4 வயசு Ashuக் குட்டி முனியப்பன் தங்கச்சி மகன். அவனும் அவன் அண்ணன் 7 வயசு அமரும் முனியப்பனைப் பாடாப் படுத்திருவானுக. இரவு 10.30க்கு நைட் ரவுண்ட்ஸ் டூ வீலர்ல. Ashu கையக் காட்டுற பக்கம் எல்லாம் வண்டிய ஓட்டிட்டுப் போகனும் (ஆளுக, போக்குவரத்து குறைவான பகுதி தான்). ரவுண்ட்ஸ் முடிஞ்ச உடனே வெளையாட்டு.
இப்ப ரெண்டு நாளா Boxing நடக்குது. 4 வயசு Ashuவும் முனியப்பனும் மோதுவாங்க. எடம் முனியப்பனின் படுக்கை. 7 வயசு அமர் நடுவர். Boxing 11 ரவுண்ட், 1 ரவுண்டுக்கு 1 பாயிண்ட். அதுல யார் ஃபர்ஸ்ட் 6 ரவுண்ட் ஜெயிக்கிறாங்களோ, அவங்க தான் வின்னர். குத்துச் சண்டை வீரர்கள் குதிக்கிற மாதிரி Ashuவும் முனியப்பனும் குதிப்பாங்க. போட்டிக்கு முன்னால Ashu கையவும், முனியப்பன் கையவும் பிடிச்சு Shake Hands குடுக்க வைப்பார் அமர். போட்டி துவங்கறப்ப மொதல்ல இப்பிடி வர்ணனை குடுப்பார் அமர். "இப்ப டாக்டர் முனியப்பனும் டாக்டர் Ashuவும் சண்டை போடப் போகிறாங்க, Action"ம்பார்.
Actionன உடனே Ashuவும் முனியப்பனும் குத்துக்களை விட ஆரம்பிச்சிருவாங்க. Ashu குத்தின ஒடனே முனியப்பன் கீழே விழுந்துருவார். Ashu 1 பாயிண்ட். அடுத்து முனியப்பன் Ashuவைக் கீழே தள்ளிவிட்ருவார், முனியப்பன் 1 பாயிண்ட். Ashu 2 முனியப்பன் 2 வந்த ஒடனே Ashu கண்ணு கலங்கிரும். அடுத்த ரவுண்ட்ல எல்லாம் Ashu குத்துக்கு முனியப்பன் கீழே விழுந்துருவார். 6 பாயிண்ட் Ashu எடுத்துருவார். நடுவர் அமர், "Ashu 6 பாயிண்ட் எடுத்து வின்னர் ஆயிட்டார்"னு முடிவை அறிவிப்பார்.
அப்ப Ashuவோட நடையைப் பாக்கணும். வெற்றி நடை, துள்ளல் நடை, வாயெல்லாம் சிரிப்பு, "ஹே"ன்னு ஒரு சத்தம். குழந்தைகளைக் குதூகலப்படுத்திப் பார்ப்பது தனி இன்பம்......
Tuesday, June 2, 2009
Sunday, May 24, 2009
நக்காரணர்
நக்காரணர்...கேள்விப்படாத பேரா இருக்கா. பழந்தமிழர்கள் கையாண்ட வார்த்தை இது.
பழந்தமிழர்கள் 'திரை கடலோடியும் திரவியம் தேடு' என்று பல தேசங்களுக்கு கடல் மார்க்கமாக சென்று வணிகம் செய்தனர். முக்கியமாக, ரோம், சீனா, மலேசியா, ஜாவா, சுமத்ரா,
வங்காளவிரிகுடா மார்க்கமாக அவர்கள் பயணம் செய்யும் பொழுது அந்தமான், நிக்கோபார் தீவுகள் வழியாக செல்லும் பொழுது மனிதனை தின்னக் கூடிய ஆதிவாசிகளை கடந்திருக்கின்றனர். அவர்களை 'நக்காரணர்' என்றழைத்தனர். இன்று ஜாரவாஸ், சென்டினல்ஸ் எனப்படும் பூர்வீக குடிகள். அவர்களில் இன்று ஜாரவாஸ் திருந்தியிருக்கின்றனர். இன்னும் சென்டினல்ஸ் குடிகள் அதே குணத்தோடு தான் இருக்கின்றனர். அவர்களை தொந்தரவு பண்ணாமல் அவர்களுடைய பழக்க வழக்கங்கள் மாறாமல், கண்காணிப்பில் இந்திய அரசாங்கம் வைத்திருக்கிறது.
ஜாரவாஸ், சென்டினல்ஸ் இந்த இரு பூர்வீக குடிகளும் இன்னும் ஆடை அணியும் பழக்கமில்லாதவர்கள். ஜாரவாஸ் மட்டும் மற்ற மனிதர்களோடு பழகத் தொடங்கியிருக்கின்றனர். சுனாமியை மறந்திருக்க மாட்டீர்கள். அப்பொழுது சென்டினல்ஸ் வசிக்கும் தீவை பார்வையிடச் சென்ற இராணுவ ஹெலிகாப்டரை ஆடையில்லாத சென்டினல்ஸ் பழங்குடி ஒருவர் கையில் உள்ள மிக நீளமான ஈட்டியால் துரத்துவது படம் பிடிக்கப்பட்டு, ஆங்கில நாளேடான ஹிந்துவில் பிரசுரமாகியிருந்தது. அந்த பழங்குடியின் ஆக்ரோஷம் 21ம் நூற்றாண்டில் இப்படி இருக்கும் போது பண்டைய காலத்தில் எப்படி இருந்திருப்பார்கள்.
வியாபார நிமித்தம் கப்பலில் செல்பவர்கள் அந்த பக்கம் போக வேண்டாம் என்று சிலப்பதிகாரத்திலும் குறிப்பிருக்கிறது. நக்காரணர்களிடம் மாட்டி தப்பித்து வந்தவர்களின் கதைகளும் சொல்லப்படுகிறது.
பழந்தமிழரின் வணிகம், மனிதனை சாப்பிடும் பூர்வீக குடிகளை பற்றிய அவர்களது அனுபவம், நக்காரணர் என்று அவர்களுக்கு பெயர் சூட்டியது, இன்னும் அந்த பூர்வீக குடிகள் அங்கே இருப்பது. அதை காலச் சுவட்டில் பதிவு செய்தது, பழந்தமிழர்களுக்கு ஒரு சல்யூட்
பழந்தமிழர்கள் 'திரை கடலோடியும் திரவியம் தேடு' என்று பல தேசங்களுக்கு கடல் மார்க்கமாக சென்று வணிகம் செய்தனர். முக்கியமாக, ரோம், சீனா, மலேசியா, ஜாவா, சுமத்ரா,
வங்காளவிரிகுடா மார்க்கமாக அவர்கள் பயணம் செய்யும் பொழுது அந்தமான், நிக்கோபார் தீவுகள் வழியாக செல்லும் பொழுது மனிதனை தின்னக் கூடிய ஆதிவாசிகளை கடந்திருக்கின்றனர். அவர்களை 'நக்காரணர்' என்றழைத்தனர். இன்று ஜாரவாஸ், சென்டினல்ஸ் எனப்படும் பூர்வீக குடிகள். அவர்களில் இன்று ஜாரவாஸ் திருந்தியிருக்கின்றனர். இன்னும் சென்டினல்ஸ் குடிகள் அதே குணத்தோடு தான் இருக்கின்றனர். அவர்களை தொந்தரவு பண்ணாமல் அவர்களுடைய பழக்க வழக்கங்கள் மாறாமல், கண்காணிப்பில் இந்திய அரசாங்கம் வைத்திருக்கிறது.
ஜாரவாஸ், சென்டினல்ஸ் இந்த இரு பூர்வீக குடிகளும் இன்னும் ஆடை அணியும் பழக்கமில்லாதவர்கள். ஜாரவாஸ் மட்டும் மற்ற மனிதர்களோடு பழகத் தொடங்கியிருக்கின்றனர். சுனாமியை மறந்திருக்க மாட்டீர்கள். அப்பொழுது சென்டினல்ஸ் வசிக்கும் தீவை பார்வையிடச் சென்ற இராணுவ ஹெலிகாப்டரை ஆடையில்லாத சென்டினல்ஸ் பழங்குடி ஒருவர் கையில் உள்ள மிக நீளமான ஈட்டியால் துரத்துவது படம் பிடிக்கப்பட்டு, ஆங்கில நாளேடான ஹிந்துவில் பிரசுரமாகியிருந்தது. அந்த பழங்குடியின் ஆக்ரோஷம் 21ம் நூற்றாண்டில் இப்படி இருக்கும் போது பண்டைய காலத்தில் எப்படி இருந்திருப்பார்கள்.
வியாபார நிமித்தம் கப்பலில் செல்பவர்கள் அந்த பக்கம் போக வேண்டாம் என்று சிலப்பதிகாரத்திலும் குறிப்பிருக்கிறது. நக்காரணர்களிடம் மாட்டி தப்பித்து வந்தவர்களின் கதைகளும் சொல்லப்படுகிறது.
பழந்தமிழரின் வணிகம், மனிதனை சாப்பிடும் பூர்வீக குடிகளை பற்றிய அவர்களது அனுபவம், நக்காரணர் என்று அவர்களுக்கு பெயர் சூட்டியது, இன்னும் அந்த பூர்வீக குடிகள் அங்கே இருப்பது. அதை காலச் சுவட்டில் பதிவு செய்தது, பழந்தமிழர்களுக்கு ஒரு சல்யூட்
Tuesday, May 12, 2009
பேப்பர் சீனிவாசன் - எதுக்குன்னு புரியலை
பேப்பர் சீனிவாசன். பேப்ர் போடுறவன். 32 வயசு. பேப்பர் ஏஜென்சி எடுத்து நாளிதழ்கள், வார இதழ்கள், வீடுவீடாப் போடுறவன். பெட்டிக் கடை வச்சிருக்கான். அதுலயும் நாளிதழ், பத்திரிகைகள். பெட்டிக்கடை வச்சா சிகரெட், மிட்டாய் விக்கணும்ல, உண்டு. மெயின் தொழில் பேப்பர், புக்.
மொதல்ல வீடு வீடா பேப்பர் போடுறதுக்கு சீனிவாசன்ட்ட ரெண்டு பயலுக சம்பளத்துக்கு இருந்தாய்ங்க. 5 லைன், அதுல 4 லைன்ல பயலுவ பேப்பர் போடுவாய்ங்க. சீனிவாசன் 1 லைன் பேப்பர் போடுவான். இப்பத்தான் வேலைக்கு எல்லா இடத்துலயும் பயலுக கெடைக்க மாட்டேன்கிறாங்களே. சீனிவாசன்கிட்ட ஒரு வரு\மா பயலுக பேப்பர் போடுறதுக்கு இல்லை. அதுனால அவனே 5 லைன்லயும் பேப்பர் போடுறான். கடின உழைப்பாளி.
தலைப்புக்கான விஷயத்துக்கு வருவோமா ... எல்லா எடத்துலயும் மொத மாசம் போட்ட பேப்பருக்கு பில்லைப் போட்டுக் காசை வாங்கிடுவான் சீனிவாசன். முனியப்பன்கிட்டயும் மொதல்ல பேப்பர் காசை வாங்கிக்கிட்டிருந்தவன் இப்ப பேப்பர் போடுறதுக்குள்ள ரூபாயை வாங்காம பேப்பர் போட்டுக்கிட்டிருக்கான் 5 வருஷமா. "என்னப்பான்னா ?" "இந்தா வாங்கிக்கிடுறேன் சார்" அப்படிம்பான் அவ்வளவு தான்.
முனியப்பன் கிளினிக்ல தான் இப்படின்னா, முனியப்பன் அம்மாகிட்டயும் பேப்பர் ரூவா வாங்க மாட்டேங்கிறான். அடுத்த வீட்ல பில் போட்டு ரூவா வாங்கிக்கிட்ருப்பான். முனியப்பன் அம்மா "சீனிவாசா, இங்க வந்து ரூவா வாங்கிட்டுப் போ" அப்படிம்பாங்க. அங்கயும் "இந்தா வாரேம்மா" அப்படிம்பான். முனியப்பன் அம்மா வீட்டுக்குள்ள போயி நரூவா எடுத்துட்டு வருவாங்க.சீனிவாசன் escape ஆயிருப்பான். இதுவரைக்கும் சீனிவாசன், முனியப்பன்கிட்டயும் முனியப்பன் அம்மாக்கிட்டயும் தினத்தந்தி, ஹிண்டு, தினமணி நாளிதழ்கள் போட்டதுக்கு வாங்க வேண்டியது ரூ 12,000 (பனிரெண்டாயிரம்).
ஏன் வாங்காம இருக்கான்னு அவன்கிட்டயும் கேட்டுப் பாத்தாச்சு. சிரிச்சிட்டு ஓடிருவான் சீனிவாசன். அதுக்கான காரணம் புரியலை. 1. அவன் கல்யாணத்துக்குப் பணம் சேக்குறானா 2. பேங்க விட முனியப்பன், முனியப்பன் அம்மாகிட்ட பணம் இருக்கது பாதுகாப்பானதுன்னு நெனக்கிறானா ? 3. முனியப்பனுக்கு இலவசமா பேப்பர் போட வேற யாரும் பணம் கட்டுறாங்களா ? (சான்ஸே இல்லை).
இப்படி முனியப்பன் மனசுக்குள்ள பல கேள்விகள். இது வரைக்கும் விடை கிடைக்கலை. ஒங்க மனசுல ஏதும் தோணுதா.... ?
மொதல்ல வீடு வீடா பேப்பர் போடுறதுக்கு சீனிவாசன்ட்ட ரெண்டு பயலுக சம்பளத்துக்கு இருந்தாய்ங்க. 5 லைன், அதுல 4 லைன்ல பயலுவ பேப்பர் போடுவாய்ங்க. சீனிவாசன் 1 லைன் பேப்பர் போடுவான். இப்பத்தான் வேலைக்கு எல்லா இடத்துலயும் பயலுக கெடைக்க மாட்டேன்கிறாங்களே. சீனிவாசன்கிட்ட ஒரு வரு\மா பயலுக பேப்பர் போடுறதுக்கு இல்லை. அதுனால அவனே 5 லைன்லயும் பேப்பர் போடுறான். கடின உழைப்பாளி.
தலைப்புக்கான விஷயத்துக்கு வருவோமா ... எல்லா எடத்துலயும் மொத மாசம் போட்ட பேப்பருக்கு பில்லைப் போட்டுக் காசை வாங்கிடுவான் சீனிவாசன். முனியப்பன்கிட்டயும் மொதல்ல பேப்பர் காசை வாங்கிக்கிட்டிருந்தவன் இப்ப பேப்பர் போடுறதுக்குள்ள ரூபாயை வாங்காம பேப்பர் போட்டுக்கிட்டிருக்கான் 5 வருஷமா. "என்னப்பான்னா ?" "இந்தா வாங்கிக்கிடுறேன் சார்" அப்படிம்பான் அவ்வளவு தான்.
முனியப்பன் கிளினிக்ல தான் இப்படின்னா, முனியப்பன் அம்மாகிட்டயும் பேப்பர் ரூவா வாங்க மாட்டேங்கிறான். அடுத்த வீட்ல பில் போட்டு ரூவா வாங்கிக்கிட்ருப்பான். முனியப்பன் அம்மா "சீனிவாசா, இங்க வந்து ரூவா வாங்கிட்டுப் போ" அப்படிம்பாங்க. அங்கயும் "இந்தா வாரேம்மா" அப்படிம்பான். முனியப்பன் அம்மா வீட்டுக்குள்ள போயி நரூவா எடுத்துட்டு வருவாங்க.சீனிவாசன் escape ஆயிருப்பான். இதுவரைக்கும் சீனிவாசன், முனியப்பன்கிட்டயும் முனியப்பன் அம்மாக்கிட்டயும் தினத்தந்தி, ஹிண்டு, தினமணி நாளிதழ்கள் போட்டதுக்கு வாங்க வேண்டியது ரூ 12,000 (பனிரெண்டாயிரம்).
ஏன் வாங்காம இருக்கான்னு அவன்கிட்டயும் கேட்டுப் பாத்தாச்சு. சிரிச்சிட்டு ஓடிருவான் சீனிவாசன். அதுக்கான காரணம் புரியலை. 1. அவன் கல்யாணத்துக்குப் பணம் சேக்குறானா 2. பேங்க விட முனியப்பன், முனியப்பன் அம்மாகிட்ட பணம் இருக்கது பாதுகாப்பானதுன்னு நெனக்கிறானா ? 3. முனியப்பனுக்கு இலவசமா பேப்பர் போட வேற யாரும் பணம் கட்டுறாங்களா ? (சான்ஸே இல்லை).
இப்படி முனியப்பன் மனசுக்குள்ள பல கேள்விகள். இது வரைக்கும் விடை கிடைக்கலை. ஒங்க மனசுல ஏதும் தோணுதா.... ?
Friday, May 8, 2009
Case Sheet (முனியப்பனும் 'தல' யும்)
முனியப்பன் மதுரையில் ஒரு பொது மருத்துவர். அவரிடம் ஒரு விநோதமான கேஸ்.
மாலை 7 மணி இருக்கும். முனியப்பனின் பரபரப்பான ஆலோசனை நேரம். ஒரு பெண்ணை, 30-32 வயசு இருக்கும். ஒருத்தர் சிகிச்சைக்காகக் கூப்பிட்டு வர்றார். அந்தப் பொண்ணு கிடுகிடுன்னு நடுங்குது, பேச்சு வரல. என்னன்னு கேட்டா ... கூப்பிட்டு
வந்த ஆளும் சரியா சொல்ல மாட்டேங்கிறார். முனியப்பன் பரிசோதிச்சுப் பாத்துட்டு "இவங்க அதிர்ச்சில (shock) இருக்காங்க" னு சொல்லிட்டு, ஊசி போட்டு மாத்திரை கொடுத்து அனுப்புறார்.
ஒரு மணி நேரம் கழிச்சு அந்தப் பெண்ணோட அதிர்ச்சிக்கு காரணம் தெரிய வருது.
அந்தப் பொண்ணு வீட்ல இருந்த கெளம்பி ஒரு விஷேஷத்துக்கு போறதுக்காக மெயின் ரோட்ல நடந்து கிட்டு இருக்கு, நடந்து வரும் போது குனிஞ்சு பாக்காம நடக்குதா... ஒரு பொருளை கால்ல எத்திருது. வித்தியாசம இருக்கே .... என்னத்த எத்தினோம்னு குனிஞ்சு பாக்குது. அந்தப் பொண்ணு எத்தினது மனித 'தல'. அப்புறம் எப்படி shock அடிக்காம இருக்கும் ....... ?
பழிக்குப் பழியா நடந்த கொலை சம்பவம் அது. ஒரு எடத்துல கொலய பண்ணிட்டு, ஏற்கனவே 2 வருஷத்துக்கு முன்னால கொலை நடந்த எடத்துல, தலய மட்டும் கொண்டு வந்து வச்சி, கணக்க நேர் பண்ணிட்டாங்க ........... !
மாலை 7 மணி இருக்கும். முனியப்பனின் பரபரப்பான ஆலோசனை நேரம். ஒரு பெண்ணை, 30-32 வயசு இருக்கும். ஒருத்தர் சிகிச்சைக்காகக் கூப்பிட்டு வர்றார். அந்தப் பொண்ணு கிடுகிடுன்னு நடுங்குது, பேச்சு வரல. என்னன்னு கேட்டா ... கூப்பிட்டு
வந்த ஆளும் சரியா சொல்ல மாட்டேங்கிறார். முனியப்பன் பரிசோதிச்சுப் பாத்துட்டு "இவங்க அதிர்ச்சில (shock) இருக்காங்க" னு சொல்லிட்டு, ஊசி போட்டு மாத்திரை கொடுத்து அனுப்புறார்.
ஒரு மணி நேரம் கழிச்சு அந்தப் பெண்ணோட அதிர்ச்சிக்கு காரணம் தெரிய வருது.
அந்தப் பொண்ணு வீட்ல இருந்த கெளம்பி ஒரு விஷேஷத்துக்கு போறதுக்காக மெயின் ரோட்ல நடந்து கிட்டு இருக்கு, நடந்து வரும் போது குனிஞ்சு பாக்காம நடக்குதா... ஒரு பொருளை கால்ல எத்திருது. வித்தியாசம இருக்கே .... என்னத்த எத்தினோம்னு குனிஞ்சு பாக்குது. அந்தப் பொண்ணு எத்தினது மனித 'தல'. அப்புறம் எப்படி shock அடிக்காம இருக்கும் ....... ?
பழிக்குப் பழியா நடந்த கொலை சம்பவம் அது. ஒரு எடத்துல கொலய பண்ணிட்டு, ஏற்கனவே 2 வருஷத்துக்கு முன்னால கொலை நடந்த எடத்துல, தலய மட்டும் கொண்டு வந்து வச்சி, கணக்க நேர் பண்ணிட்டாங்க ........... !
Monday, May 4, 2009
சண்டையும் சமாதானமும்
உன் குத்துக்கள்
என்னைப் பதம் பார்க்கின்றன
எட்டி உதைக்கும் உன்கால்கள்
என்னில் வலியைச் சேர்க்கிறது
முறைத்துப் பார்த்து
முகம் திருப்புகிறாய்
ஏனிந்த கோபம்
என்னிடம் உனக்கு
காரணம் தெரியாமல் தவித்தபின்
காரணம் தெரிகிறது
என்னிடம் தான் தவறு
உன்னிடம் அல்ல என்று
தங்கைமகன் அமரே
தவச் செல்வனே
உன் கோபம் போக்க
என்னிடமா இல்லை வழிகள்
மன்னிப்புக் கேட்டவுடன்
மயங்கி மறப்பாய் உன் கோபத்தை....
என்னைப் பதம் பார்க்கின்றன
எட்டி உதைக்கும் உன்கால்கள்
என்னில் வலியைச் சேர்க்கிறது
முறைத்துப் பார்த்து
முகம் திருப்புகிறாய்
ஏனிந்த கோபம்
என்னிடம் உனக்கு
காரணம் தெரியாமல் தவித்தபின்
காரணம் தெரிகிறது
என்னிடம் தான் தவறு
உன்னிடம் அல்ல என்று
தங்கைமகன் அமரே
தவச் செல்வனே
உன் கோபம் போக்க
என்னிடமா இல்லை வழிகள்
மன்னிப்புக் கேட்டவுடன்
மயங்கி மறப்பாய் உன் கோபத்தை....
Thursday, April 30, 2009
வழக்கொழிந்த பழக்கங்கள்
தமிழர்கள் பண்பு மிக்கவர்கள் பெருந்தன்மையானவர்கள், இன்று தமிழன் நிச்சயமாக சுயநலவாதியாய் மாறிவிட்டான், வெகு சிலரைத் தவிர.
இன்றைக்கு நடைமுறையில் சாத்தியமில்லாத பழக்கங்கள் கிட்டத்தட்ட 60-70 வருடங்கள் முன்கூட பழக்கத்தில் இருந்தன.
ஒரு சில தாய்மார்கள் தன் பிள்ளைக்கு குடுத்தது போக மிச்சம் தாய்ப்பால் இருக்கும். அதை வீணாக்காமல் வேறொரு பிள்ளைக்கு குடுப்பார்கள், இது கிராமங்களில் இருந்த வழக்கம்.
பிரசவத்தில் தாயை இழந்த பிள்ளைகளை வேறொரு தாய், தாய்ப்பால் கொடுத்து வளர்த்திருக்கிறார்கள். இந்த பழக்கம் அக்காலத் தாய்மார்களின் சிறந்த பண்பை பறைசாற்றுகிறது.
பிள்ளைச்சோறு இது கிராமங்களில் பெரிய வீடுகளில் ( பெரிய வீடுன்னா, 'முக்கியமான' அப்படின்னு எடுத்துக்குங்க) மதியம் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு, தங்கள் வீடுகளில் மதிய உணவு இலவசமாக சோறு, குழம்பு கொடுப்பார்கள். 20-30 வருடங்கள் முன்பு வரை இருந்த பழக்கம் இன்று எங்காவது இருக்கிறதா என்று தெரியவில்லை.
இன்றைக்கு நடைமுறையில் சாத்தியமில்லாத பழக்கங்கள் கிட்டத்தட்ட 60-70 வருடங்கள் முன்கூட பழக்கத்தில் இருந்தன.
ஒரு சில தாய்மார்கள் தன் பிள்ளைக்கு குடுத்தது போக மிச்சம் தாய்ப்பால் இருக்கும். அதை வீணாக்காமல் வேறொரு பிள்ளைக்கு குடுப்பார்கள், இது கிராமங்களில் இருந்த வழக்கம்.
பிரசவத்தில் தாயை இழந்த பிள்ளைகளை வேறொரு தாய், தாய்ப்பால் கொடுத்து வளர்த்திருக்கிறார்கள். இந்த பழக்கம் அக்காலத் தாய்மார்களின் சிறந்த பண்பை பறைசாற்றுகிறது.
பிள்ளைச்சோறு இது கிராமங்களில் பெரிய வீடுகளில் ( பெரிய வீடுன்னா, 'முக்கியமான' அப்படின்னு எடுத்துக்குங்க) மதியம் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு, தங்கள் வீடுகளில் மதிய உணவு இலவசமாக சோறு, குழம்பு கொடுப்பார்கள். 20-30 வருடங்கள் முன்பு வரை இருந்த பழக்கம் இன்று எங்காவது இருக்கிறதா என்று தெரியவில்லை.
Saturday, April 25, 2009
முத்தம் ஒண்ணு கொடுத்தாய் ... (Case Sheet)
இளமைங்கிறது வாழ்க்கைல ஒரு வசந்தம். பாலியல் கவர்ச்சி, ஈர்ப்பு உள்ள காலம். காதல் வசப்பட்டவங்களுக்கு முத்தத்தைப் பத்தி ஆர்வம் உள்ள காலகட்டம். உணர்ச்சி வசப்பட்டவங்களுக்கு முத்தம் எப்படி குடுக்குறதுன்னு பல சிந்தனை, அதுல ஒரு கிளுகிளுப்பு.
பிரிட்டிஷ் காரன் மொதல்ல லேடி கையப் பிடிச்சு, அந்தக் கைல ஒரு kiss அடிப்பான். பிரெஞ்சுக் காரன் லிப் டூ லிப் French kiss. நம்மாளுக உம்மா கன்னத்துல தான் அதிகம்.
லிப் கிஸ் அடிச்சு நோயாளியா ரெண்டு case முனியப்பன் பாத்திருக்கார். ஒருத்தன் 10 வருஷத்துக்கு முன்னால, இன்னொருத்தன் சமீபத்துல.
அவனுக்கு வயசு 24. Fax, Xerox, STD கடை வச்சிருந்தான். அங்க STD பண்ண வந்த ஒரு லேடி அவனுக்குப் பிக்அப் ஆயிருச்சு. உணர்ச்சி வசப்பட்டு kiss அடிக்கிறாங்க. நம்மாளு கீழ் ஒதட்டுல லேடியோட பல்லு பட்டு ரத்தம் வருது. வாய்ல கர்ச்சீப்பை வச்சி பிடிச்சிக்கிட்டு ரெண்டு பேருமே முனியப்பன் கிட்ட வந்துர்றாங்க. முனியப்பன் கிழிஞ்சு போன ஒதட்டுல தையலப் போட்டு ரத்தத்தை நிப்பாட்டி ட்ரீட்மெண்ட் குடுத்து அனுப்பி வச்சுர்றார்.
இவனுக்கு வயசு 20. இந்தியா சார்பா உலக நாடுகள்ல ஒரு வெளையாட்டுல கலந்துக்கிர்றவன். அப்படி ஒரு வெளிநாட்டுக்குப் போனப்ப, ஸ்டார் ஹோட்டல்ல தங்கியிருக்கப்ப, ஒரு ஹேண்ட்ஸம் வெளிநாட்டு லேடியப் பாக்குறான். அண்ணனும் நோக்கினான். அவளும் நோக்கினாள். அப்புறம் என்ன ...? ப்பசக் தான். கொஞ்சம் வெளையாட்டு. அதுக்கப்புறம் போக நம்ம பயலுக்கு பயம், ஓடி வந்துர்றான்.
அவனோட 4 வயசுல இருந்து, முனியப்பனும் அவனும் பிரண்ட்ஸ். Kiss மேட்டர் அவனுக்குள்ள ஒரு பயத்தை உண்டாக்கிருச்சு. இந்தியாவுக்கு வந்து, மதுரைக்கு வந்த ஒடனே முனியப்பன் கிட்ட வந்துட்டான். மேட்டரச் சொன்னான். "ஒண்ணுமில்லை. பயப்படாதப்பா" அப்படின்னு சொன்னாலும் convince ஆக மாட்டேங்கிறான். வேற வழியில்லாம HIV டெஸ்ட் பண்ணிப் பாத்து நெகடிவ்னு சொன்னப்புறம்தான் அவனுக்கு நிம்மதி.
ரெண்டு பேருக்கும் முனியப்பன் சொன்ன அட்வைஸ், முத்தம், Sex எல்லாம் வாழ்க்கைத் துணையோட மட்டும் தான்.
பிரிட்டிஷ் காரன் மொதல்ல லேடி கையப் பிடிச்சு, அந்தக் கைல ஒரு kiss அடிப்பான். பிரெஞ்சுக் காரன் லிப் டூ லிப் French kiss. நம்மாளுக உம்மா கன்னத்துல தான் அதிகம்.
லிப் கிஸ் அடிச்சு நோயாளியா ரெண்டு case முனியப்பன் பாத்திருக்கார். ஒருத்தன் 10 வருஷத்துக்கு முன்னால, இன்னொருத்தன் சமீபத்துல.
அவனுக்கு வயசு 24. Fax, Xerox, STD கடை வச்சிருந்தான். அங்க STD பண்ண வந்த ஒரு லேடி அவனுக்குப் பிக்அப் ஆயிருச்சு. உணர்ச்சி வசப்பட்டு kiss அடிக்கிறாங்க. நம்மாளு கீழ் ஒதட்டுல லேடியோட பல்லு பட்டு ரத்தம் வருது. வாய்ல கர்ச்சீப்பை வச்சி பிடிச்சிக்கிட்டு ரெண்டு பேருமே முனியப்பன் கிட்ட வந்துர்றாங்க. முனியப்பன் கிழிஞ்சு போன ஒதட்டுல தையலப் போட்டு ரத்தத்தை நிப்பாட்டி ட்ரீட்மெண்ட் குடுத்து அனுப்பி வச்சுர்றார்.
இவனுக்கு வயசு 20. இந்தியா சார்பா உலக நாடுகள்ல ஒரு வெளையாட்டுல கலந்துக்கிர்றவன். அப்படி ஒரு வெளிநாட்டுக்குப் போனப்ப, ஸ்டார் ஹோட்டல்ல தங்கியிருக்கப்ப, ஒரு ஹேண்ட்ஸம் வெளிநாட்டு லேடியப் பாக்குறான். அண்ணனும் நோக்கினான். அவளும் நோக்கினாள். அப்புறம் என்ன ...? ப்பசக் தான். கொஞ்சம் வெளையாட்டு. அதுக்கப்புறம் போக நம்ம பயலுக்கு பயம், ஓடி வந்துர்றான்.
அவனோட 4 வயசுல இருந்து, முனியப்பனும் அவனும் பிரண்ட்ஸ். Kiss மேட்டர் அவனுக்குள்ள ஒரு பயத்தை உண்டாக்கிருச்சு. இந்தியாவுக்கு வந்து, மதுரைக்கு வந்த ஒடனே முனியப்பன் கிட்ட வந்துட்டான். மேட்டரச் சொன்னான். "ஒண்ணுமில்லை. பயப்படாதப்பா" அப்படின்னு சொன்னாலும் convince ஆக மாட்டேங்கிறான். வேற வழியில்லாம HIV டெஸ்ட் பண்ணிப் பாத்து நெகடிவ்னு சொன்னப்புறம்தான் அவனுக்கு நிம்மதி.
ரெண்டு பேருக்கும் முனியப்பன் சொன்ன அட்வைஸ், முத்தம், Sex எல்லாம் வாழ்க்கைத் துணையோட மட்டும் தான்.
Subscribe to:
Posts (Atom)
