Sunday, August 3, 2008

பாட்டும் காமெடியும்

திரைப்படப் பாடல்கள் மக்களை Complete ஆக Relax பண்ணுது. அத யாரும் மறுக்க முடியாது. அந்த காலத்து எம்.ஜி.ஆர்., சிவாஜி டூயட் பாடல்கள். M.S. விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் இசையில் வந்த பாடல்கள் . ஜானகி, சுசீலா, P.B. சீனிவாஸ், TMS பாடல்கள் இன்னைக்கும் தாலாட்டக் கூடியவை.

அடுத்து வந்த இசைஞானி இளையராஜாவின் இசையில் வந்த பாடல்கள், அடுத்து A.R. ரகுமானின் இசை, அதுக்கடுத்து ஹாரிஸ் ஜெயராஜ், இப்ப யுவன் சங்கர் ராஜா. சங்கர் - கணேஷ், T. ராஜேந்தர், S.A. ராஜ்குமார் இவர்களின் இசையும் மனதை மயக்கின.

கண்ணதாசன் பாடல் வரிகளுக்குப் பின்னர் வைரமுத்துவின் வைர வரிகள், T. ராஜேந்தரின் வரிகள், பா.விஜய், முத்துக்குமார், இன்னைக்கு பாட்டெழுத நெறய பேர் இருக்காங்க.

வாய் விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப்போகும். வாழ்க்கைல சிரிக்கிறதுக்கு இன்னைக்கு இருக்க வாய்ப்புகள் ரொம்ப கம்மி. படங்கள்ல வர்ற காமெடி மக்களை சிரிக்க வைக்குது.

நல்ல கதையும், நல்ல காமெடியும், நல்ல இசையும் கலந்தா நிச்சயமா அது மிகப்பெரிய ஹிட். இது சரித்திரம். காமெடி படத்தோட வெற்றி ஒன்றி வரும்போது படத்தைப் பெரிய level-ல கொண்டு போகுது.

அந்த காலத்துல N.S. கிருஷ்ணன், அப்புறம் சந்திரபாபு, அதுக்கப்புறம் T.S.பாலையா, T.R. ராமச்சந்திரன், உசிலை மணி. நாகேஷ் காலத்துல காமெடி டிராக் படத்துக்கு அவசியமாயிருச்சு. குமரிமுத்து, என்னத்த கண்னையா, கல்லாபெட்டி சிங்காரம், லூஸ் மோகன், சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், MRR வாசு இவங்களும் சிரிக்க வைச்சாங்க. காமெடில நாகேஷ்க்கு அப்புறம் கொடிகட்டிப் பறந்ததது கவுண்டமணி-செந்தில் காம்பினேஷன் தான். அதுக்கப்புறம் விவேக், வைகைப் புயல் வடிவேல், வடிவேல் காமெடி தான் கவுண்டமணி-செந்திலுக்கு அப்புறம் டாப்.

கதாநாயகனே நகைச்சுவைல கலக்குனது ரஜினி மட்டும் தான். கமலஹாசனும் கல்யாணராமன், தெனாலி படங்கள்ல தூள் கிளப்பியிருப்பார்.

கரகாட்டக்காரன் படத்தோட மிகப்பெரிய வெற்றில காமெடியோட பங்கு அதிகம். அன்பே வாவின் வெற்றியிலும் நகைச்சுவையோட பங்கு கணிசமானது.

சந்திரமுகி படத்தோட வெற்றிய வரிசைப்படுத்தினா 1) ரஜினி 2) வடிவேல் காமெடி 3) ஜோதிகா. சந்திரமுகிக்கு அப்புறம் வந்த சிவாஜி பெரிய ஹிட் ஆகல. அதனால இப்ப ரஜினியோட குசேலன்ல வடிவேல் இருக்கார்.

ஆக பாடல்கள், நகைச்சுவை, மக்களை ரிலாக்ஸ் பண்ணுது. இது மறுக்க முடியாத உண்மை.

நகைச்சுவை நடிகைகள்ல நடிகர்கள் ஜொலிச்ச அளவுக்கு யாரும் பெரிய அளவுல வரலை.

மதுரம், மாதவி, சச்சு, ஆச்சி மனோராமா, கோவை சரளா இப்படி ரொம்ப சுருக்கமானவங்க தான். கோவை சரளாவுக்கப்புறம் காமெடி நடிகைகளே புதுசா வரலை.


முக்கியமானவங்க ஆச்சி மனோரமா. ஆயிரம் படங்களைத் தாண்டி அவங்க நகைச்சுவைல கொடிகட்டிப் பறந்த அளவுக்கு, குணச்சித்திர கேரக்டர்கள்லயும் வாழ்ந்து காட்டியிருக்காங்க.

வீட்ல Home theatre, VCD, Carல ஆடியோ, இரண்டு காதுலயும் வயர மாட்டிக்கிட்டு வாக்கிங் போகும்போது, சைக்கிள்ல போகும்போது, டூவீலர்ல போகும்போது, பாட்டு கேட்டுக்கிட்டு போறவங்க எண்ணிக்கை அதிகம். மக்கள் இசையை விரும்புறாங்க இது மிகப்பெரிய உண்மை.

காலர் டியூன், ஹலோ டியூன்னுன்னு செல்போன்ல பாருங்க, நீங்க ஒங்க மனசுக்குப் பிடிச்ச பாட்டை வச்சுக்கலாம். சினிமா பாட்டு மட்டுமல்ல, பக்திப்பாட்டும் தான். இசைமயம் நாடெங்கும்.

No comments: