Sunday, August 3, 2008

சினிமா தயாரிப்பாளர்கள்

இப்படி ஒரு இனம் இருக்கறத பத்தி இன்னைக்கு இருக்கற நடிகர், நடிகர், நடிகைகள் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்குன்னு தெரியல. இயக்குநருக்குள்ள மரியாதை தயாரிப்பாளருக்கு நிச்சயமா கிடையாது.

எம்.ஜ.ஆர், சிவாஜி மற்றும் அந்த காலத்து நடிகர்கள், தயாரிப்பாளருக்கு எந்திரிச்சு நின்னு வணக்கம் சொல்லுவாங்க. இப்ப அந்த மரியாதை கொடுக்கற நடிகர்கள் ஒரு சிலர் தான்.

சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் நிறைய இருந்திச்சி. பழங்கால நிறுவனங்கள்ல இன்னைக்கு AVM, சத்யஜோதி பிலிம்ஸ், கலைப்புலி தாணுன்னு இருக்காங்க. AVMல வருஷத்துக்கு ஒரு படம் 3 அல்லது 4 படம் பண்ணுவாங்க, சத்யஜோதில வருஷத்துக்கு ஒரு படம் கண்டிப்பா பண்ணுவாங்க, கலைப்புலி தாணுவும் அடுத்தடுத்து படம் பண்ணுவார். இன்னைக்கு பாருங்க AVMல 3 இல்ல 4 வருஷத்துக்கு ஒரு படம் பண்றாங்க. அதே மாதிரி தான் சத்யஜோதியும், தாணுவும்.

இன்னைக்கு இருக்க படைப்பாளிகளை நம்பி கஷ்டப்பட அவங்க விரும்பலை. Companyயோட அடையாளத்துக்காகத்தான் இவ்வளவு இடைவெளி விட்டு படம் பண்றாங்க.

நடுவுல பெரிய அளவுல நெறய படம் பண்ணிய நிறைய தயாரிப்பாளர்கள் fieldட விட்டே ஒதுங்கிட்டாங்க.

K.T.குஞ்சுமோன், சிவசக்தி பாண்டியன், காஜா மொய்தீன், திருடா திருடி கிருஷ்ணகாந்த், கஜினி சேலம் சந்திரசேகர், டைரக்டர் V.சேகர் இப்படி நெறய பேர் இருக்காங்க.

பழய திரைப்பட தயாரிப்பாளர்கள் படம் பண்ண தயங்குறாங்க. ஏன்னா, கதை கிடையாது, வெட்டி செலவு நெறய, குறிப்பிட்ட காலத்துல படத்தை முடிக்கிறது கிடையாது.

இப்போ சினிமா பண்ண வர்றாங்கன்னா, அதில சினிமாவ பத்தி அனுபவம் இல்லாதவங்கதான் கிட்டத்தட்ட முழுசும். தயாரிப்பாளர் புது டைரக்டர் ஒருத்தர்கிட்ட மாட்டுவான். ஒண்ணும் இல்லாத கதைய ஆஹா ஓஹோன்னு சொல்லி படமெடுக்க வச்சிருவார். தயாரிப்பாளரை சகல விதத்திலயும் கவனிச்சிருவாங்க. தயாரிப்பாளரும் மெய்மறந்து போய் காசை மட்டும் அள்ள\ளிக் கொட்டிக்கிட்டேயிருப்பார். மொதல்ல 1 கோடில முடிச்சிரலாம்பாங்க. அப்புறம் அந்தா இந்தான்னு 2, 3 கோடில கொண்டு வந்து விட்ருவாங்க. இதுல உண்மைல படத்துக்கு ஆன செலவு பாதிதான் இருக்கும். மீதிய ஒரு கூட்டமே பங்கு போட்டுருவாங்க.

படம் முடிஞ்சவுடனே பிஸினஸ் ஆகாது. சொந்தமா ரிலீஸ் பண்ணுவாங்க. பெட்டி 2 நாள்ல திரும்பி வந்துரும். இதான் அதிகமாக நடக்குது.

படம் தயாரிக்கிற ஆசைல இன்னொரு குரூப் 50 லட்சத்தை மட்டும் வச்சு ஆரம்பிச்சு, கடன் வாங்கி படம் எடுக்க, படம் Slowவா வளரும். கடைசில ஒன்னும் செய்ய முடியாம படம் டிராப் ஆயிரும்.

சினிமா தயாரிக்க வர்றவங்க சினிமாவ பத்தி நல்லா தெரிஞ்சி, கதை அறிவோட, வெட்டி செலவுக்கு வாய்ப்பு கொடுக்காம வந்தா நல்லா இருக்கும்.

சூப்பர்குட் பிலிம்ஸ் சவுத்ரி வரிசையா படம் பண்ணிக்கிட்டிருந்தார். அவரும் தயாரிப்பைக் குறைச்சுட்டார். சூர்யா மூவிஸ் A.M.ரத்னம் வரிசையா படம் பண்ணிக்கிட்டிருந்தார். அவரும் பீமாவுக்கு அப்புறம் சத்தமில்லாம இருக்கார். AASCAR ரவிச்சந்திரன் தான் இப்போதைக்கு தொடர்ச்சியா பண்ணிக்கிட்டிருக்கார்.

SAIMIRA இப்பதான் தயாரிப்புல எறங்குறாங்க. இன்னும் 2 வருஷம் கழிச்சுதான் அதைப்பத்தி சொல்ல முடியும்.

No comments: