இரவுப் பறவை முனியப்பனுக்கு
இரவு மழை பிடிக்கும்
பணிக்கு இடையூறு இல்லை
பணி முடிந்த நேரம் பெய்யும் மழை
ஊர் சுற்ற
உல்லாசமாகத் திரிய
மனசைத் தூண்டும்
மனம் போன போக்கில்
மழையில் நனைந்த
மழைக் காலங்கள் மறக்காதவை
மேல வெளிவீதி ரயில் நிலையம்
முழங்கால் தண்ணீரில்
மோட்டார் பைக் சைலன்சர்
முங்காமல்
ஆக்சிலேட்டரை அழுத்தி
அசத்திய காலங்கள்
கட்டபொம்மன் சிலை பக்கம்
உருட்டி வரும் டூ வீலருக்கு
ஸ்பார்க் பிளக் கிளீன் பண்ணும்
ஸ்மார்ட்டான திடீர் மெக்கானிக்குகள்
தண்ணீர் ஓடும் தெற்கு மாசி வீதி
தப்பாத சிம்மக்கல்
தண்ணீர் புரண்டோ டும் இடங்களில்
தவறாமல் சீறிப் பாய்ந்த காலங்கள்
முனியப்பன் வண்டியில்
முழுவீச்சில் சுற்றிய பருவங்கள்
கண்ணை மறைக்கும்
கடுமையான மழையிலும்
உற்சாகமாக வண்டி ஓட்டி
உடை நனைந்து
உடைமைகள் நனைந்து
உடல் நனைந்து
தலை நனைந்த
நனைந்த உடையோடு இன்னும்
நனைய கடை காபி
இன்னும் கொஞ்சம் சுற்றி
இனி முடியாது போதும்
வழியும் தண்ணீரை
வடிய விட்டு
வீட்டில் நுழைய
துவட்ட துண்டோ டு தாய்
சொத சொத உடையை மாற்றி
கதகதப்பாக காபி
உடல் வலி
உபயம் மழை
அந்த சுகம்
அடுத்த ஒரு மழை நாளில் ..............
Monday, December 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
மழைக்காலத்தில் உதிரும் கவிதைகள் எப்பொழுதும் அருமையானவை...
Nandri Vinothini.Mazhai yellorukkum pidithamanathu.Athilum athil nanaivathu inbamanathu.
mali kallangal kavithai and muniappan experience with patients are good
Thank u Vellaisamy.
Neenga mazhai nu oru topicle ulla detailsa segarichu MAZHAI nu oru PADAMe edukkalam pola irukku. super.
Thank u Dikshith,rain is really fantastic.
Post a Comment