இப்பவும் சினிமா பைனான்சியர்கள் இருக்காங்க. ஆனா மிக குறைந்த அளவுலதான். கைல காசே இல்லாம பைனான்சியர்கிட்ட கடன் வாங்கி குறிப்பிட்ட காலத்துக்குள்ள லாபமும் பாத்துக்கிட்டு வந்தாங்க ஒரு காலத்துல.
இப்ப பல்வேறு காரணங்களால படத்த குறிப்பிட்ட காலத்துக்குள்ள முடிக்க முடியறதில்லை. மொதல்ல படத்தை அடமானம் எழுதி வாங்கிட்டு பணம் குடுத்த பைனான்சியர் இப்ப படம் எடுக்கிறவங்க கிட்ட ஏதாவது சொத்து இருந்தாஅத எழுதி வாங்கிட்டு பணம் குடுக்கிறாங்க.
இப்ப சூழ்நிலை. கைல முழுசா காச வச்சிருந்தா தான் படம் எடுக்க முடியும். படத்தை முடிச்சு ரிலீஸ் பண்ணவும் முடியும். அதேபோல பட விநியோகஸ்தகர்கள். அவங்களும் நெறயப்பேர் படம் விநியோகிக்கிறதை நிப்பாட்டிட்டு அவங்க தொழில பாத்துகிட்டு இருக்காங்க.
ஒரு காலத்துல திரைப்படங்கள் ஓடி, படத் தயாரிப்பாளர் விநியோகஸ்தர் திரையரங்கு உரிமையாளர் எல்லோருக்கும் லாபத்தை சம்பாதிச்சு கொடுத்தாச்சு.
எவ்வளவு நாளைக்கு படத்தை வாங்கி விநியோகம் பண்ணி நஷ்டப்பட முடியும்? விநியோகம் பண்றவங்க ரொம்ப கம்மி.
இப்பல்லாம் அதிக படங்கள் நேரடி ரிலீஸ் தான். தயாரிப்பாளரே நேரடியா திரையரங்குகளில் ரிலீஸ் பண்றாங்க.
Sunday, August 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment