Tuesday, December 9, 2008

80 வயது பெருசு

முனியப்பன் சந்திச்ச வித்தியாசமான கேஸ்

மதுரைல ஒரு பெரிய பணக்காரர், 80 வயசு. இவருக்கு சொத்து அதிகம். அவருக்கு என்ன ஆகுது ...., கோமாவுக்குப் போயிர்றார். அய்யாவத் தூக்கிட்டு முனியப்பன்கிட்ட கூட்டமா வர்றாங்க.

முனியப்பன் பெருச அட்மிட் பண்ணி உயிர் இருக்க மாதிரி Life line Support குடுக்குறார். மூளை பாதிச்ச ஆளுக்கு, அதுவும் 80 வயது பெருசுக்கு, பெருசா ஒண்ணும் செய்ய முடியாது. வந்தவங்க சொல்றாங்க "உயிர மட்டும் பிடிச்சு வச்சுக்குங்க (காப்பாத்த வேணாமாம்), ரிஜிஸ்ட்ரர் வர்றார், பத்திரத்துல எல்லாம் ரேகை வைக்கணும். "

அடப்பாவிகளா, உயிர் வேணும்ல கைரேகை வைக்கிறதுக்கு, செத்த பெறகு ஒண்ணும் செய்ய முடியாதுல்ல... 12 மணிக்கு ரிஜிஸ்ட்ரர் வருவார்னு எல்லாரும் ஒக்காந்திருக்காங்க.

மணி 11.30 பெருசு ஹார்ட் நின்னுருச்சு. எல்லாருக்கும் பக்குன்னு ஆயிருது. முனியப்பன் ஒடனே ஹார்ட்டுக்குள்ள Inracardiac adenalin அ போட்றார். கார்டியாக் மசாஜ் குடுக்கறார். பெருசுக்கு ஹார்ட்பீட் வந்துருச்சு, மூச்சும் விடுறார். Life செட் ஆயிருச்சு, எல்லாருக்கும் நிம்மதி.

மணி 12.00, மறுபடியும் Inracardiac adenalin, கார்டியாக் மசாஜ், உயிர் வருது.

மணி 12.15, ரிஜிஸ்ட்ரர் வர்றார். பெருசு கைய புடிச்சு கைரேகை வக்கிறாங்க, 20 - 30 பேப்பர்ல. 1.00 மணி, சுத்தியிருந்த கூட்டம் எல்லாத்தையும் காணோம். ரேகை வச்சாச்சுல்ல, வந்த வேலை முடிஞ்சிச்சுல. அப்புறம் எதுக்கு பெருசு ?, ஒரே ஒரு
வேலைக்காரம்மா மட்டும் இருக்கு.

சாயங்காலம் 8 மணி வரைக்கும் மூச்சு விடுற பெரிசு, மூச்சு 8.15 மணிக்கு மொத்தமா நின்ருச்சு. ரேகை வாங்க வந்தவன்கள்ல பாடிய வாங்க ஒருத்தன் மட்டும் 9.30க்கு வர்றான். ரேகை வாங்க வந்த கூட்டம் பாடி வாங்க வரலை.

உயிர் பெரிசா .... ? சொத்து பெரிசா .... ? போப்பா போ, புரியாத ஆளா இருக்க.

4 comments:

ஹேமா, said...

முனியப்பன்,சந்தேகமே இல்லை.
பணம்தான் பாசபந்தங்களைவிட உலகின் முதன்மையாய் இருக்கிறது.

முனியப்பன்,உங்கள் பாணி ஒரு தனித்தன்மையாய் இருக்கிறது.வாழ்த்துக்கள்.

Muniappan Pakkangal said...

I agree with u Hema,money is the priority in most people s life,but still certain exceptions are there.Thank u for ur greetings.

Dikshith said...

sotha kaimaatha vandha aalungalula atleast bodya thookka 4 peru kooda varaama irundhadhu manasukku varutham dhan . Enna seyya , idhuthaan ulagam

Muniappan Pakkangal said...

Thank u Dikshith,pl see what i have told for Hema.