Monday, January 26, 2009

Case Sheet

காயங்களும் காரணங்களும்

முனியப்பன்கிட்ட அடிபட்டு காயத்தோட வைத்தியத்துக்கு வர்றவங்களும் உண்டு. சைக்கிள், Two wheeler accidentனா ஒடம்பெல்லாம் சிராய்ப்பு இருக்கும். எலும்பு முறிவு இருக்கலாம். சைக்கிள், Two wheelerல இருந்து skid ஆகி வருவாங்க.

பல் பட்ருச்சு, பாய்ஸன் ஆகாம ஊசி போடுங்கன்னு வருவாங்க. சின்னப் பிள்ளைக அடுத்த பிள்ளைய கடிச்சு வச்சிரும். நம்மாளுக, சண்டையில அடுத்தவனை கடிச்சு வச்சிருவாங்க.

சின்னப் பிள்ளைக சைக்கிள்ல ஒக்காந்து போகும் போது சைக்கிளுக்குள்ள, காலை விட்ரும். எலும்பு முறிவு ஆகாது. இரத்தக்காயம் தான் இருக்கும். புண் முழுசா ஆற 21 நாள்ல இருந்து 42 நாள் வரைக்கும் ஆகும். சைக்கிள், two wheeler ஓட்டிப் பழகும் போது விழுந்து எந்திரிச்சுக் காயத்தோட வருவாங்க.

வேல பாக்குற எடத்துல மேலே இருந்து கீழே வந்துருவாங்க. மெஷினுக்குள்ள கைய விட்ருவாங்க. காயம் வெரலக் கேட்ரும், இல்ல சும்மா லேசான கட்டா இருக்கும். இதெல்லாம் வழக்கமா நடக்குறது தான்.

புருஷன் பொண்டாட்டி சண்டைல கெளப்பிருவாங்க. சண்டைல காயமாயிரும். வைத்தியத்துக்கு வர்றவங்க முட்டிட்டேன், இரும்பு சாமான் விழுந்துருச்சு அப்படின்னு எதாவது பொய்க்காரணம் சொல்வாங்க. புருஷன் அடிச்சு மூஞ்சியெல்லாம் வீங்கி ரத்தம் கன்னிப்போயிருக்கும் (contusion), உண்மையச் சொல்ல மாட்டாங்க. அழுதுகிட்டே இருப்பாங்க. நம்மளா புரிஞ்சிக்கிட வேண்டியது தான். முனியப்பன் service ஆன ஆளு இல்லையா, பாத்த ஒடனே என்ன நடந்திருக்கும்னு தெரியும். வைத்தியத்தை மட்டும் பாத்து அனுப்பி வச்சிருவார்.

உண்மையான காரணத்தைச் சொல்லாம செத்துப்போன ஒரு நோயாளிய முனியப்பன் இன்னைக்கும் மறக்க முடியாம இருக்கார்.

10 வருஷத்துக்கு முன்னால முனியப்பனுக்கு நல்லா தெரிஞ்சவர் ஒருத்தர், ஒரு நோயாளியக் கூப்பிட்டு வந்தார். "கார் ஓட்டும் போது sudden brake போட்டதுல steering wheel வயித்துல இடிச்சுருச்சு, வயிறு வலிக்குது பாருங்கன்னார்." நோயாளி வாயத் திறக்க மாட்டேங்கறான். முனியப்பன் அவனப் படுக்க வச்சு பரிசோதிக்கிறார். வயித்தை எங்க தொட்டாலும் கல்லு கணக்கா இருக்கு (Abdominal Rigidity). வயித்துக்கு x - ray, ஸ்கேன் எடுத்துப் பார்க்கிறார் முனியப்பன். Plain x ray. Abdomenல Air under diaphragm. ஸ்கேன்ல intra abdominal haemorrage. ஒடனே மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அந்த நோயாளிய அனுப்பி வைக்கிறார். அங்க ஒடனே அவசர அறுவை சிகிச்சை பண்றாங்க, ரத்தம் ஏத்துறாங்க. நோயாளி தீவிர சிகிச்சை பண்ணியும் பலன் இல்லாம 2 நாள்ல இறந்துர்றான்.

அந்த நோயாளியக் கூப்பிட்டு வந்தவர், அவரோட சேந்தவங்க எல்லாம் அந்த treatment சம்பந்தமான record எல்லாத்தையும் தீ வச்சு கொளுத்திர்றாங்க. அவனுக்கு வயித்துல இரத்தம் கசிஞ்சதுக்குக் காரணம், இவங்க அவனை ஊமை அடியா அடிச்சது தான். நோயாளியும் இவங்களுக்குச் சாதகமா கடைசில சாகிற வரைக்கும் வாயால எதையும் சொல்லாம செத்துப் போய்ட்டான்.

இன்னும் காட்டுமிராண்டித் தனமான வாழ்க்கை நடைமுறையில் உள்ளது. மனிதன் நாகரீகம் அடைந்து விட்டான் என்று யார் சொன்னது ?

4 comments:

Dikshith said...

Kurangile irundhu manidhan idhuthaan evolution enbargal. Aanal innum sarinilai pakkuvamadayadha manidhagal innum KURANGUGALAAI THAAN ULAVI VARUGIRARGAL INDHA ULAGAM MUZHUVADUM.

Muniappan Pakkangal said...

Thank u Dikshith,evolution is one thing & barbarism is a different one.Here the cruel mentality of certain people is putforth.

ஹேமா said...

//மனிதன் நாகரீகம் அடைந்து விட்டான் என்று யார் சொன்னது ?//

மனிதன் தன்னைத் தானே நாகரீகமானவனாக நினைத்துக் கொள்கிறானே தவிர மனதால் அவன்தான் உலகின் முதன் குப்பை.

Muniappan Pakkangal said...

nandri Hema for ur coinciding view.