Sunday, August 17, 2008

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்

ஒருகாலத்துல ஓஹோன்னு இருந்த அரசு போக்குவரத்து இப்ப ஐசியூக்கு போற ஸ்டேஜ்ல இருக்கு.

பல்வேறு தனியார் பஸ் கம்பெனிகளை இணைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகமாக சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் என்று கலைஞர் கருணாநிதியால் ஆரம்பிக்கப்பட்ட அரசு போக்குவரத்துக் கழகம், இன்று தடம் மாறி தடுமாறிக் கொண்டிருக்கிறது.

தேசிய அளவில் பல பரிசுகளை அள்ளிக் குவித்தன தமிழக போக்குவரத்து கார்ப்பரேஷன்கள். பிஆர்சி, கேடிசி, பல்லவன் கழகங்கள் இசைக்குழு வைத்திருந்தன. இசைக்குழுக்கென தனி பஸ். மற்ற இசைக்குழுக்களை விட கார்ப்பரேசன் இசைக்குழுக்கள் இசை நிகழ்ச்சிகள் நடத்த நாடப்பட்டன. இன்று இசைக்குழுக்களே இல்லை.

தமிழகம் முழுக்க 160 கிளைகளுக்கு குறையாமல் இருக்கும் TNSTC-யில் ஒரு கிளைக்கு குறைந்தது 10 பஸ்கள் ஸ்பேர் பார்ட்ஸ் இல்லாமல் ஓடாமல் இருக்கின்றன. ஒரு நாளைக்கு 1600 பஸ்கள் ஓடாததினால் அரசுக்கு இழப்பு எவ்வளவு?

1998க்கப்புறம் கிளைகளில் டெக்னிக்கல் ஸ்டாப் (TM) எனப்படும் பஸ் மெயின்டனன்ஸ் ஊழியர்கள் நியமனம் செய்யப்பட வில்லை.
முனியப்பன் நண்பர் டாக்டர் X இடம் ஒரு TNSTC யின் ஓட்டுநர் லீவ் சர்டிபிகேட்டுக்காக வந்தார். பொய் லீவு இல்லை. உண்மையான லீவு. காரணம் பணியில் ஸ்டீயரிங் வீல் ஒடிக்கும் போது ரிடர்ன் ஆகி அவர் கையில் வேகமாக அடிக்க BOTH BONE FRACTURE FORE ARM, இது வண்டிகளின் சிறப்பான பராமரிப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு.

புறநகர் ஓட்டுநர்கள், பணி நேரம் குறைந்தது 14 மணிநேரம், 20 மணி நேரம் பஸ் ஓட்ட பணிக்கப்படும் வழித்தடங்களும் உள்ளன. எவ்வளவு சிரமம் பாருங்க. தொடர்ச்சியா ஒரு ஓட்டுநர் தனி ஆளா, 20 மணி நேரம் இடைவெளி இல்லாமல் பஸ் ஓட்டுறது, அந்த ஓட்டுநருக்கு எவ்வளவு சிரமத்தைக் கொடுக்கும்? Crude Oil உலக சந்தையில் 1 பேரல் 40 டாலருக்கு விற்கப்பட்ட போது நிர்ணயம் பண்ணப்பட்ட பயணக்கட்டணம் தான், இன்று Crude Oil 1 பேரல் 140 டாலர் விற்கும் போதும் அதே கட்டணம் தான். பஸ் பயணக் கட்டணத்தை கூட்டனும்ல, நீங்க சொல்றது புரியுது.

பஸ் கட்டணத்தைக் கூட்டினா, தேர்தல்ல ஓட்டு விழுகாது, ஆட்சிக்கு வரமுடியாதுல்ல. இது அரசியல். பஸ் கட்டணத்தைப் பல மடங்கு கூட்ட வேணாம். ஒரு 5 பர்செண்ட், 100 ரூபாய்னா 105 ரூபாய். இப்படி கூட்டினா அது அரசு பேருந்துகளை நம்பி இருக்கும் ஏழை, எளியோரை நிச்சயம் பாதிக்காது. இலவச பஸ் பாஸ் எல்லாம் ரத்து செய்ய வேணாம். ஏன்னா அந்த திட்டங்களால பயனடைபவர்கள் மிக அதிகம்.

பஸ் கட்டணத்தை யாரையும் பாதிக்காத அளவுக்கு மிகச்சிறிதளவு உயர்த்தினால், தற்போது தமிழகம் முழுதும் ஓடாமல் நிற்கும் 1000க்கும் அதிகமான பேருந்துகள் ஓடும், பராமரிக்கப்படும், பொதுமக்கள் பயனடைவார்கள். TNSTCயும் லாபத்தில் இயங்கும், புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படும், தமிழகத்தின் வளர்ச்சி இன்னும் நன்றாக இருக்கும்.

No comments: