Wednesday, March 4, 2009

உன் புன்னகை

கண்ணை உயர்த்தாமல்
என் முகம் பார்க்காமல்
நிலம் பார்த்து
நீ சிந்தும் புன்னகை

என்முகம் நேராகக் கண்டவுடன்
உன்முகம் திருப்பி ஒரு புன்னகை
என் முன்னால் நடந்தாலும்
பின்னால் திரும்பி ஒரு புன்னகை
தொலைவில் நின்றாலும்
தொல்லை கொடுக்கும் புன்னகை
சும்மா இருந்தாலும் சிங்காரமாய்
சீண்டும் புன்னகை .......

என் கிண்டலுக்கும் புன்னகை
என் சீண்டலுக்கும் புன்னகை
பொய்க் கோபத்திலும்
நிஜமான புன்னகை
இதழ் மூடியும் புன்னகை
இதழ் திறந்தும் புன்னகை
பல் வரிசை பளபளக்க
பளிச்சிடும் புன்னகையும் உண்டு

என் வருகை கண்டவுடன்
உன் முகத்தில் புன்னகை
என் அருகில் வந்தவுடன்
உன் அழகிய புன்னகை
தென்றலாய் என் தோளில் நீ
துவளும் போது ஆனந்தப் புன்னகை
ம்ம்ம்... முத்தத்தில் திளைக்கும்
மோகனப் புன்னகை
முத்தத்திற்குப் பின்னர் மீண்டும்
முத்தம் கேட்கும் ஒரு புன்னகை
வெட்கத்திலும் புன்னகை
வேட்கையிலும் புன்னகை

களம் புகுந்தபின் கணக்காய்
இதழ் கோடியில் புன்னகை
போர்க்களத்தின் நடுவில்
மயக்கத்தில் புன்னகை
மோகத்தில் புன்னகை
முனகலில் புன்னகை
மோகத்தில் திளைத்த பின்
முகத்தை மூடி ஒரு புன்னகை

உன் புன்னகை
நினைவுகளைக் குறித்திருக்கிறேன்
குறிக்க மறந்திருந்தால்
குற்றம் சாட்டாதே
உன் புன்னகையால் .............

6 comments:

ஹேமா said...

முனியப்பன் எண்ணிப் பாத்திட்டேன்.
24 புன்னகைகள்.சரியா எண்ணிட்டேனா?

வாழ்க்கையை ரசித்து வாழறீங்க.
இன்னும் புன்னகைகள்...
மறந்திருப்பீங்க.யோசிச்சுப் பாருங்க.இல்லாட்டி உங்க அவங்ககிட்டயே கேளுங்க.அங்க ஒரு புன்னகை கிடைக்கும் உங்களுக்கு.

ஞாபகங்களைப் புன்னகையாய் மீட்டு எடுத்த விதம் அருமை.உங்கள் மனைவி மீது நீங்கள் வைத்திருக்கும் காதலையும் இந்தக் கவிதை சொல்லிப் புன்னகைக்கிறது.

வினோத் கெளதம் said...

sir arumayana kavithai.
punnagayai azaga variasai paduthi irukinga.
romba nalla iruku.
enaku oru santhegam enna tidirnu kavidhai..??

Muniappan Pakkangal said...

Nandri Hema,I myself didn't count the no. of punnagai but u've done it.Meendum oru Nandri.You r correct in ur guess,it is my personal experience with my sweet one.

Muniappan Pakkangal said...

Nandri Vinoth Gowtham,it is my own experience which i've made as a kavithai.All posts in my blog are my own experience & views.Punnagai is a special one with whom i'm living.

Dikshith said...

Ungalukku naan Punnagai mannan endra pattaththai soottugiren.

Muniappan Pakkangal said...

Nandri Dikshith.