Sunday, August 17, 2008

குற்றாலம் மூணார் டிப்ஸ்

குற்றாலம் போறவுக குற்றாலத்தோட குளியல் முடிஞ்சுச்சுன்னு நெனக்காதீக. குற்றாலத்திலிருந்து செங்கோட்டை போய் கேரளாவுக்குள்ள போங்க. ஆரியங்காவு அய்யப்பன கும்பிட்டு, கொஞ்சம் தள்ளி போனா லெப்ட்ல பாலருவின்னு போட்ருப்பாங்க. கேரள வனத்துறை கட்டுப்பாட்டுல உள்ள இடம். காலை 7.30 லிருந்து சாயங்காலம் 5 மணி வரை உள்ள அனுமதிப்பாங்க.

அதுக்கப்புறம் தென்மலை. அங்க போட்டிங் போகலாம். 1 மணி நேரம் போட்டிங் கூப்பிட்டு போவாங்க. கேரளா அரசு தென்மலையை ஒரு சுற்றுலாத்தலமா டெவலப் பண்ணிக்கிட்டு இருக்கு.


மூணாறு போறவுக இத மட்டும் கேட்டுக்குங்க. மூணார்ல இருந்து ஊருக்கு திரும்புறீகள்ல, அப்ப சாயங்காலம் 4 மணிக்கு கிளம்புங்க. மலைல இருந்து இறங்க, உடுமலைப்பேட்டை பாதை இருக்கு. அந்தப்பாதைல வந்தா மறையூர்னு ஒரு ஊர் வரும். அங்க இருந்து 6 மணிக்கு கௌம்புனா, 15 கிலோமீட்டர் தூரத்துக்கு வனத்துறையின் காடு. காட்டு மிருகங்கள் உலாவுற நேரம். மான்கள் கூட்டம் கூட்டமா திரியும். யானைக்கூட்டம் பாக்க கண்டிப்பா சான்ஸ் இருக்கு. நீங்க மச்சக்காரங்கன்னு வச்சுக்கங்க, யானையை நீங்க போற ரோட்லயே நேருக்கு நேரா சந்திக்கலாம்.

No comments: