Saturday, October 2, 2010

அயோத்தி தீர்ப்பு - சின்னத்தாய்

முனியப்பனின் அம்மாதான் சின்னத்தாய். படிப்பு அந்தக் காலத்து SSLC. மதுரைல OCPM & Capron hall ஸ்கூல்ல Hostelல தங்கி படிச்ச வருடங்கள் 1943 to 1949. எல்லா ஸ்கூல்லயும் Prayer நடக்கும். சின்னத்தாய் காலத்துல Prayer என்ன தெரியுமா "Long live queen victoria". பிரிட்டிஷ்க்காரன் ஆட்சில இந்தியா இருந்த நேரம்.

அந்த கால கட்டத்துல சுதந்திர போராட்டங்கள் தீவிரமான நேரம். மாணவர்கள் மத்திய சுதந்திர தாகம் அதிகம். சின்னத்தாயம்மா லீவுல போடிக்கு வர்றப்பல்லாம் சுதந்திர போராட்டங்கள் ஊர்வலங்கள்ல பங்கெடுத்துப்பாங்க. தேசம்கிறதுதான் அவங்க எண்ணம் எல்லாம். அந்தக் காலத்து தேசப்பக்தி. பொதுவா இந்தியாவுக்குள்ள என்ன நடந்தாலும் கவலைப்படுவாங்க.

இப்ப அயோத்தி பிரச்சினை அவங்களை பிடிச்சிருச்சி. தீர்ப்பு எதாவது ஒரு பக்கம் ஆயிருச்சுன்னா நாட்ல கலவரம் வெடிச்சிடுமேன்னு அவங்களுக்கு கவலை. சின்னத்தாய் வீட்டுக்காரர் கு.வேலுசாமி நீதிபதியா இருந்தார்ல. அவர் தீர்ப்பு குடுத்த ஒரு case அவங்களுக்கு ஞாபகம் வருது. முனியப்பன்கிட்ட 1963ல நடந்தத சொல்றாங்க. "அப்பா கோவில்பட்டில நீதிபதியா இருக்கப்ப ரெண்டு Partyக்கு எடைல கோர்ட்ல ஒரு dispute. கு.வேலுசாமி ரெண்டு partyயும் சந்தோஷமா ஏத்துக்க கூடிய ஒரு தீர்ப்பை courtல குடுக்கிறார்"

அந்த தீர்ப்பு ஞாபகம் இப்ப சின்னத்தாயம்மாவுக்கு வந்துருது. அயோத்திய பத்தி கவலை கூடுது."அப்பா சொன்ன மாதிரி ரெண்டு Partyயும் சமாதானமா போற மாதிரி தீர்ப்பு வந்தா நல்லாயிருக்கும்மா" அப்படின்னு பொலம்ப ஆரம்பிச்சுட்டாங்க.

தீர்ப்புநாள் வந்துருச்சு. காலைல இருந்தே "3 மணிக்கு சொல்றாங்கப்பா. பேரன் அமர்கிட்ட TVய பாத்து சொல்லு " அப்படின்னு ஒரு Request. அமர் ஆச்சிக்கு 3 மணிக்கு போன் பண்ணி இன்னம் சொல்லலை 4 மணிக்காம் போன வச்சிர்றார். முனியப்பன் clinic கெளம்பி வந்துர்றார். 5.15 க்கு சின்னத்தாயம்மாட்ட இருந்து போன் அப்பா தீர்ப்பு சொல்லிட்டாங்கப்பா. எல்லாருக்கும் பொதுவான தீர்ப்பு.

தீர்ப்பை கேட்ட பிறகுதான் சின்னத்தாயம்மாவுக்கு நிம்மதி. நாடு அவங்களுக்கு முக்கியம்.

6 comments:

ஆ.ஞானசேகரன் said...

//தீர்ப்பை கேட்ட பிறகுதான் சின்னத்தாயம்மாவுக்கு நிம்மதி. நாடு அவங்களுக்கு முக்கியம்//

அன்னைக்கு வணக்கம்...
பகிர்வுக்கு நன்றி சார்

Muniappan Pakkangal said...

Nandri Gnanaseharan,how r u ? My mother is a highly patriotic person & that's why i posted this article-itz not for the Problem.

மோகன்ஜி said...

எனக்கு சின்னத்தாயம்மாவிடம் பேச வேண்டும் போல் இருக்கிறது

Muniappan Pakkangal said...

Nandri Mohanji,she is a person who talks a lot abt the olden & golden days. You can call her btwn 7 AM to 8 AM when she 'll b near 04522603038.

Dikshith said...

Desap patru patritism Yenbadhu podhuvaaga ellorukum vandhu vidaathu. Yaar oruvar SUYANALATHAI VIRUMBAAMAL PODHUNALANIL AARVAMAAGA Irukkiraargalo avargalukuthaan indha desappatru + patritism irukkum enbadhu en karuththu. Indha ammavirku maganaagap pirandha neengal oru punniavan.Hats off to ur mother and to u.

Muniappan Pakkangal said...

I coincide with you in your opinion regarding Patriotism.Thank you for ur compliments to my Mother. It is Patriotism which got Independance for us,but now selfishness & cheating are to the core.