Sunday, August 3, 2008

கதை இலாகா

ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு அடிப்படை காரணம் கதை, திரைக்கதை.

அந்தக் காலத்துல (Once upon a time) கதை இலாகான்னு டைட்டில் கார்டு போடுவாங்க. படத்துக்கான கதைய உருவாக்ககுறதுன்னு ஒரு Team இருந்துச்சு. கதை இலாகா தனியா இருக்கும். வசனகர்த்தா ஒருத்தர் இருப்பார். டைரக்டர் தனியா இருப்பார். படமும் நல்லா இருக்கும்.

அடுத்த காலகட்டம் கதாசிரியர் தனி. வசனம் தனி. டைரக்டர் தனி. கதாசிரியர் கிட்ட இருந்து கதைய வாங்கி ஒரு டைரக்டர் கிட்ட குடுத்து படம் பண்ணுவாங்க. அந்த periodலயும் படங்கள் நல்லா இருந்துச்சு.

அடுத்த கால கட்டத்துல தான், படங்களோட கதையில் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பிச்சுது. கதை, திரைக்கத, டைரக்ஷன்னு எல்லாத்தையும் ஒரே ஆளு பாக்க ஆரம்பிச்சாங்க அப்படி ஜெயிச்சவங்க ரொம்ப கம்மி.

குறிப்பிட்ட நடிகருக்காக கதை பண்றாங்க. கதைல hero, தயாரிப்பாளர் தலையீடு இப்படி கதைய ஒக்கிடற வேலை நடக்குது. இப்ப கதைங்கிறதே இல்லாம போக ஆரம்பிச்சிருச்சி.

இப்ப வந்து நல்லா ஓடிக்கிட்டிருக்க சுப்ரமணியபுரம் டைரக்டர் ஒரு பேட்டில சொல்லியிருக்கார். எல்லா கதையும் எடுத்து முடிச்சாச்சு, கதைல கொஞ்சம் வித்தியாசம் தான் காமிக்க முடியும். இன்றைய படைப்பாளிகளின் கதை அறிவு, சிந்திக்கிற திறமை அவ்வளவு தான். அதனால் தான் படங்களோட தோல்வி.

சினிமாக்காறன்ட்ட technology இருக்கு. கதை இல்ல. கதை சொல்ல ஆள் இல்லாமலா இருக்காங்க? கதை கேட்கிறவனும் கதை அறிவு இல்லாம இருக்கான். படத்தோட தயாரிப்பாளரும் கதை அறிவு இல்லாம இருக்கான்.

இந்த டைரக்டர், இந்த Hero, இந்த Heroine அப்படின்னா கல்லா கட்டிரலாம்னு தான் படம் தயாரிக்க எறங்குறாங்களே ஒழிய, கதைய கண்டுக்கறதேயில்லை.

சினிமாக்காரனுக்கு ஒரு வேண்டுகோள். நல்ல கதய சினிமாவுல இல்லாதவங்கிட்ட தேடுங்க. கதை எழுதறதுக்கு சினிமா அனுபவம் தேவையில்லை.

நல்ல கதைகள் வரும் காலத்தில் தமிழ் சினிமா தலை நிமிரும்.

கதைக்கான concept நெறய இருக்கு, அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போல்.

No comments: