Wednesday, September 3, 2008

சசிதரன் நாயர்

பேரை படிச்சவுடனே சொல்லிருவீங்க. இவர் மலையாளத்துக்காரன்னு கேரளாக்காரராயிருந்தாலும் இவர் படிச்சது சமஸ்கிருதம். சுமஸ்கிருத பேராசியரா துறைத் தலைவரா மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி இப்ப பணி மூப்படைந்துவிட்டார்.

இவர் மகனும் ஐ.ஏ.எஸ் மருமகளும் ஐ.ஏ.எஸ். ரெண்டு பேரும் டெல்லில பணியில் இருக்காங்க. இவர் மகள் கொச்சி பல்கலைக் கழகத்திலும் மருமகன் கொச்சி ஷிப்யார்டிலும் பணியில் இருக்காங்க.

ர்ட்டயர் ஆனவுடனே மகள் கூடயோ மகன் கூடயோ இல்ல சொந்த ஊரிலோ செட்டில் ஆக வேண்டியது தானே முறை முடியாதுங்கிறார்.

காரணம் மதுரையில் உள்ள அவர் சொந்த வீடு. தனக்கான வீட்டை அங்குலம் அங்குலமாக ரசித்துக் கட்டினார் சசிதரன் நாயர். ஆசையாய் கட்டின வீட்டை பிரிய எப்படி மனசு வரும் அவர் வீட்டை 87லட்சம் ரூபாய்க்கு விலைக்கு கேட்டாங்க. முடியாதுன்னுட்டார். அந்த வீட்டிலேயே கடைசி வரை இருக்க வேண்டும் என்பது அவர் விருப்பம். அவர் அணு அணுவாய் ரசித்து கட்டிய வீட்டின் மேல் அவருக்குள்ள காதலை பாராட்ட வேண்டியதுதானே இயல்பு.

No comments: