Sunday, July 5, 2009

ஒத்த யானையும் 70 பேரும்

முனியப்பனின் பாட்டையா, தாத்தா மூணார்ல பொழைச்சவங்க. அப்ப எடம் வாங்கிப் போட்டு ஏலக்கா தோட்டம் உண்டாக்குனாங்க. அந்தக் காலத்துல மூணாறுக்குப் பஸ் வசதி கெடையாது. போடிலருந்து நடந்தே போகணும். அப்படி மலைல, காட்டு வழியா போகும்போது யானைய cross பண்ண வேண்டிய சூழ்நிலைகள் வரும். முனியப்பன் சின்னப்பிள்ளையா இருக்கறப்ப, முனியப்பனின் அப்பா யானைக்கதை சொல்லுவார்.

தாத்தா சம்பாதிச்ச ஏலக்கா தோட்டத்துல முனியப்பனுக்கு ஒரு பங்கு இருக்கு. அதப் பாக்க வருஷத்துக்கு ஒரு தடவை மூணார் trip உண்டு. அப்படிப் போகும் போது காட்டு யானையப் பாக்க, முனியப்பன் கெளம்பிப் போயிருவார். மூணார்ல, காட்டு யானைய கண்டிப்பா பாக்க சான்ஸ் உள்ள எடம்; மாட்டுப்பட்டி டேமுக்கு மேல, எக்கோ (ECHO) பாயிண்டுக்கு முன்னால, டைம் - காலைலன்னா 7 மணிக்குள்ள சாயங்காலம்னா 5.30 மணிக்கு மேல. இந்த டைம்ல டேம்ல தண்ணி குடிக்க யானை வரும். அந்த டயத்தை கணக்குப் பண்ணி முனியப்பன் அங்க போயிருவார்.

போனவருஷம் அங்க போனப்ப, ஒரு நல்ல சைஸ் ஆண் யானை தனியா நின்னு புல்லு தின்னுகிட்டிருந்துச்சு. ஒத்த யானை.. அந்த வழியா ரோட்ல ஜீப்ல, கார்ல போனவங்கள்லாம் "டேய், யானை நிக்குதுடா"ன்னு வேடிக்கை பாக்க கூடிட்டாங்க. வேடிக்கை பாத்த 70 பேர்ல முனியப்பன் அமர், அஷீவோட இருக்கார். யானை பள்ளத்துல இருக்கு ! வேடிக்கை பாக்க வந்த மக்கள்லாம் மேட்ல, ரோட்ல யானைக்கும் மக்களுக்கும் 100 மீட்டர் இடைவெளி.

வேடிக்கை பாக்க வந்த எளவட்டப் பயலுக 6 பேர், கொஞ்சம் கீழே எறங்கி "உஸ்"னு சவுண்டு கொடுத்தாங்க. அமைதியா மேஞ்சிகிட்டிருந்த யானை, சத்தம் கேட்ட ஒடனே disturb ஆயிருச்சு. ஒத்த யானை, அதுவும் ஆம்பளப் பய கொஞ்சம் கோபப்பட்டு, 4 ஸ்டெப் எடுத்து வச்சுச்சு. அவ்வளவு தான். கீழே எறங்கி நின்ன 6 பேரும் திடுதிடுன்னு மேல ஏறிட்டாங்க. வேடிக்கை பாத்த மக்கள்லாம் ஜீப், கார்னு ஏறிப் பறந்துட்டாங்க. முனியப்பனும் அஷீ, அமர கூப்பிட்டுகிட்டு மேல ஏறி கார் கதவத் தெறந்து எஸ்கேப் ஆக ரெடியாயிட்டார். எல்லாம் கண நேரத்துக்குள்ள (fraction of a second).... 55 பேர காணோம்.

ஆட்கள்லாம் ஓடின ஒடனே யானை அமைதியாகி மறுபடியும் புல்லு திங்க ஆரம்பிச்சிருச்சு. மறுபடியும் பிள்ளைகளுக்கு யானைய காமிச்சிட்டு கெளம்புனாரு. ஒத்த யானையோட காணொளி 3 பிரிவா இருக்கு. 1. புல்லு திங்கற யானை 2. 4 ஸ்டெப் வக்கிறது 3. அமைதியாகி நிக்கிறது. 4 ஸ்டெப் வைக்கும் போது யான மொகத்துல தெரியற கோபத்தப் பாருங்க.



யானை மனுஷனைப் பாத்தா 3 விதமான policyய கடைப்பிடிக்குது. 1. Safe zone 2. Attack zone 3. Ready zone 4. Safe zone; இதுல மனுஷன் நம்மள ஒண்ணும் செய்ய மாட்டான்னு யான அமைதியா அது வேலயப் பாத்துக்கிட்டிருக்கும். Attack zoneல மனுஷன் பொல்லாதவன் அவனைப் பிச்சிப்புடுவோம்னு attack பண்றது. Ready zoneல மனுஷன் நம்மகிட்ட வந்தாலும் வருவான், எதுக்கும் attack பண்ண ரெடியா இருப்போம்னு மனுஷன் மேல ஒரு கண்ண வச்சிக்கிட்டு புல்லு திங்கறது.

வேடிக்கை பாத்த 70 பேரையும் ஒத்த யானை attack பண்ண ready ஆகி, பெறகு பொழைச்சு போகட்டும்னு விட்டுருச்சு. Close Shave அப்படிம்பாங்களே Narrow escape - அது மாதிரி இல்லைன்னாலும் ஒரு பயம் கலந்த யானை அனுபவம் புதுமை.

18 comments:

வினோத் கெளதம் said...

நல்லா என்ஜாய் பண்ணுங்க..

Muniappan Pakkangal said...

Nandri Vinoth Gowtham,watching elephant in nature is a pleasant one,but it should b from a safe distance.

butterfly Surya said...

Thrilling post.

Very nice..

Muniappan Pakkangal said...

Nandri Vannathu poochiar,u can hear my voice'nalla size yaanai & dei yeruda,yaanaikku kobam vanthiruchu'in the audio.

Dikshith said...

Indiavile Oththaya oru ponnu poanaalum dangerdhan Oththya oru YANAI poanaalum dangerdhan.

Muniappan Pakkangal said...

Haa Haa Haa Dikshith,jokeaa irunthaalum nalla point.

vellaisamy said...

SECONDS VERY INTRESTING TO SEE ELEPGANT CLIPING MINUTES

ஆ.ஞானசேகரன் said...

நல்ல திரில் பகிர்வுசார்...நன்ற

Muniappan Pakkangal said...

Nandri Vellaisamy,itz rare to see an elephant getting irritated,we got it in video.

Muniappan Pakkangal said...

Nandri Gnanaseharan.

டோமி said...

அனுபவ பதிவு .
கானகம் காணும்
பறவைதான் நானும்.

ஹேமா said...

யானை பற்றிய உங்கள் அனுபவங்கள் நிறையவே உங்கள் பதிவுகளில் இருக்கு.பயமாவும் இருக்கு.

Muniappan Pakkangal said...

Nandri Tommy,glad to know that u are also interested in nature.

Muniappan Pakkangal said...

Glad to see you again Hema.As i was brought up with elephant stories and as there is our land in the hills,i get that experience.

கட்டபொம்மன் said...

அண்ணாச்சி நம்ம பக்கமும் வந்துட்டு போனதுக்கு நன்றி.....

ஏதோ காவல் துறையில பொழைக்க தொரியாதவங்க நாங்களும் இருக்கோம். மதுரை ருரல் எஸ்பி பாலகிருஷ்ணன் சார் எப்படி? ஏன்னா அவர்கிட்ட வேலை பாத்திருக்கேன்.

கட்டபொம்மன்
Kattapomman.blogspot.com

ஹேமா said...

டொக்டர்,"வழக்கொழிந்த பழக்கங்கள்" பார்த்திருந்தேன்.நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே...!

Muniappan Pakkangal said...

Nandri kattabomman.Glad to know that you've worked under Madurai Rural SP.Your blog is interesting ,keep it up.I saw it in Youthfulvikatan.My father was a judge,& i've my close relatives in Police Dept.Neenga Katabommanna,unga kottai Panjaalankurichila irukke, anga poi irukkeehalaa ? Anga oru perusu,silambam suthuvaaru paathirukkeehalaa ?

Muniappan Pakkangal said...

Sorry Hema.I'll check it out.