Monday, December 1, 2008

முனியப்பனின் மழைக் காலங்கள்

இரவுப் பறவை முனியப்பனுக்கு
இரவு மழை பிடிக்கும்
பணிக்கு இடையூறு இல்லை
பணி முடிந்த நேரம் பெய்யும் மழை
ஊர் சுற்ற
உல்லாசமாகத் திரிய
மனசைத் தூண்டும்
மனம் போன போக்கில்
மழையில் நனைந்த
மழைக் காலங்கள் மறக்காதவை
மேல வெளிவீதி ரயில் நிலையம்
முழங்கால் தண்ணீரில்
மோட்டார் பைக் சைலன்சர்
முங்காமல்
ஆக்சிலேட்டரை அழுத்தி
அசத்திய காலங்கள்
கட்டபொம்மன் சிலை பக்கம்
உருட்டி வரும் டூ வீலருக்கு
ஸ்பார்க் பிளக் கிளீன் பண்ணும்
ஸ்மார்ட்டான திடீர் மெக்கானிக்குகள்
தண்ணீர் ஓடும் தெற்கு மாசி வீதி
தப்பாத சிம்மக்கல்
தண்ணீர் புரண்டோ டும் இடங்களில்
தவறாமல் சீறிப் பாய்ந்த காலங்கள்
முனியப்பன் வண்டியில்
முழுவீச்சில் சுற்றிய பருவங்கள்
கண்ணை மறைக்கும்
கடுமையான மழையிலும்
உற்சாகமாக வண்டி ஓட்டி
உடை நனைந்து
உடைமைகள் நனைந்து
உடல் நனைந்து
தலை நனைந்த
நனைந்த உடையோடு இன்னும்
நனைய கடை காபி
இன்னும் கொஞ்சம் சுற்றி
இனி முடியாது போதும்
வழியும் தண்ணீரை
வடிய விட்டு
வீட்டில் நுழைய
துவட்ட துண்டோ டு தாய்
சொத சொத உடையை மாற்றி
கதகதப்பாக காபி
உடல் வலி
உபயம் மழை
அந்த சுகம்
அடுத்த ஒரு மழை நாளில் ..............

6 comments:

G.VINOTHENE said...

மழைக்காலத்தில் உதிரும் கவிதைகள் எப்பொழுதும் அருமையானவை...

Muniappan Pakkangal said...

Nandri Vinothini.Mazhai yellorukkum pidithamanathu.Athilum athil nanaivathu inbamanathu.

vellaisamy said...

mali kallangal kavithai and muniappan experience with patients are good

Muniappan Pakkangal said...

Thank u Vellaisamy.

Dikshith said...

Neenga mazhai nu oru topicle ulla detailsa segarichu MAZHAI nu oru PADAMe edukkalam pola irukku. super.

Muniappan Pakkangal said...

Thank u Dikshith,rain is really fantastic.