Sunday, August 3, 2008

இயக்குநர் ஜீவரத்னம்

இவர் இந்தியாவின் மிகப்பெரிய டைரக்டர்.ஆஸ்கார் விருதுகள், தேசிய, மாநில விருதுகள் பெறுவதற்குத் தகுதியானவர். அதற்கான நேரத்துக்காக காத்திருக்கார். அப்படியெல்லாம் கிடையாது. இவர் இதுவரைக்கும் எத்தனை படம் குடுத்திருக்கிறார்ன்னுல்லாம் detail கிடையாது. 'மேகம்' னு ஒரு படத்தை டைரக்ட் பண்றார். அவர் வண்ணத்திரைனு ஒரு தமிழ் சினிமா வாரஇதழ் 17.07.2008-ல ஒரு பேட்டி குடுத்திருக்கார்.

அவர் சொல்லியிருக்கார். "எல்லா மதத்தினரும் கையெடுத்துக் கும்பிடும் கடவுள் மருத்துவர். அப்படிப்பட்ட மருத்துவர் நோயாளிகளின் நோயைக் குணப்படுத்தாமல், அவர்களின் மனதை ரணப்படுத்துவது நியாயமா? அப்பாவிகளைப் பற்றி நான் எடுத்திருக்கும் காட்சிகளால் நிறைய எதிர்பார்ப்புகள் வரும், தகுந்த ஆதாரங்களைக் காட்டி அவற்றை நியாயப்படுத்துவதற்காக தயாராக இருக்கிறேன். நிச்சயம் இந்தப்படத்தின் மூலம் சமூகத்தில் நல்ல மாற்றம் உண்டாகும்" என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் ஜீவரத்னம்.

என்ன மாற்றம் உண்டாகும்னு நெனக்கிறார். எல்லா நோயாளிகளும் டாக்டர்கிட்ட வைத்தியம் பாக்குறத விட்டுட்டு ஜீவரத்னத்துக்கிட்ட treatmentக்குப் போகப்போறாங்க, பாவம் டாக்டர்கள்லாம் ஈ ஓட்ட போறாங்க இப்படி ஒரு காட்சி அவர் மனசுல ஓடுதுன்னு நெனக்கிறேன்.

உலகத்துல புனிதமான தொழில் 1st ஆசிரியர் தொழில். 2nd டாக்டர் தான். அதுக்கப்புறம் தான் மத்த தொழில்லாம்.


School-ல பிளஸ்டூ முடிச்சு ரிசல்ட் வந்தவுடனே ஸ்டேட் டாப் Rankers குடுக்கிற பேட்டிய படிங்க ஜீவரத்னம். "நான் என்ஜீனியர் ஆகப்போறேன். நான் டாக்டருக்குப் படிச்சு மக்களுக்கு சேவை செய்யப்போறேன்." அப்டீன்னு தான் மாணவர்களோட பேட்டி இருக்குமே தவிர "நான் சினிமாக்காரன் ஆகப்போறேன்னு" சொல்றானா ஜீவரத்னம்.

இப்ப Train-ஐ எடுத்துக்கங்க. ரிசர்வ் பண்ற பாரத்தில If you are a Doctor Please mention அப்படின்னு போட்டிருக்கும். நீ சினிமாக்காரனா அப்படிங்கற வார்த்தைய Reservation பாரத்தில பாத்திருக்கீங்களா ஜீவரத்னம்.

Internation Airport-ல டாக்டர்னா தனி மரியாதை உண்டு. சினிமாக்காரனுக்கு கிடையாது. பிரகாச நடிகர் ஒரு தடவை Airportல அவஸ்தைப் பட்டிருக்கார்.

Medico legal கேஸ்ல டாக்டருடைய கருத்து தான் முக்கியமானதுன்னு சுப்ரீம் கோர்ட்லயே சொல்லியிருக்காங்க. சினிமாக்காரன் கருத்து சுப்ரீம் கோர்ட்ல எடுப்பாங்களா ஜீவரத்னம் ?.

Court-ல சாட்சி சொல்லப்போற டாக்டர், Court hall-ல வக்கீல்கள் போலீஸ் அதிகாரிகளோட உட்காருவாங்க. சினிமாக்காரன் சாட்சி சொல்லப்போனா அந்த மாதிரி உட்கார முடியாது ஜீவரத்னம்.

சினிமாக் காரங்களப் பத்தி எழுதுனா நாஸ்தியாயிரும் ஜீவரத்னம்.

"நான் சினிமாவுக்கு வந்ததே மது, மாது ஈஸியா கெடைக்கும்கிறதுக்கு தான்" இது டைரக்டர் லிங்குசாமி கொடுத்த பேட்டி.

வாளமீனு வயிற்றை Caravan-க்குள் தடவிய தயாரிப்பாளர்னு ஒரு News.

நடிகைங்கிறதே உலகத்தில முதல்ல தோன்றின தொழில செய்வதுக்கான visiting card தான். நட்பு நடிகை, கண்ணழகி நடிகைய பத்தி செய்திவராத நாள் இருக்கா?

அந்த நடிகை அந்த ஆஸ்பத்திரில போய் வயித்தைக் கழுவிட்டு வந்தார். இது சாதாரணமான News. கலைச்சேவைன்னு வெளிநாட்டில போய் என்ன செய்றீங்க ? எல்லாருக்கும் தெரியும்.

30 வருஷத்துக்கு முன்னால தவறான உறவுகளைப் பத்தி படமெடுத்தார் ஒரு பிரபல இயக்குநர். அந்த படத்தப் பாத்து கெட்டவங்க எத்தனை பேர் ?. நூறாவது நாள்னு ஒரு படம். அதைப்பாத்து தான் கொலை செஞ்சேன். இது ஒரு கொலையாளியின் வாக்கு மூலம்.

சமுதாயத்தை சீரழிக்கிறதுல முதல் இடம் சினிமாவுக்குத் தான் மிஸ்டர் ஜீவரத்னம்.

படம்கிறது ஒரு பொழுதுபோக்கு. திரைப்படத்துறையில இருக்கவங்க வானத்துல இருக்கவங்க இல்ல. நீங்களும் சராசரி மனிதன் தான்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வைகைப்புயல் வடிவேலு இவங்களை விட தனிநபர் வருமானம் ஈட்டக்கூடிய டாக்டர்கள் நெறய இருக்காங்க. உங்க சுயநலத்துக்காக, உங்கள் வருமானத்துக்காக, புனிதமான தொழில தவறா சித்தரிக்காதீங்க.

ஒங்க படம் வந்தபிறகு டாக்டர்கிட்ட வைத்தியம் பாக்காம யாராவது இருக்கப் போறாங்களா? பிரதமர் மன்மோகன் சிங் cataract ஆபரேட் பண்ணது, முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு மூட்டுமாற்று அறுவை சிகிச்சை பண்ணது, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கு தோள்பட்டை எலும்பு முறிவுக்கு வைத்தியம் பார்த்தது, தமிழகத்தின் முன்னாள் மற்றும் இன்னாள் முதல்வர்கள் எல்லாரும் மருத்துவம் பாக்குறது டாக்டர்கள் கிட்ட தான். சினிமாக்காரன் கிட்ட இல்ல.

சினிமாக்காரன் Hitch கூத்தாடி. அத மறக்காதீங்க Mr.ஜீவரத்னம். மக்களுக்கு நல்ல கருத்துக்களைச் சொல்லுங்க. ஒங்க சுயலாபத்துக்காக சமுதாயத்தைச் சீரழிக்காதீங்க.

ஆசிரியரும், டாக்டரும் தான் உலக மக்களோட வாழ்க்கைக்கு அஸ்திவாரம். சினிமாக்காரன் இல்ல.

No comments: