Wednesday, September 3, 2008

ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டில்

மாட்டினா, தப்பிக்க முடியாது, இது பழமொழி.

மதுரை டாக்டர் எக்ஸ்கிட்ட தவறான உறவு கொண்டவுடன் ஊசி போட வருபவர்கள் சிலர். பாதுகாப்புக்காக ஊசி போடுறாங்களாம்.

அப்படி மாட்டுன 2 பேர் 1) டாக்டர் எக்ஸ்சின் மிக நெருங்கிய உறவினர் ஒரு உயர் போலீஸ் அதிகாரி. அவருடைய மருமகன் ஒரு காவல்துறை எஸ்.ஐ. அவர் இந்த மாதிரி தவறு செய்துவிட்டு டாக்டர் இன்னாரென்று தெரியாமல் ஊசி போட எக்ஸ்சிடம் வந்தார்.

2) டாக்டர் எக்ஸ்சின் தங்கச்சி மாப்பிள்ளையின் அத்தை மகனும் இதேபோல் டாக்டர் அடையாளம் தெரியாமல் இதே போல் தவறிழைத்து விட்டு ஊசிபோட வந்தார்.

பாலியல் தவறிழைப்பது மனித இயற்கை அதை செஞ்சுட்டு வந்து பாதுகாப்பு வேணுமாம் அதுக்கு ஊசியாம், நல்லாருக்கும்மா ?. அதுவும் முன்னபின்ன டாக்டர்கிட்ட தான் போய் ஊசிபோடுவாங்க, நம்மளை யார்னு தெரியாதுன்னு டாக்டர் எக்ஸ்கிட்ட ஊசிபோட்டு மாட்டுனவங்கதான் இவங்க ரெண்டு பேரும்.

No comments: