Wednesday, September 3, 2008

நீதியரசர் ஸ்ரீனிவாஸன்

நீதிபதியுடைய கடமை நியாயமான தீர்ப்பை சொல்வது. ஒரு மேற்கொளை எடுத்துக்காட்டி தீப்பு சொல்பவர்கள் மிக அரிது. இவருடைய தீர்ப்பு பரபரப்பான தீப்பு. அதை இந்த பக்கத்தின் கடைசியில் சொல்கிறேன்.

அதற்கு முன் இவரைப் பற்றி சில வரிகள் ஆச்சாரமான பிராமண குடும்பம். நீதிமன்றத்துக்கு வரும் போது குடிக்க வெள்ளி கூஜாவில் தண்ணீர் கொண்டு வருவார். தலையில் டர்பன். மிகவும் எளிமையானவர் நேர்மையானவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து பின்னர் பதவி உயர்வில் இமாச்சல பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியானார்.

இவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக இருந்த போது இவர் தீப்பளித்த வழக்குதான் பிரபலமான கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே வழக்கு.

கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கூடுதல் தளங்களை கட்டியதாக பிளசன்ட் ஸ்டே ஓட்டல் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்த போது விதிமுறைகளை மீறி கட்டிய தளங்களை இடிக்கச் சொல்லி உத்தரவிட்ட நீதிபதி நீதியரசர் ஸ்ரீனிவாஸன்.

தீர்ப்பில் கூடுதல் தளம் கட்ட அனுமதி வழங்கிய ஆட்சியாளர்களுக்கு திருக்குறளை மேற்கோள் காட்டி நீதிபதி கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த ஓட்டல் வழக்கின் தீர்ப்பின் எதிரொலிதான் தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவம். ஆளும்கட்சியாளர்களின் அராஜகத்துக்கு பலியான 3 விவசாய கல்லூரி மாணவிகள் எப்படி துடித்திருப்பார்கள்.

அன்றைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா.
இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்.

குறைகளைச் சுட்டிக் காட்டக் கூடியவர்கள் இல்லாவிட்டால் எப்பேர்ப்பட்ட மன்னனும் கெடுக்கக் கூடியவர்கள் இல்லாவிட்டாலும் தானே கெட்டுப்போவான் நியாயமான மேற்கொள். அதுவும் செல்வி ஜெயலலிதாவின் குறைகளைச் சுட்டிக் காட்டக் கூடியவர்கள் இல்லை என்று தன்னுடைய தீர்ப்பில் கூறியிருந்தார் நீதியரசர் ஸ்ரீனிவாசன்.

முதலமைச்சர் பதவியில் இருப்பவரை விமர்சிப்பது மிகப் பெரிய விஷயம். அதுவும் அவர் செய்த தவறுக்கு தலைமைப் பதிவியில் இருப்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று கூறுவது நீதிபதியின் சிறப்பை காண்பிக்கிறது.

No comments: