யா .... !
Monday, April 19, 2010
நீங்கதான் சொன்னீங்களாம்ல ...?!!!
முனியப்பனுக்கு நேரும் நோயாளி அனுபவங்கள் வித்தியாசமா இருக்கும்.
20 நாளைக்கு முன்னால ஒரு பாட்டிக்கு வயித்தால ஓடுது. பெரிய இடத்துப் பாட்டி - 80 வயசு. முனியப்பன் வள்ளிய அவங்க வீட்டுக்கு அனுப்பி, வயித்தால நிக்கிறதுக்கு ஊசி போட்டு, மாத்திரை குடுத்து அனுப்பியும் வயித்தால ஓடுது, நிக்கல.
முனியப்பன் பாட்டிய பெட்ல சேத்து ட்ரீட்மெண்ட் பாக்க சொல்றார். பதிலே இல்லை. 4 நாள் கழிச்சு பாட்டிய பாக்க கூப்பிட்டு விடுறாங்க, வள்ளி போய் பாட்டிய பாத்தா Dead.
அப்புறம் ஒருநாள் கழிச்சு அந்த பெரிய இடத்துக்கு போய்ட்டு வர்ற ஆள் ஒருத்தர் ட்ரீட்மெண்டுக்கு வர்றார், அவருக்கான வைத்தியம் முடிஞ்சவுடனே பாட்டிய பத்தி பேசுனார். அப்ப ஒரு குண்டத் தூக்கி போட்டார் பாருங்க 'பாட்டி பொழைக்காது, ட்ரீட்மெண்ட் பாக்காதீங்கன்னு நீங்கதான் சொன்னீங்களாம்ல' அப்படின்னு.
பாட்டிய வைத்தியம் பார்க்க மனசில்லாம, போக விட்டுட்டு அதுக்கு ஒரு சப்பைக்கட்டு. பார்த்தீங்களா கொடுமையை.
20 நாளைக்கு முன்னால ஒரு பாட்டிக்கு வயித்தால ஓடுது. பெரிய இடத்துப் பாட்டி - 80 வயசு. முனியப்பன் வள்ளிய அவங்க வீட்டுக்கு அனுப்பி, வயித்தால நிக்கிறதுக்கு ஊசி போட்டு, மாத்திரை குடுத்து அனுப்பியும் வயித்தால ஓடுது, நிக்கல.
முனியப்பன் பாட்டிய பெட்ல சேத்து ட்ரீட்மெண்ட் பாக்க சொல்றார். பதிலே இல்லை. 4 நாள் கழிச்சு பாட்டிய பாக்க கூப்பிட்டு விடுறாங்க, வள்ளி போய் பாட்டிய பாத்தா Dead.
அப்புறம் ஒருநாள் கழிச்சு அந்த பெரிய இடத்துக்கு போய்ட்டு வர்ற ஆள் ஒருத்தர் ட்ரீட்மெண்டுக்கு வர்றார், அவருக்கான வைத்தியம் முடிஞ்சவுடனே பாட்டிய பத்தி பேசுனார். அப்ப ஒரு குண்டத் தூக்கி போட்டார் பாருங்க 'பாட்டி பொழைக்காது, ட்ரீட்மெண்ட் பாக்காதீங்கன்னு நீங்கதான் சொன்னீங்களாம்ல' அப்படின்னு.
பாட்டிய வைத்தியம் பார்க்க மனசில்லாம, போக விட்டுட்டு அதுக்கு ஒரு சப்பைக்கட்டு. பார்த்தீங்களா கொடுமையை.
Tuesday, April 6, 2010
மொட்டை- லட்சன்
நான் ஏன் மொட்டை அடிச்சிருக்கேன் தெரியுமா ? - லட்சன்
முனியப்பன் மக்களிடம் வெகு நெருக்கமாகப் பழகக்கூடியவர். வயது வித்தியாசமின்றி அவரது நட்பு வட்டாரம் பரந்தது. அப்படி நெருக்கமானவன் லட்சன் ஆதித்யா. வயது 7.
லட்சன் துறுதுறு பையன். அவனோட தாத்தாவுக்கு Pet. தாத்தா ராமலிங்கமும் லட்சன் மேல் உயிரானவர். 39 வயதான லட்சனின் தந்தை திடீரென ஹார்ட் அட்டாக்கில் உயிரிழக்கிறார். குடும்பத்துக்கே அதிர்ச்சி.
சிறிதுநாள் கழித்து முனியப்பனிடம் ட்ரீட்மெண்டுக்கு வந்த லட்சன் முனியப்பனிடம் சொன்னது நான் "ஏன் மொட்டை அடிச்சிருக்கேன் தெரியுமா? எங்கப்பா செத்துப்போயிட்டார்"
லட்சனைத் தேற்ற வார்த்தைகள் இல்லாமல் முதுகில் தட்டிக் கொடுத்தார் முனியப்பன்.
முனியப்பன் மக்களிடம் வெகு நெருக்கமாகப் பழகக்கூடியவர். வயது வித்தியாசமின்றி அவரது நட்பு வட்டாரம் பரந்தது. அப்படி நெருக்கமானவன் லட்சன் ஆதித்யா. வயது 7.
லட்சன் துறுதுறு பையன். அவனோட தாத்தாவுக்கு Pet. தாத்தா ராமலிங்கமும் லட்சன் மேல் உயிரானவர். 39 வயதான லட்சனின் தந்தை திடீரென ஹார்ட் அட்டாக்கில் உயிரிழக்கிறார். குடும்பத்துக்கே அதிர்ச்சி.
சிறிதுநாள் கழித்து முனியப்பனிடம் ட்ரீட்மெண்டுக்கு வந்த லட்சன் முனியப்பனிடம் சொன்னது நான் "ஏன் மொட்டை அடிச்சிருக்கேன் தெரியுமா? எங்கப்பா செத்துப்போயிட்டார்"
லட்சனைத் தேற்ற வார்த்தைகள் இல்லாமல் முதுகில் தட்டிக் கொடுத்தார் முனியப்பன்.
Subscribe to:
Posts (Atom)
