முனியப்பன்கிட்ட வேலை பாக்குற வள்ளி இருக்காங்களே வெளி உலகம் தெரியாம வளந்தவங்க இப்ப கல்யாணம் ஆகி வீட்டுக்காரர் டூவீலர்ல மதுரய சுத்துறாங்க. அவங்க சொந்தகாரங்க வீட்டு விசேஷம் - ராமநாதபுரம் மாவட்டத்துல மதுரய விட்டு வெளி மாவட்டத்துக்கு டூவீலர்ல வீட்டுக்காரரோட சந்தோஷமா போறாங்க. போக வேண்டிய ஊருக்கு போற வழில ஜிலு ஜிலுன்னு காத்து, மழை. போன எடத்துல இருட்டாயிடுச்சு, மழை வேற பெய்யுது, "தங்கிட்டு போங்கன்னு சொல்றாங்க". வள்ளி வீட்டுக்காரரோட அங்க தங்கிர்றாங்க. விடிய விடிய காத்து மழை. வள்ளி சந்திக்காத Climate. அடுத்த நாள் அந்த Climate, எடத்த விட்டு பிரிய மனசில்லாம அங்கருந்து கெளம்பி மதுரைக்கு வந்து வேலைக்கும் வந்துர்றாங்க. மதுரைல அணலடிக்குது. வெக்கை தாங்க முடியாம வள்ளி முனியப்பன்கிட்ட, "நீங்கல்லாம் எப்படித்தான் மதுரைல இருக்கீங்களோ அங்கல்லாம் குளு குளுன்னு இருக்கு". ராமநாதபுரத்த பத்தி அவங்களுக்கு ஊட்டி மாதிரி ஒரு எண்ணம் உண்டாயிடுச்சு. அவங்க அனுபவிச்ச Climateஐ ரசிச்சு சொல்றாங்க. முனியப்பனுக்கு சிரிப்பு வராம என்ன செய்யும்?. லைலா புயல் கடலோர மாவட்டங்கள்ல காத்தோட மழைய குடுத்துச்சு. வள்ளி ராமநாதபுரம் மாவட்டத்துக்கு போனப்ப லைலா புயலோட எபக்ட் அங்க. அதனால தான்,
புயலடிச்சா மழை பெய்ற ராமநாதபுரத்துல, மழையும் காத்தும். முனியப்பன் ராமநாத புரம், லைலா புயலை வள்ளிக்கிட்ட சொன்னார். மனசுல பட்டத முன்ன பின்ன யோசிக்காம சொல்றதுதான் வள்ளியோட ஸ்டைல்.
Friday, June 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
சார், நீங்க அதிகமா எழுதறதே இல்லையே... அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் சார்.
பிரபாகர்...
டாக்டர் வள்ளி மனசு ஜிலுஜிலுன்னு.
Indha madhiri kallam kabadam illama soodhu vaadhu theriyaama olivumaraivillama irukkaravanga naatle irukkira varaikkum puyal enna mazhaiyum kotto kottunu kottum.Indha madhiri veli ulagam patriya vivaram illadhavargal evvalo % of our population. Any idea from ur rich knowledge pls inform.
Nandri Prabahar,my friends posting my articles are now getting time to post my articles.I think they will post my articles regularly.
Their % is minimum Dikshith,now we have got more Selfish people.
Post a Comment