Wednesday, September 3, 2008

பில்லி சுனியம் செய்வினை

நம்ம தமிழனுக்கு உள்ள மோசமான குணம் தனக்கு பிடிக்காத ஆளை எப்படியும் கெடுக்கணும் கவுத்தனும்கிற மனப்பான்மை தனக்கு ரெண்டு கண்ணு போனாலும் பரவாயில்லை. எதிரிக்கு ஒரு கண்ணாவது போகணும்கிறது அவங்களோட விருப்பம்

பில்லி சுனியம் செய்வினை எல்லாம் அடுத்தவனை கெடுக்கிறதுக்காக வைக்கிறது. இது அமானுஷ்ய விஷயம்கிறாங்க. மனித சக்திக்கு அப்பாற்பட்டதுன்னு எடுத்துக்குங்க. ஒருத்தனோட ஜாதகக் கட்டத்தில 5ம்
பாகமும் 9ம் பாகமும் பலவீனமா இருந்தா பில்லி சுனியம் வேலை செய்யும்கிறாங்க 5ம் பாகமும் 9ம் பாதமும் நல்லா இருந்தாலும் தசாபுத்தி மோசமா இருந்தா பில்லி சுனியம் பலிக்குமாம்.

பில்லி சுனியத்தின் ஆப்ரிக்க கண்டத்து அடிப்படை ஊடூ எனப்படுகிறது. கறுப்பு மாந்தீரிகம் எனப்படும் பிரபலமான ஆப்ரிக்க பில்லி சுன்யம் ஊடூவை அடிப்படையாக கொண்டது.

செய்வினை வச்ச வீட்ல எதாவது ஒரு பக்கம் கைய காட்டி அந்த எடத்த தோண்டுவாங்க. அந்த எடத்துல ஒரு தகடு இருக்கும். இதை மோசடி மாந்திரீகம்கிறாங்க.

பில்லி சுனியம் செய்வினை வைக்கிறதுக்கும் ஆள் இருக்காங்க வச்சத எடுக்கிறதுக்கும் ஆள் இருக்காங்க.

பில்லி சுனியம் செய்வினை நீக்கிறதுக்குன்னே தெய்வீக திருத்தலங்கள் (கோயில்கள்) 3 இருக்கு அங்க போய் சாமிய தரிசனம் பண்ணிட்டு வந்தாலே தெய்வீக நிவாரணம் உறுதி.அந்த தலங்கள் 1) திருச்சி அருகே உள்ள குணசீலம் ஊரில் உள்ள பெருமாள் ஸ்ரீனிவாசன் 2) வேலூர் மாவட்டம் அரக்கோணத்திற்கு அருகில் உள்ள சோளிங்கர் ஊரில் உள்ள மலையில் வீற்றிருக்கும் பெருமாள்-யோகநரசிம்மர் 3). கேரள மாநிலம் சோட்டாணிக்கரை பகவதி அம்மன்.

No comments: